Skip to main content

வீட்டில் இருள் இருக்கக்கூடாது ஏன்?

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

சூரியன், சந்திரன் இணையும் அந்தநாளில் அன்னை மகாலட்சுமியை வணங்கினால், ஒருவர் தன் வாழ்க்கையிலிருக்கும் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுபடலாம்.அமாவாசையன்று காலையில் குளித்து முடித்து, வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டவேண்டும். வீடு மற்றும் பூஜையறையை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பூஜையறையில் சிவப்புநிறத் துணியை விரித்து, அதன்மீது நாம் வழிபடும் எல்லா கடவுள்களையும் வைக்கவேண்டும். லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் ஆகியோரின் படங்களை வைக்கவேண்டும். லட்சுமிக்கு தாமரை அல்லது மல்லிகை அல்லது சிவப்பு மலரை வைத்து அலங்காரம் செய்யவேண்டும்.

 

god



பூஜையறையில் கலசத்தில் நீர் பிடித்து வைத்து, கலசத்தின்மீது மாவிலை அல்லது வெற்றிலையை வைத்து, அதன்மீது ஒரு முழுத்தேங்காயை வைக்கவேண்டும். அன்னை லட்சுமிக்கு பிரசாதமாக ஐந்துவிதப் பழங்களை வைத்து, பால்கோவா அல்லது ஏதாவது இனிப்பை வைக்கவேண்டும். வெள்ளிக்காசுகளையும் வைக்கலாம். வாசனை திரவியம், கண் மை, குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை வைக்கவேண்டும். அனைத்துக் கடவுள்களுக்கும் பொட்டுவைத்து ஒரு நெய் தீபத்தையும் ஒரு எண்ணெய் தீபத்தையும் ஏற்றி வைக்கவேண்டும். மகாலட்சுமியின் ஸ்ரீசூக்தம் அல்லது மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்கலாம்.

ஒரு ஜாதகத்தில் சூரியன், செவ்வாயுடன் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால், சிலருக்கு மனநோய் இருக்கும். சிலருக்கு உணவு ஜீரணமாகாது. கணவனுக்கும் மனைவிக்கும் கருத்துவேறுபாடு உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், அதை பாவகிரகம் பார்த்தால் அந்த வீட்டில் எந்த சுபகாரியம் நடக்கும் போதும் தடைகள் உண்டாகிக்கொண்டே யிருக்கும். சிலருக்கு நோயின் பாதிப்பு இருக்கும். ஒரு ஜாதகத்தில் 4-க்குரிய கிரகம் பலவீனமாக அல்லது நீசமாக அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அந்த வீட்டில் நல்ல காரியங்கள் நடக்காது. மகிழ்ச்சி இருக்காது. நல்ல செயல்கள் நடக்கும்போது தடைகள் உண்டாகும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, செவ்வாய் பலவீனமாக இருந்து, 9-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகரின் வாழ்க்கையின் முதற்பகுதியில் பிரச்சினைகள் தோன்றும். சந்தோஷம் இருக்காது. எல்லா விஷயங்களிலும் தடைகள் உண்டாகும். ஒரு மனிதரின் ஜாதகத்தில் சூரியன், சனி, செவ்வாய் அல்லது சூரியன், சனி, ராகு 12-ல் இருந்தால், வீட்டில் மகிழ்ச்சியே இருக்காது. பணமிருந்தாலும் நிம்மதி இருக்காது. தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உறவு சரியாக இருக்காது. பணத்திற்காக பல பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.

ஜாதகத்தில் குரு நீசமாக அல்லது பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகர் பிறந்த லக்னத்திற்கு குரு பாதகாதிபதியாக இருந்தால், குருவின் தசை நடக்கும்போது அவர் பல பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்வார். இவர்கள் எல்லாரும் தாய் லட்சுமியை வழிபடவேண்டும். அமாவாசையன்று இரவில் பூஜை செய்யவேண்டும். பூஜை செய்பவரின் முகம் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருக்கவேண்டும். அவர் கள் அந்த நாளன்று மகாலட்சுமியின்- "ஓம் ரீம் ஸ்ரீம்' அல்லது "ஓம் ரீம் ஸ்ரீம் க்ளீம்' என்னும் மந்திரத்தை பத்து மாலை (108 ஷ் 10) முறை கூறவேண்டும்.

பூஜை செய்யும்போது, வீட்டில் இருள் இருக்கக்கூடாது. பூஜை முடிந்தபிறகு, வீட்டி லிருக்கும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும். மறுநாள் காலையில் கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும் தேங்காயை ஒரு சிவப்புநிறத் துணியில் சுற்றி, அதை பூஜையறையில் ஒரு ஆணியில் தொங்கவிட வேண்டும். அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். அடுத்த வருடம் தீபாவளி வரும்போது, அந்த தேங்காயை ஆறு, குளம், கடலில் விட்டுவிட்டு வரவேண்டும். இந்த லட்சுமி பூஜையை அமாவாசை யன்று செய்பவர்கள் தோஷங்கள் நீங்கி, சந்தோஷமாக இருப்பார்கள்.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.