Skip to main content

இளமைத் திருமணம்

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

பண்டைய காலங்களில் இளம்பருவத்திலேயே ஆண்- பெண்ணிற்குத் திருமணம் செய்வது முக்கிய கடமையாகக் கருதப்பட்டது. சொந்தங்கள் விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக, குழந்தைகள் பிறந்தவுடனேயே "இவள் என் மருமகள்; இவன் என் மருமகன்' என பேசி வைத்துக்கொண்டனர். வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். ஏனெனில் ஒரு பெண் ருதுவானபிறகு அவளை கன்னிகாதானம் செய்வது தவறு என கருதினார்கள். இம்மாதிரியான திருமணத்தால் பெண்ணிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஆணுக்கு மறுமணம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் ஆணுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்பட்டதால், அவளுக்கு இல்வாழ்க்கை சுகம் என்பதே இல்லாமல் போனது. இதற்கு இனங்களும் மதங்களும் காரணம் காட்டப்பட்டன. காலங்கள் மாற மாற அரசாங்கமே இளமைத் திருமணத்திற்குத் தடை விதித்தது.

 

god



ஆணுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்ணுக்கு 18 வயதுக்கு மேலும்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற சட்டம் வகுக்கப்பட்டது. எல்லா மதங்களிலும் இந்த முறையையே கடைப்பிடிக்கவேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆனால் இந்த சட்டதிட்டத்தை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான். நடைமுறையில் இன்றும் 14, 15 வயதுகளிலும், ஆங்காங்கே வயது மறைக்கப்பட்டு ரகசியமாகத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மேலை நாடுகளில் வாழும் மக்கள் இளம்வயதில் திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும், அவர்களின் கலாச்சாரப்படி உடல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத் தயங்குவதில்லை.

 

god



நமது கலாச்சாரத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் திருமணங்கள் செய்வதில்லை. சரியான வயதில் திருமணம் செய்தால் போதும் என்ற நடைமுறைக்கு வந்துவிட்டனர்.தக்கவயதில் திருமணம் நடைபெறுவதற்கு ஜோதிடரீதியாக கிரகங்கள் பலம்பெற்று அமைந்திருப்பதே காரணம். திருமணத்திற்குரிய 7-ஆம் வீடும், களத்திரகாரகன் சுக்கிரனும், குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீடும் முக்கிய பங்கு வகிக்கின்றன. லக்னாதிபதியும் 2, 7-ஆம் வீட்டின் அதிபதிகளுடன் பலம் பெற்று அமைந்தாலும் இளம்வயதில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

நவகிரகங்களில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர்சேர்க்கைப் பெற்ற புதன் போன்றவை 7-ஆம் வீட்டில் அமையப்பெற்றாலும், 7-ஆம் அதிபதி சுபகிரகச் சேர்க்கைப் பெற்று, அச்சுபகிரகங்களின் தசாபுக்தி திருமணவயதில் நடைபெற்றாலும் இளமையிலே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 7-ஆம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்குச் செவ்வாயும், சுபகிரகச் சேர்க்கை, பார்வை பெற்றாலும், சுபகிரக நட்சத்திரத்தில் அமையப்பெற்றாலும் இளம்வயதில் திருமணம் நடக்கும். சுபகிரகங்களில் முக்கிய கிரகமான குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வார். சுபகிரகமாகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிற்கோ, 2-ஆம் அதிபதிக்கோ, ஆண்களுக்கு சுக்கிரனுக்கோ, பெண்களுக்குச் செவ்வாய்க்கோ இருக்குமேயானால் தக்கவயதில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.

 

murugan



திருமண வயதை அடைந்த ஆண்- பெண் இருவருக்கும் இளம்வயதில் பாவகிரகங்களின் தசை நடைபெற்றாலும், சுக்கிரனின் புக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தியோ நடைபெற்றாலும் தக்க வயதில் திருமணம் கைகூடும்.ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ 2, 7-ல் பாவிகள் அமைந்து, அதன் தசாபுக்திகள் திருமணத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் காலங்களில் நடைபெற்றால், திருமணம் கைகூட இடையூறுகள் ஏற்படும்.

ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிலர் திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் 2, 7-ஆம் பாவங்கள் சிறப்பாக இருந்தால் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருமணம் செய்யலாம். படிப்பு, பொருளாதார நிலை, உடன்பிறப்புகளின் நிலை ஆகிய காரணங்களுக்காக திருமண முயற்சிகளைத் தள்ளி வைப்பதென்றால், அந்த வரனுக்கு 2, 7-ல் பாவ கிரகங்கள் அமைந்து, அதன் தசை மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் வருமென்றால், அந்த தசை வருவதற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்துவைத்துவிட்டு, அதற்குள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.