Skip to main content

தொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்?

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் பலர் திடீரென்று வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். பணத்தை இழந்து வாடுகிறார்கள். இந்நிலை ஏன் ஏற்படுகிறது? ஒருவர் ஜாதகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் அல்லது மூன்று கிரகங்கள் சுய வீட்டில் இருந்தால் அல்லது குருவால் பார்க்கப்பட்டால் அல்லது குருவுடன் இருந்தால், அந்த மனிதருக்கு தொழிலிலில் பெயர், புகழ் வந்துசேரும். அப்போது அவர் தொழில் செய்யும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். தான் செய்வதுதான் சரி என்று நினைப்பார். அப்போது அவருக்கு 2-ஆம் அதிபதி தசை அல்லது 8-ஆம் அதிபதி தசை அல்லது விரய ஸ்தானாதிபதியின் தசை நடந்தால், விரோதமாக இருக்கும் வாசல் உள்ள வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ வாங்கிவிடுவார். அதனால் பல தொல்லைகளை சந்திக்க நேரும். வேறு இடத்திற்கு அவர் மாறிவரும்வரை பிரச்சினைகள் உண்டாகும். வீழ்ச்சி ஏற்படும். பணச்சிக்கல் உண்டாகும்.

 

god



சிலர் வாஸ்து தோஷம் உள்ள பூமியை வாங்கிவிடுவார்கள். அதன் பிரதான வாயில் சரியான இடத்தில் அமையாமல் இருக்கும். அதனால் பிரச்சினைகள் உண்டாகும். சிலரின் ஜாதகத்தில் ராகு 2 அல்லது 8-ல் இருந்து, அவருடைய வீட்டின் வடமேற்கு திசை வளர்ந்து, படுக்கை அறைக்கு வடகிழக்கு இல்லாமல் இருக்கும். சிலரின் ஜாதகத்தில் ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கும்போது, அவர்கள் வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய வீட்டின் தென்மேற்கு திசை காலிலியாக இருக்கும். வடகிழக்கில் இருட்டு இருக்கும். காற்று வசதி இருக்காது. தென்மேற்கு திசையில் காற்று அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கர்ம ஸ்தானாதிபதி தசை நடக்கும் 8-ஆம் அதிபதியின் அந்தரம் நடந்தால், அவருடைய அலுவலகத்திற்கு வடகிழக்கு இல்லாமல் இருக்கும் அல்லது துண்டிக்கப்பட்டிருக்கும். அத்தகைய அலுவலகத்தில் வர்த்தகம் செய்தால், பணக்கஷ்டம் ஏற்படும். பெரிய அளவில் சிக்கல்களில் மாட்டிக்கொள்வார்கள். ஒரு ஜாதகத்தில் குரு பகவான் 6, 8 அல்லது 12-ல் இருந்தால், குரு தசை வருவதற்கு முன்பே, ராகு தசையின் முடிவில் அவர் தவறிழைக்க ஆரம்பித்துவிடுவார். தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வார். அவருடைய வீட்டில் தேவையற்ற பொருட்கள் அதிகமாக வந்துசேரும்.

 

god



கடுமையான பணப்பிரச்சினைகளை சந்திப்பார். பல நேரங்களில் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஓடிவிடலாம் என்றுகூட நினைப்பார். ஒரு மனிதருக்கு சூரிய தசை நடக்கும்போது, அந்த சூரியன் நீசமாக அல்லது 8-ல் அல்லது 9-ல் இருந்தால், அவர் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வார். சொத்துகளை இழக்கவேண்டிய நிலை உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்து 8 அல்லது 12-ல் இருந்தால், அல்லது சனி தசையில் குரு புக்தி அல்லது குரு தசையில் சனி புக்தி வந்தால் அவர் தன்னுடைய சக்திக்குமேல் வர்த்தகம் செய்வார். பேராசை காரணமாக பணப்பிரச்சினை உண்டாகும். அவருடைய நெருங்கிய நண்பர்களே ஏமாற்றிவிடுவார்கள்.

ஒரு ஜாதகத்தில் ராகு, சுக்கிரனுடன் 2 அல்லது 3-ல் இருந்தாலும், சுக்கிர தசையில் சனி புக்தி அல்லது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்தாலும் அவர் பெரிய அளவில் சிக்கலில் மாட்டிக்கொள்வார். வியாபாரத்தில் பல பிரச்சனைகள் உண்டாகும். ஜாதகத்தில் ராகு 9-ல் இருந்து, 4-ல் சூரியன் இருந்தாலும், ராகு தசையில் சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்தாலும் அவருக்கு அவமானப்படும் அளவுக்கு சூழல்கள் உண்டாகும். சிலருக்கு தொழில் நடக்கும் இடத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அதை மூடவேண்டிய நிலையும் உண்டாகும். அவர் வீட்டின் வாசல் தெற்கு வாசலாக இருந்து, அதற்கு தென்மேற்கு திசை காலிலியாக இருந்தால், அவருக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் உண்டாகும்.

பரிகாரங்கள்

தினமும் பசுவுக்கு வெல்லம் அல்லது மஞ்சள் வாழைப்பழம் தரவேண்டும். குரு பகவான் அல்லது விஷ்ணு பகவானின் ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்யவேண்டும். வீட்டில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. தெற்கு திசையில் தலையை வைத்துப் படுக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு துண்டிக்கப்பட்டிருந்தால், அதை சரிசெய்யவேண்டும். தெற்கு திசை காலியாக இருந்தால், அதை மூடிவிடவேண்டும். ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்வது நற்பலன் தரும். தினமும் சூரிய பகவானை வணங்கவேண்டும். குலதெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்யவேண்டும். தன் லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.