Skip to main content

வாழ்வை வசந்தமாக்கும் வன்னிமர வழிபாடு!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

வன்னி மரத்தை வட இந்தியாவில் "ஷமி விருக்ஷம்' என்பார்கள். சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு இந்த மரத்தை அனைவரும் வழிபடவேண்டும். ஒருவருக்கு சனி தசை நடக்கும்போது, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்தால், அந்த நேரத்தில் பலவிதமான சிக்கல்கள் உண்டாகும். கோட்சார குருவும் சரியில்லையென்றால், அந்த மனிதர் தான் வாழும் இடத்தைவிட்டு வெளியேற வேண்டியதிருக்கும். இதுபோன்ற சமயத்தில் வன்னி மரத்தை வழிபட்டால், அந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம். ஒரு ஜாதகத்தில் சனி லக்னத்தில் இருந்து, அதற்கு 7-ஆம் பாவத்தில் பாவகிரகம் இருந்தால் அல்லது 7-க்கு அதிபதி 6, 8-ல் இருந்தால், அவருக்கு திருமணத்தடை உண்டாகும். திருமணம் தள்ளித்தள்ளி போய்க்கொண்டிருக்கும்.
 

vijayadhasami

ஒருவரின் ஜாதகத்தில் 4-க்கு அதிபதி நீசமடைந்து அல்லது பலவீனமாக இருந்து, 10-க்கு அதிபதி 6, 8-ல் அல்லது அஸ்தமனமாக இருந்தாலும் அல்லது நீசமடைந்தாலும் அந்த மனிதர் கடுமையாக உழைத்தாலும், கிடைக்கவேண்டிய பலன் இறுதி நேரத்தில் கிடைக்காமல் போய்விடும். தேர்தலில் நிற்பவர்கள் சிலர் அந்தச் சமயத்தில் பயத்துடன் இருப்பார்கள். பலரால் ஏமாற்றப்பட்டவர்கள் போட்டியின் இறுதி நிமிடத்தில் பயந்து, ஒதுங்கிவிடலாமா என்று நினைப்பார்கள். அவர்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் செவ்வாயும் பலவீனமாக இருக்கும். 10-க்கு அதிபதி நீசமாக இருக்கும். அவர்கள் போட்டியின் இறுதியில் தோற்றுவிடு வார்கள். அல்லது மற்றவர்கள் அவர்களை ஏமாற்றிவிடுவார்கள்.

ஜாதகத்தில் செவ்வாய், சனி 6, 8, 12-ல் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்க்கையில் மாரகாதிபதி தசை நடக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லா விட்டால் அவரை மற்றவர்கள் ஏமாற்றி விடுவார்கள். மனக்கவலை, உடல்நலக்கேடு உண்டாகும். ஜாதகத்தில் சூரியன் விரயஸ்தானத்தில் இருந்து, ஜாதகருக்கு சூரிய தசை நடக்கும் போது அவருக்கு அஷ்டமச்சனி, அர்த் தாஷ்டமச்சனி அல்லது ஏழரைச்சனி நடந் தால், அவர் தன் சொத்தை இழக்கவேண்டிய நிலை உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவாழ நேரிடும். இவர்கள் அனைவரும் வன்னி மரத்தை வழிபட்டால், இந்த பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இப்படிப்பட்ட சிறப்பிற்குரிய வன்னி மரத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. 

மகாபாரதக் காலத்தில் பாண்டவர்கள் ஓராண்டு காலம் மறைந்து வாழ்ந்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மர பொந்தில் மறைத்து வைத்தார்கள். ஓராண்டு முடிந்ததும், விஜயதசமியன்று அவர்கள் வன்னி மரத்திற்குப் பூஜைசெய்து, அந்த ஆயுதங்களை எடுத்துப் பூஜை செய்தார்கள். போரில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள். அதனால் விஜயதசமியன்று வன்னி மரத்திற்கு ஒரு தீபம் ஏற்றி, பூ, பழங்களை வைத்து பூஜை செய்யவேண்டும். வன்னி மரத்தின் இலைகளை வீட்டிற்குக் கொண்டு சென்று, பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் கிரக தோஷத்திலிருந்து விடுதலை கிடைக்கும். சனியின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். பகைவர்களின் நோக்கம் நிறைவேறாது. பயஉணர்வு இருப்பவர்கள் வன்னி மரத்தை வழிபட்டு, அதன் இலைகளைத் தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால், பயம் நீங்கிவிடும்.

பயணம் செல்பவர்கள் வன்னி மரத்தை வழிபட்டுச் சென்றால் எந்தவித ஆபத்தும் உண்டாகாது. விஜயதசமியன்று பூஜைசெய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை தசமியன்று (10-ஆவது நாள்) வன்னி மரத்திற்கு பூஜை செய்ய வேண்டும். அதன் இரண்டு இலைகளைக் கொண்டு வந்து வீட்டில் வைத்தால் அவர்களுக்கு நன்மைகள் நடக்கும். போட்டியில் வெற்றி காண்பார்கள். வீட்டில் சந்தோஷ சூழல் உண்டாகும்.
 

vanni maram

பரிகாரங்கள்

வீட்டில் சந்தோஷம் நிலவுவதற்கு, பணவசதி பெருகுவதற்கு, சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாவதற்கு... விஜயதசமியன்று வன்னி மரத்திற்கு ஒரு தீபம் ஏற்றி, அதை மூன்று முறை சுற்றிவரவேண்டும். அதன் இலையை வீட்டில் கொண்டுவந்து வைத்தால், கிரக தோஷம் நீங்கும்.

கடுமையாக உழைத்தும் அதற்குரிய பலன் கிடைக்காதவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட வர்கள் பகல் 11.30 மணியிலிருந்து 12.00 மணிக்குள் வன்னி மரத்திற்கு ஒரு தீபம் ஏற்றி நான்குமுறை சுற்றிவந்தால் பலன் கிடைக்கும். போட்டியிலோ தேர்விலோ தேர்தலிலோ கலந்துகொள்ளும்போது மனதில் பயஉணர்வு தோன்றுபவர்கள் பகல் 11.45 மணியிலிருந்து 12.15 மணிக்குள், வன்னி மரத்தை ஒன்பதுமுறை சுற்றிவரவேண்டும். தீபமேற்றி பூஜை செய்ய வேண்டும். அதன் இலைகளை எப்போதும் தன்னுடன் வைத்திருக்க வேண்டும். இதனால் பயம் நீங்கும்; வெற்றி கிடைக்கும். தொழில் வெற்றியைப் பார்க்காதவர்கள், தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துகளைச் சந்திப்பவர்கள் விஜயதசமியன்று வன்னி மரத்தை வழிபடவேண்டும். அதன் இலையை தொழிற்சாலையில் வைத்தால் பிரச்சினைகள் தீரும்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.