Skip to main content

யார் உங்களுக்கு எதிரி?

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

வாழ்வில் பிரச்சினைகள் இருக்க லாம். ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாகிவிடக்கூடாது. துரோகியைவிட எதிரியே மேல் என்பார்கள். நண்பர்களைக்கூட தள்ளிவைத்துப் பார்க்கலாம். ஆனால் துரோகியையும் எதிரியையும் நம் பார்வையிலேயே வைத் திருப்பதுதான் நல்லது. அப்பொ ழுதுதான் நம்மைச்சுற்றி என்ன நடக் கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொருவர் வாழ் விலும் ஏதாவது ஒருவகையில் ஓர் எதிரி இருக்கத்தான் செய்கிறார். சினிமா வில் ஹீரோ மட்டும் இருந்தால் அவர் எதனால் ஹீரோ என்று புரியாது. உடன் ஒரு வில்லன் இருந்தால்தான் அந்த ஹீரோவின் பலம் மக்களுக்குப் புரியும்.

god

நம்மைச்சுற்றி எல்லாருமே நல்ல வர்களாக இருந்துவிட்டால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்த மில்லாமல் போய்விடும். நம் வாழ்வில் எதிரிகளும் விரோதிகளும் இருப்பதே ஆரோக்கியமான விஷயம். அப்பொ ழுதுதான் போட்டிகள் வளரும். எந்த விதத்தில் திட்டமிட்டால் சரியான பாதையில் செல்லலாம் என்று யோசித்து வாழ்வில் உயர்வடைய முடியும். எதிரிகளை வெல்லும் ஆயுதம் எது என்பதை நம்மால் நன்றாக உணரமுடியும். "நன்மையும் தீமையும் பிறர் தர வாரா' என்பார்கள். எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும் வலிலிமையும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளிலிலிருந்து உருவாவதே.
 

god

ஆனால் சிலர் பிரச்சினை என்று வந்துவிட்டால், அதிலிலிருந்து மீள்வதற்கு என்ன வழியென்று ஆராயாமல் பிரச் சினை செய்தவர்களைப் பழிதீர்க்க முயல் வார்கள். அல்லது இன்றே வாழ்க்கை முடிந்துவிட்டதைப்போல சோகத்தில் மூழ்கிவிடுவார்கள்.இப்படி சோதனைகளை சந்திப்ப வர்கள் தங்களுடைய ஜனன ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காண்பித்து, ஏன் எதிரிகள் பாடாய்ப்படுத்துகிறார்கள்? இந்த அளவில் எதிர்ப்புகள் உருவாவதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற் போல், மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து வாழும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் அதிபதி பலம்பெற்று லக்னாதிபதி பலமிழந்து காணப்பட்டால் நிறைய எதிர்ப்புகளையும் எதிரிகளையும் சந்திக்க நேரிடுகிறது. 6-ஆம் இடம்தான் ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்பு பற்றியும், அது யாரால் உண்டாகும் என்பது பற்றியும் அறிய உதவுகிறது. 6-ஆம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதியும் பலம்பெற்றிருந்தாலும், 6-ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் 6-ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிலிமையும் வல்லமையும் சிறப்பாக இருக்கும். 6-ஆம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் எதிர்ப்புகள் விலகியோடும்.

அதுவே 6-ஆம் அதிபதி பலமிழந் திருந்து, 6-ஆம் வீட்டை சனி, செவ் வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தால் எதிரிகளை சமாளிப்பதற்கே வாழ்வில் நிறைய நாட்களை செலவிட வேண்டியிருக்கும். ஜென்ம லக்னா திபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், 6-ஆம் வீட்டில் அமைந் திருந்தாலும் அவருக்கு எதிர்ப்பு வெளியிலிருந்து வரத்தேவையில்லை. அவர் செய்யும் செயல் களால் அவருக்கு அவரே எதிரியாக இருந்து முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்திக் கொள்வார். ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும், 6-ஆம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் குடும்பத்திலுள்ளவர்களாலேயே எதிர்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்க லால் எதிர்ப்புகள், கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளால் வீண்விரோதங்கள் ஏற்படும்.

