Skip to main content

வீட்டின் வடகிழக்கில் படிக்கட்டு இருப்பது சிறப்பல்ல ஏன்?

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

பூமியில் வாழும் ஒவ்வொருவரும் நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழவேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.சிலர் நடுத்தர வயதிலேயே இம்மண்ணைவிட்டு நீங்கிவிடுகிறார்கள். அதன் காரணமாக அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும் தாங்கமுடியாத கவலையில் மூழ்கிவிடுகிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருந்தால், அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் இருப்பார். அதேபோல ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருந்து, சந்திரன் சுய வீட்டிலோ, உச்சமாகவோ இருந்தால், அவர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

 

hanuman



ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை குரு பார்த்தால் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார். ஜாதகத்தில் குரு பகவான் சுய வீட்டிலோ, உச்சமாகவோ இருந்து, லக்னாதிபதியையும் சந்திரனையும் பார்த்தால் ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார். ஜாதகத்தில் சனி பகவான் 8-ல் இருந்து, லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால், அந்த மனிதர் நீண்டகாலம் வாழ்வார். லக்னாதிபதி பலவீனமாக இருந்து, அந்த ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி கெட்டுப்போயிருந்தால் அவருடைய ஆயுள் நீளுமேதவிர, நோய் இருந்துகொண்டே இருக்கும். ஏதாவது பிரச்சினைகள் தொடர்கதையாகும். ஜாதகத்தில் லக்னாதிபதியும் சந்திரனும் பலவீனமாக இருந்தால், அவருக்கு பூரண ஆயுள் இருக்கும். எனினும், வாழ்வில் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பார். அவருக்கு முக்கியமான நேரங்களில் நோயின் பாதிப்பு உண்டாகும். மனதில் எப்போதும் பயமிருக்கும். அதன்காரணமாக மனநோய் உண்டாகும்.

 

hanuman



ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி, லக்னாதிபதியுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அவர் விபத்துக்களைச் சந்திப்பார். அதனால் நோய்களால் பாதிக்கப்படுவார். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் பிரச்சினைகள் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சூரியன், சனி அல்லது சூரியன், சனி, ராகு 12-ல் இருந்தால், சிலருக்கு பித்ருதோஷம் உண்டாகும். அதனால் வீட்டில் பல பிரச்சினைகள் உண்டாகும். வாழ்க்கையில் அவரால் சந்தோஷத்தை அனுபவிக்கமுடியாது. ஒரு ஜாதகத்தில் 6-ல் சனி உச்சமாக இருந்து செவ்வாய் சேர்ந்திருந்தாலும் அல்லது 7-ல் சனி, கேது இருந்தாலும் அந்த ஜாதகருக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். எப்போதும் மனக்கவலையுடன் இருப்பார். அவரால் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.

ஒரு ஜாதகத்தில் சந்திரன், சனியுடன் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு விஷயோகம் உண்டாகும். அதன்காரணமாக தீராத நோய் வந்துசேரும். பல பிரச்சினைகளிலும் சிக்கி அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு இருந்தால், அந்த வீட்டில் இருப்பவரின் ஆயுளில் குறை ஏற்படும். ஒரு வீட்டின் தெற்கு மத்தியில் அல்லது தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அங்கிருப்பவருக்கு சிறிதும் எதிர்பாராமல் ஏதாவது விபத்து ஏற்படும். அதனால் அவரால் சநதோஷமாக வாழமுடியாத நிலை உண்டாகும்.

பரிகாரங்கள்

தினமும் சிவனை வழிபடவேண்டும். பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும்.  தினமும் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறிவருதல் நலம். கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவும்.வீட்டின் தென்மேற்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு பூமிக்கு அடியில் இருக்கக்கூடாது. வீட்டின் தென்கிழக்கில் நீர் பிடித்து வைக்கக்கூடாது. கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு அப்பகுதியில் இருப்பது நல்லதல்ல. வீட்டின் தென்மேற்கில் சமையலறை இருந்தால் அதை அக்னிமூலைக்கு மாற்றவும்.

வீட்டின் வடகிழக்கில் படிக்கட்டு இருப்பது சிறப்பல்ல. வீட்டிற்குத் தென்கிழக்கு வாசல் இருக்கக்கூடாது. லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயர் ஆலயத்திற்குச் சென்று, அவரின் காலில் இருக்கும் குங்குமத்தை எடுத்துவந்து, வீட்டின் கதவில் ஸ்வஸ்திக் வடிவத்தை வரைந்துவைத்தல் நல்லது.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.