Skip to main content

கருப்பு ஆடையைத் தவிர்க்கவும்... ஏன் ?

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

ஆண்- பெண் இருபாலரும் வேலை பார்த்தால்தான் சிரமமின்றி குடும்பத்தை நடத்தமுடியும் என்ற சூழல் பலருக்கு உள்ளது.ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையுடன் இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல வேலை கிடைக்கும். இரண்டாம் பாவமும் வலிமையுடன் இருந்தால் அல்லது 2-க்கு அதிபதி உச்சத்தில் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும்.ஒருவரின் ஜாதகத்தில் 5-க்குரிய கிரகம் 5-ல் அல்லது உச்சமாக இருந்தால் ஜாதகர் பெரிய வெற்றிகளைச் சந்திப்பார். புகழுடன் இருப்பார்.10-ல் சூரியன் அல்லது 10-க்கு அதிபதி சூரியனுடன் இருந்தால், அவருக்கு அரசுத்துறையில் நல்ல வேலை கிடைக்கும். 5-க்கு அதிபதி 9-க்கு அதிபதியுடன் 9 அல்லது 10 அல்லது 11-ல் இருந்தால் அவருக்கு நல்ல வேலை கிடைக்கும். அதன்மூலம் புகழும் கிடைக்கும்.ஒரு ஜாதகத்தில் 5-ல் புதன், குரு, சூரியன் இருந்தால் நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும். லக்னத்தில் ராகு, 5-ல் குரு, 10-ல் சூரியன் இருந்தாலும் நல்ல வேலை கிடைக்கும். புகழுடன் வாழ்வார்.ஒரு ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 4 அல்லது 7 அல்லது 10-ல் குரு இருந்து, லக்னாதிபதி பலமாக இருந்தால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் லக்னாதிபதி இருந்து, 6-ல் சனி, 10-ல் சூரியன் இருந்தால், அவருக்கு நல்ல வேலை கிடைக்கும். நாளாக... நாளாக... புகழுடன் விளங்குவார்.ஒரு ஜாதகத்தில் 6-ல் குரு, புதன், சூரியன் இருந்தால் அந்த ஜாதகர் தூர இடத்தில் நல்ல வேலையில் இருப்பார். புகழும் கிடைக்கும். லக்னத்தில் சுக்கிரன், 3-ல் குரு இருந்தால், அவர் அதிகம் அலைச்சலுள்ள வேலையில் இருப்பார். ஆனால் அதில் நல்ல வருமானம் கிடைக்கும்.
 

thirunallar saneeswara temple

லக்னத்தில் செவ்வாய், 5-ல் குரு, 9-ல் சந்திரன் இருந்து நல்ல தசை நடந்தால், அவருக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒருவருக்கு 9-ஆம் அதிபதியின் தசை நடந்தால் நல்ல பணி கிடைக்கும்.லக்னாதிபதி வலுவாக இருந்து 2-ஆவது பாவத்தின் தசை நடக்கும் போது நல்ல வேலை கிடைக்கும்.ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது வேலை கிடைப்பதில் தடைகள் உண்டாகும்.ஒருவர் வேலைதேடும் நேரத்தில் அஷ்டமச்சனி நடந்தால் நீண்ட அலைச்சலுக்குப் பிறகுதான் வேலை கிடைக்கும். 8-ஆம் அதிபதியின் தசை நடக்கும்போது வேலை தேடினால் அதிக அலைச்சல்களுக்குப் பிறகுதான் கிடைக்கும்.ஒரு ஜாதகருக்கு கோட்சாரத்தில் குரு 12-ல் உலவும்போது அவர் வேலைக்காக நிறைய அலைய வேண்டியதிருக்கும். ஒருவருக்கு கோட்சாரத்தில் 3-ல் குரு இருந்தால், வேலைதேடும் நேரத்தில் அவரைப் பலரும் தாழ்த்திப் பேசுவார்கள்.ஒருவருக்கு அஷ்டமத்தில் குரு இருந்தால், அவர் தன் தகுதிக்கும் கீழான வேலையைப் பார்க்க வேண்டியதிருக்கும். கோட்சாரத்தில் 4-ல் சனி இருந்தால் வேலைக்காக அலைய வேண்டியதிருக்கும். சரியான இடத்தில் வேலை கிடைக்காது. கிடைக்கக்கூடிய வேலையைச் செய்ய நேரும்.

ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் பலவீனமாக இருந்தால், கிடைப்பதாக இருந்த வேலை இறுதி நேரத்தில் கைநழுவிப்போய்விடும். சூரியன், செவ்வாய், ராகு 6, 8, 12-ல் இருந்தால், கோப குணத்தால் வேலைவாய்ப்பை இழந்து விடுவார்.ஒரு ஜாதகத்தில் சூரியன், ராகு, சனி 10-ல் இருந்தால், வேலை தேடுவதில் பிரச்சினை ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை இருக்கும். ஆனால், 36 வயதிற்குப் பிறகு அவர் நல்ல வெற்றியைப் பெறுவார்.குரு, புதன், சுக்கிரன், செவ்வாய் 5-ல் இருந்தால், நல்ல அரசு வேலை கிடைக்கும். லக்னத்தில் சூரியன், 9-ல் குரு இருந்தால், அவர் படிப்படியாக நல்ல பதவியில் அமர்வார். லக்னத்தில் சந்திரன், 5-ல் குரு, 9-ல் சூரியன் இருந்தால், அவர் காலப்போக்கில் சிறப்பான பதவியில் இருப்பார்.

பரிகாரங்கள்
1.தினமும் காலையில் குளித்து முடித்து சூரிய பகவானுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்க வேண்டும்.
2.தெற்கில் அல்லது கிழக்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது. லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும்.
3.வாரத்தில் திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமைவரை அரசமரத்தைச் சுற்றி வந்து வழிபடுவது சிறந்தது.
4.வீட்டில் தேவையற்ற குப்பைகளை அகற்றிவிடவேண்டும்.
5.வெள்ளிக்கிழமை இரவில் துர்க்கைக்கு விளக்கேற்றி சிவப்பு மலர்களால் வழிபட வேண்டும்.
6.ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானமளிக்க வேண்டும்.
7.கறுப்பு நிற ஆடையைத் தவிர்க்கவும்.
8.நேர்காணலுக்குச் செல்லும்போது, வெளிர் நிற ஆடைகளையே அணிந்துசெல்ல வேண்டும்.
மேற்கண்டவற்றைக் கடைப்பிடித்தால் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம்.

 

 

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.