Skip to main content

பெரியாரின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர்... பின் காங்கிரசில் இணைந்தவர்...  

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

பிப்ரவரி 23 – சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் மறைந்த நாள் 

ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
 

EVK Sampath


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார். குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.

தமிழ்செய்தி, ஜெயபேரிகை என்கிற தினசரி செய்தித்தாள்களையும், அலைகள் என்கிற பெயரில் வார இதழையும் நடத்திவந்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். பத்திரிகை செலவு, கட்சி செலவுகளால் பெரும் நட்டத்துக்கு உள்ளானதால் பிற்காலத்தில் அவைகளை நிறுத்தினார். மேடை பேச்சுகளில் தமிழ் வார்த்தைகள் அருவியாய் கொட்டும். அதன்பொருட்டே அவரை சொல்லின் செல்வர் என அழைத்தனர்.

பெரியார் – மணியம்மை திருமணம் சம்பத் தான் பெரியாரின் வாரிசு என்கிற கருத்தை நொறுக்கிவிட்டது. இயக்கத்தின் பெரும்பான்மை தளபதிகள் பெரியாரின் முடிவால் இயக்கத்தில் இருந்து விலகினர். பெரியாரின் மூத்த தளபதியான அண்ணாவின் பின்னால் பெரியாரின் வாரிசு என நம்பப்பட்ட சம்பத் உட்பட அனைவரும் சென்றனர்.
 

Kamaraj ECKS MGR


 

திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. பெரியாருக்கு அடுத்த இடத்தில் சம்பத் இருந்தார். படித்தவர், அனுபவசாலி, சிந்தனையாளர், சட்டதிட்டங்கள் வடிவமைப்பதில் வல்லவர், இளைஞர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் மிக்கவர். 1957ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாகி டெல்லி சென்றார். டெல்லி அவரது கொள்கையை மட்டுமல்ல அவரையே மாற்றியது. திராவிட நாடு கொள்கையை தீவிரமாக ஆதரித்துப் பேசிய சம்பத், படிப்படியாக அதை பேசுவதை தவிர்த்தார். இதனை அறிந்த திமுக தலைவர்கள் திமுகவை விட்டு விலகுகிறார் என்பதை அறிந்தனர்.

 

EVKS Ilangovan
 

அதோடு, கட்சியில் சம்பத் – கருணாநிதி ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாகின. அந்த குழு மோதலால் கருணாநிதியை நசுக்க எவ்வளவோ முயன்றார் சம்பத், அதில் தோல்விகளை சந்தித்தார். இதனால் திமுகவில் நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது, தன்னை மதிக்கவில்லை என குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு அண்ணாவுடன் சண்டை போட்டுக்கொண்டு திமுகவில் இருந்து  விலகுவதாக 1961 ஏப்ரல் 9ந்தேதி சம்பத்  அறிவித்தார். உடனடியாக தமிழ் தேசிய கட்சி என்கிற கட்சியை தொடங்கி நடத்தினார். அதற்கு பெரியார், பாரதிதாசன் போன்றோர் பெரும் ஆதரவு தெரிவித்தனர். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் தனிக்கட்சி சரியாக வராது என காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார், தோல்வி தான் கிடைத்தது.

 

Iniyan Sampath
 

இவரது மனைவி சுலோசனாசம்பத். இவர்களுக்கு 1946ல் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இளங்கோவன், இனியன் என இரண்டு பிள்ளைகள். அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் நீண்டகாலம் இருந்தவர் சுலோசனாசம்பத். அவர்களது மகன்களில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர், அதிரடி கருத்தாளர், மத்திய இணையமைச்சர் பதவி வகித்தவர். இனியன் சம்பத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளில் இருந்தவர் பின்னர் பழ.நெடுமாறன் கட்சியில் இருந்தார், பின்னர் தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்.

 

தனது 51வது வயதில் அதாவது 23.2.1977ல் மறைந்தார் ஈ.வி.கே.சம்பத்.

 

 

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.