Skip to main content

உடலில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் ஏன் ?

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

நாம் வாழ்வில் நன்மைகள் நடைபெறவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறோம். தீமைகள் நடந்தால் அதிலிருந்து மீளவும் இறைவழிபாடு செய்கிறோம். இதற்கு ஜோதிடமும் துணைபுரிகிறது. ஒருவர் ஜாதகத்திலிருக்கும் கிரகங்களின் நிலைமையையும் தசாகாலங்களையும் பார்த்து, அதற்கேற்றபடி கடவுள்களை வழிபடவேண்டும். பொதுவாக யாரும் எப்போதும் கடவுளை வழிபடலாம். ஆனால், சில விசேஷ காரியங்களைச் செய்யும்போதும், சில விசேஷ பரிகாரங்களைச் செய்யும்போதும் சரியான நேரத்தில் பூஜை செய்தால் மட்டுமே கடவுளின் அருள் கிடைக்கும்.

 

god



உதாரணத்திற்கு... ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சரியில்லையென்றால் அவருக்கு பயம் உண்டாகும். பலருக்கு தூக்கம் வராது. சூரியன் இருக்கும் இடத்திற்கேற்ப கெட்டபலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். சூரியன் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமலிருந்தால், அதிகாலையில் குளித்த பின்னர் சூரியனுக்கு நீர் வார்த்து, "ஓம் ஆதித்யாய நமஹ' அல்லது "ஓம் சூர்ய நாராயணாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூற வேண்டும். அதன்மூலம் சூரியனின் தோஷம் நீங்கும். விஷ்ணுவின் அருள் கிடைக்கும். சூரியன் 4-ல் தனித்திருந்து அதை பாவகிரகம் பார்த்தால், அந்த மனிதர் வாழ்க்கையில் பலருக்கு நன்மைகள் செய்திருப்பார். எனினும், அவர்களால் அவருக்கு எந்த நன்மைகளும் நடக்காது. குடும்பத்தில் இருப்பவர்களோ, நண்பர்களோ அவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இந்தக் குறையுள்ளவர்கள், காலையில் செப்புப் பாத்திரத்தில் குங்குமம், சர்க்கரை, சிவப்பு மலரின் இதழ்கள் ஆகியவற்றை நீரில் கலந்து, சூரியனைப் பார்த்தவாறு வார்க்க வேண்டும். அப்போது "ஓம் க்ரணி சூர்யாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும். தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கவேண்டும். ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்க்கை லக்னத்தில் அல்லது 7-ல் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சூரியன் விரய ஸ்தானத்தில் இருந்து அதைப் பாவகிரகம் பார்த்தால் பித்ரு தோஷம் உண்டாகும். பலருக்கு தலைமுடி உதிர்ந்துவிடும்.

 

god



இந்த பாதிப்பு உள்ளவர்கள் நீரில் குங்குமம், சர்க்கரை ஆகியவற்றுடன் சிறிது பன்னீரைக் கலந்து சூரியனுக்கு வார்க்க வேண்டும். சிவாலயத்திற்குச் சென்று பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். தினமும் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறுவது சிறந்தது. குலதெய்வ வழிபாடு நலம் சேர்க்கும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லாமலிருந்தால், அவருக்கு ஈர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சகோதரர்களுடன் சரியான உறவிருக்காது. பலரின் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைவாக இருக்கும். விபத்தை சந்திக்க நேரும். வீடு வாங்கும் அதிர்ஷ்டம் இருக்காது.

இந்த பாதிப்பு உள்ளவர்கள் காலை வேளையில் சூரியனை வணங்க வேண்டும். ஆஞ்சனேயர் ஆலயத்திற்குச் சென்று, நான்குமுறை சுற்றி வரவேண்டும். அங்கு பூந்தி அல்லது லட்டு அல்லது வெல்லம், துளசி ஆகியவற்றை பிரசாதமாக வைத்து ஆஞ்சனேயருக்குப் பூஜை செய்ய வேண்டும். தினமும் காலையில் அரச மரத்திற்கு நீர்விட்டு ஒரு தீபத்தை ஏற்றி வைக்கவேண்டும். பலருக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலருக்குத் திருமணத்தில் தடைகள் ஏற்படும். தாமதமாகத் திருமணம் நடக்கும். இதற்குக் காரணம் செவ்வாய், சனியுடன் சேர்ந்து 1, 4, 7, 8, 12-ல் இருப்பதுதான்.

இந்த தோஷம் உள்ளவர்கள் வீட்டிலிருக்கும் பூஜையறையில் தினமும் ஒரு தீபமேற்ற வேண்டும். சிவன் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம் செய்து, சிவப்பு மலர் வைத்துப் பூஜை செய்யவேண்டும். அங்கு ஆலமரம் அல்லது வில்வமரம் இருந்தால் அதற்கு நீர்விட வேண்டும். சுக்கிரன், சூரியன், ராகு அல்லது சுக்கிரன், சூரியன், செவ்வாய் அல்லது சூரியன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து 1, 4, 7, 8, 12-ல் இருந்தால் பலருக்கு இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. தோல்விகளைச் சந்திப்பார்கள். அதனால் மனஅழுத்தத்துடனும் கவலையுடனும் காணப்படுவார்கள். இந்த தோஷத்திற்கு ஆளானவர்கள் தினமும் காலையில் சிவனுக்கு பால், தேன் அல்லது கரும்புச் சாறால் அபிஷேகம் செய்து தீபமேற்ற வேண்டும். உடலில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு அன்னமிடுவது சிறந்த பரிகாரம்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.