Skip to main content

ஒரே நேரத்தில் 40 நூல்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த தமிழ் எழுத்தாளர்! 

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

World record holder for publishing 40 tamil books simultaneously

 

ஒரே நேரத்தில் தான் எழுதிய 40 நூல்களை வெளியிட்டு, உலக சாதனை நூலான ’யூனிவர்சல் அச்சீவ்மெண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பிடித்திருப்பவர் முனைவர் மரியதெரசா. இவர் ரங்கசாமி கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பட்டம் பெற்ற மும்மொழிப் புலமை கொண்டவர். அண்மையில் அவரது புலமையைப் பாராட்டி தமிழக அரசு ‘தமிழ் மாமணி’ விருதை வழங்கியிருக்கிறது. அவரை நாம் சந்தித்தபோது...

 

உங்களைப் பற்றி?

எனக்கு இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளார்கள். என் தாயின் பெயர் பிளான்ஷேத் அம்மையார். தந்தையின் பெயர் ரொபேர் சேழான். எனது தாயார் சிறந்த கவிஞர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது படைப்புகளை எனது சகோதரன் ‘காரைமகள் கவிதைகள்’ எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார். காரைமைந்தன் எனும் புனைபெயரில் எனது சகோதரனும் கவிஞராக வலம்வருபவர்.

 

உங்கள் நூல்களை யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா?

 

எனது கவிதை நூல்களை இதுவரை பதினெட்டு மாணவர்கள் பி.எச்.டி. மற்றும் எம்.பில் படிப்பிற்கான ஆய்வு நூலாக ஏற்றுக்கொண்டு பட்டம் பெற்றுள்ளனர். இது எனது எழுத்துக்கும், எனக்கும் கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். எனது கவிதைகள், 2017 நவம்பரி 16இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நான்காம் உலகப் பொருளாதார மாநாட்டில், வேந்தன் டா.விஸ்வநாதன் அவர்களால் எனது 10 நூல்கள் வெளியிடப்பட்டதையும் எனது அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

 

உங்கள் கவிதைகள் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் போய்ச் சேர்ந்திருக்கிறதா?

பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி இளங்கலைப் பாடத்திட்டத்தில் எனது ஹைக்கூ இடம்பெற்றுள்ளது. கேரளாவில் பனிரெண்டாம் வகுப்பு தமிழ் மேனிலை ஆசிரியர் பனுவலில் எனது கவிதை இடம்பெற்றுள்ளது. இவற்றின் மூலம் மாணவர்களிடம் என் எழுத்துக்கள் சேர்ந்துகொண்டிருக்கின்றன.

 

நீங்கள் வெளியிட்ட முதல் நூல் எது?

நான் 1998 இல் ’நிழல் தேடும் மரங்கள்’ எனும் தலைப்பில் புதுக்கவிதை நூலினை வெளியிட்டேன். அந்த நேரத்தில் எழுத்துலகில் பலர் பல நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து எனக்கும் ஒரு ஆசை வந்தது. அதைத் தொடர்ந்து எனது 40 நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டு சாதனை படைத்தேன். அந்த சாதனையை 100 நூல்களை வெளியிட்டு நானே முறியடிக்கப் போகிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

முதலில் 50 நூல்களை வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். இந்த கொரோனா காலம் எனக்குக் கொடுத்த அவகாசத்தைப் பயன்படுத்தி, நூலின் எண்ணிக்கையை 100 ஆக மாற்றிக்கொண்டேன் அதற்காகக் கடுமையாக உழைத்தேன். இந்த நூறு நூல்களையும் வடிவமைத்து பதிப்பித்து வருகிறார் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் மணிஎழிலன்.

 

நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி?

கவியருவி, கவிமதி, தமிழருவி, கவிக்குயில், எழுத்து வித்தகர் என கிட்டத்தட்ட நூற்றி முப்பத்தி இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளேன். இவற்றை என் எழுத்துக்கும், உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். சமீபத்தில் எனது எழுத்துப்பணியைப் பாராட்டி தமிழ் வளர்ச்சித்துறையினரால் 2020ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருதைப் பெற்றிருக்கிறேன். அனைவரது பாராட்டும், வாழ்த்துகளும் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வாக உணர்கிறேன்.

 

World record holder for publishing 40 tamil books simultaneously

 

இலக்கியத்தின் பல தளத்திலும் எப்படி பயணிக்கிறீர்கள்?

எல்லாவற்றிற்கும் ஆர்வம்தான் காரணம். நான் மரபு, புதுக்கவிதை, சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, லிமரைக்கூ, மோனைக்கூ, எதுகைக்கூ, ஆன்மீகம், மூன்றியோ, நாவல், மொழியாக்கம், சென்ரியு, முரண்கூ, போதனைக்கூ, பழமொன்ரியு, ஹைபுன் என கால்பதித்த தளங்கள் ஏராளம். இவற்றில் பெரும்பாலான வகையில் பெண் கவிஞர்களில் நான் மட்டுமே நூல் வெளியிட்டுள்ளேன்.

 

தமிழ் இலக்கியத்தில் மோனைக்கூ, எதுகைக்கூ, மூன்றியோ, முரண்கூ, போதனைக்கூ போன்றவைகள் முதன்முதலில் நூல் வடிவமாக பெற்றது எனது எழுத்துக்களில்தான்.

 

மேலும், ஒரு வரி கவிதைகளில் ‘மனம் நடுவிழா’என்ற நூலும், இருவரியில் குறள்கூ நூலாக ‘நாட்டிய நடவுகள்’ என்ற நூலும், மூன்று வரிகளில் ஹைக்கூ, முரண்கூ, சென்ரியு, போதனைக்கூ, எதுகைக்கூ, மோனைக் கூவில் சில நூல்களும், நான்கு வரிகளில் தன்முனைக் கவிதை நூலும், ஐந்து வரிகளில் குறும்பா நூலும், அறுசீர் விருத்தத்தில் ‘எழுத்துப் பல்லக்கு’ நூலும், எழுசீர் விருத்தத்தில் ‘மொட்டு விட்ட தென்றல்’ நூலும், எண் சீர் விருத்தத்தில் ‘புல்லாங்குழலில் புகுந்த காற்று’, ‘சொற்சுகம்’ போன்ற நூலும், மேலும் ஒரு பொருளுக்கு ஒன்பது வகைமைகளில் கவிதை யாத்து ‘ஒன்பது வாசல்’ என்ற நூலும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

 

எந்த நோக்கத்தோடு எழுதுகிறீர்கள்?

சமுதாய அநீதிகளைக் கண்டு மனம் கொதித்துப்போகிறேன். துப்பாக்கி ஏந்தி சமூக விரோதிகளைச் சுட்டு வீழ்த்த இயலாது.

 

அதனால் என் எழுதுகோலை ஆயுதமாக்குகிறேன். ‘துளிர் விடும் நேரம்’ எனும் தலைப்பில் வர இருக்கும் நூல் முழுக்க முழுக்க இளைய சமுதாயத்திற்கு எழுச்சி ஊட்டுவதாக அமைந்துள்ளது.

 

நான் இளைய சமுதாயத்தை நம்பியிருக்கிறேன். இந்நேர்காணல் மூலம் கரம் கூப்பி ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். நாளைய சமுதாயத்தில் மனிதர்கள் வாழட்டும்; சாதிகள் ஒழியட்டும். ஊழல்கள் வேரறுக்கப்படட்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வழி செய்யுங்கள். அன்பால் மனிதனை ஆளுங்கள். மனிதநேயம் எங்கும் ஒளிரட்டும்.

 

சந்திப்பு: மணி எழிலன்

 

 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.