Skip to main content

வெற்றி தரும் விநாயகர்

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

எந்தக் கடவுளை வழிபட்டாலும், முதல் கடவுளாக விநாயகரை வழிபடவேண்டும். அப்படி வழிபட்டால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். எந்த சுபகாரியங்களைச் செய்யும்போதும் விநாயகரை வழிபட்டுத் தொடங்கினால் அந்த காரியம் நல்ல முறையில் நடக்கும். விநாயகரை மதிய வேளையில் வழிபட்டால் நன்மைகள் நடக்கும். விநாயகருக்குப் பிடித்தவை கொய்யாப்பழம், வாழைப்பழம், தேங்காய், மைதாவில் செய்த பூந்தி, லட்டு ஆகியவை. அவரை எருக்கம்பூ மாலையை வைத்து வழிபடவேண்டும். வீட்டில் பூ, பழம் வைத்து வழிபடவேண்டும். பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண வேண்டுமானால், விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்குப் பூஜை செய்ய வேண்டும்.

 

vinayakar

பணப்பிரச்சினை, வீட்டில் கணவன்- மனைவிக்கிடையே சண்டை போன்றவை இருந்தால் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை தவறாமல் வணங்கவேண்டும். விநாயகர் சிலை அல்லது அவரின் படத்தை வைத்து சந்தனம், குங்குமம் வைத்து, தூபம் ஏற்றி வழிபடவேண்டும். பூ, பழம், லட்டு ஆகியவற்றை பூஜையில் வைக்க வேண்டும். பூஜையின்போது விநாயகரின் முகம் கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் கருப்புநிற ஆடை அணிந்திருக்கக்கூடாது. "ஓம் கங்க் கணபதயே நமஹ' என்ற மந்திரத்தை ஒரு மாலை (108 முறை) கூறவேண்டும். மேலும் அதிகமாகக் கூறினால், நல்லதே நடக்கும். பிரசாதமாக வைத்தவற்றைப் பிறருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

விநாயகர் சிலையை வாழை அல்லது சிவப்புநிறத் துணியின் மீது வைத்து, விநாயகருக்கு சாந்து அணிவித்து, தூபம் காட்டி, பூ, பழம் வைத்து, ஒரு பூணூல், நான்கு பாக்குகள் வைத்து வழிபட்டால், பண வசதி உண்டாகும். வியாபாரத்தில் கஷ்டம் இருப்பவர்கள், கடன் பிரச்சினையில் இருப்பவர்கள் வீட்டில் விநாயகருக்கு ஒன்பது சிவப்புநிற மலர்களை வைத்து, ஒரு முழுத் தேங்காயை வைத்து, தூபம் காட்டி, தீபமேற்றி, பிசாதமாக நான்கு கொய்யாப்பழங்களை வைத்து, மதிய வேளையில் அவரை வழிபட வேண்டும்.

 

vinayakar

தலைவலி இருப்பவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று காலையில் குளித்து, விநாயகர் சிலையை ஒரு பீடத்தின்மீது வைத்து, எருக்கம்பூ அல்லது சிவப்பு மலர் அல்லது வெண்ணிற மலர் வைத்து, தூபம், தீபம் ஏற்றி, ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து அதில் சர்க்கரை போட்டு, பன்னீர் வைத்து விநாயகரை வழிபடவேண்டும். பிரசாதத்தையும் பழங்களையும் சாப்பிட்ட பிறகுதான் உணவு சாப்பிட வேண்டும். அந்த நாளில் கோதுமையை தானமளிக்க வேண்டும்.

வயிற்றில் நோய் இருப்பவர்கள் விநாயகருக்கு அரிசிப் பாயசம், வாழைப்பழம், வெல்லம் ஆகியவற்றை வைத்து வழிபடவேண்டும். பாயசத்தை தானும் சாப்பிட்டு, பிறருக்கும் அளிக்கவேண்டும். திருமணத்தடை இருப்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வீட்டில் புடவை அல்லது மஞ்சள்நிற வேட்டியை வைத்து, பூந்தி, லட்டு, அறுகம்புல், பூ வைத்து தீபமேற்றி வணங்கவேண்டும். இதைச் செய்தால் திருமணத்தடை நீங்கும். வீட்டில் சந்தோஷ சூழல் நிலவ விநாயகருடன் லட்சுமியையும் வைத்து வழிபடவேண்டும். விநாயகருக்கு சந்தனம், எருக்கம்பூ, மைதாவில் செய்த பூந்தி, லட்டு வைத்து, தூபம், தீபமேற்றி மதியம் 12.00 மணிக்கு பூஜை செய்ய வேண்டும். குடும்பத்திலிருக்கும் எல்லாரும் பகவானுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பகவானுக்கு வைத்த பிரசாதத்தை அனைவரும் சாப்பிட்டு பிறருக்கும் தரவேண்டும்.


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் விநாயகரை வழிபட்டு, அரசமரத்திற்குக் கீழே இருக்கும் விநாயகருக்கு பூ, பழம் வைத்து அங்கு ஐந்து தீபங்களை ஏற்றி, தேங்காய் வைத்துப் பூஜை செய்யவேண்டும். வீட்டிலிருப்பவர்கள் அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்ட பிறகுதான் மதிய உணவைச் சாப்பிட வேண்டும். இதைச் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பதற்கு வீட்டில் விநாயகருக்கு அறுகம்புல் வைத்து, குழந்தைகளின் புத்தகங்களுக்கு பொட்டுவைத்து, கற்கண்டு, பாதாம்பருப்பு வைத்து தூப தீபமேற்றி வழிபடவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று அனைவரும் விநாயகரை வழிபட்டு நன்மைகள் பல பெறுவோம்.
 

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.