3-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதி யுடன் இணைந்தோ 6-ஆம் வீட்டிலோ அமையப்பெற்றால் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுடன் வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலமிழந்த செவ்வாய் 3, 6-க்கு அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றாலும், செவ்வாய் வீடான மேஷம், விருச்சிகத்தில் ராகு, சனி அமைந்து, செவ்வாய் பாவகிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும், வக்ரம் பெற்றாலும் நிச்சயமாக உடன்பிறப்புகளின் எதிர்ப்பைப் பெறுவார். உடன்பிறந்தவர்களே இல்லை என்றாலும் பங்காளிகளுடனாவது பகைமை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும். சுக்கிரன் வீடான ரிஷபம், துலாத்தில் ராகு, சனி அமைந்து சுக்கிரன் பாவகிரக நட்சத் திரத்தில் அமைந்தாலும், வக்ரம் பெற்றாலும் பெண் உடன்பிறப்புகளின் எதிர்ப்பைப் பெறுவார். உடன்பிறந்தவர்களே இல்லை என்றாலும் பெண் உறவினர்கள் பகை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

4-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியுடன் இணைந்தோ, 6-ஆம் வீட்டிலோ அமையப்பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரிகளாவார்கள். உடன் பலமிழந்த சந்திரன் சேர்க்கைப் பெற்றாலும், சந்திரன் வீடான கடகத்தில் ராகு, சனி அமைந்து, சந்திரன் பாவ கிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும் தாய் மற்றும் தாய்வழி உறவுகள் அனைத்தும் எதிராகவே செயல்படும். ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் வீட்டில் அமைந்தாலும், 6-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும், குரு வீடான தனுசு, மீனத்தில் ராகு, சனி அமைந்து, குரு பாவகிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும், வக்ரம் பெற்றாலும் பெற்ற பிள்ளைகளே எதிரிகளாக மாறுவார்கள். களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டை கூட்டுத்தொழில் ஸ்தானம் என்றும் கூறுவர். 7-ஆம் அதிபதி 6-ஆம் அதிபதியுடன் இணைந்தோ, 6-ஆம் வீட்டில் அமைந்தோ இருந்தால் கைப்பிடித்த மனைவியே (கணவனே) எதிரியாக மாறுவாள். உடன் சுக்கிரன் இருந் தால் மணவாழ்க்கையே நரகமாகிவிடும் அளவுக்கு மனைவி, மனைவிவழி உறவுகள் எதிர்ப்பாக மாறும். கூட்டுத்தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளே எதிரிகளாக மாறு வார்கள்.

தந்தை ஸ்தானமான 9-ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 6-ஆம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் தந்தையிடமே பகைமை ஏற்படும். தந்தைவழி உறவிகளிடமும் சுமுக மான நிலை இருக்காது. அதிலும் பலமிழந்த 6, 9-க்கு அதிபதிகளுடன் தந்தை காரகன் சூரியன் இணைந்திருந்தாலும், சூரியன் வீடான சிம்மத்தில் ராகு, சனி அமைந்து சூரியன் பாவ கிரக நட்சத்திரத்தில் அமைந்தாலும் கண்டிப் பாக தந்தை, தந்தைவழி உறவினர்கள் ஜாத கருக்கு விரோதியாக மாறுவர். தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6-ல் இருந்தாலும், 6-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் செய்யும் தொழிலிலில் எதிர்ப்பு, தொழிலாளர்களிடம் பகைமை உண்டாகும். உத்தியோகஸ்தர்களாக இருந்தால் சக ஊழியர்களின் எதிர்ப்பிற்கும் வீண்பழிச்சொற்களுக்கும் ஆளாக நேரிட்டு மனநிம்மதி குறையும். ஏன் வேலைக்குச் செல் கிறோம் என்ற அளவுக்கு வெறுப்பு உண்டாகும்.

god

அதுபோல 11-ஆம் அதிபதி பலமிழந்து 6-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், 6-ஆம் வீட்டில் இருந்தாலும் மூத்த உடன்பிறப்பு களுடன் பகை, நெருங்கிய உறவினர்களின் எதிர்ப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக ஜனன ஜாதகத்தில் எந்த வீட்டின் கிரகம் பலமிழந்து அந்த வீட்டின் அதிபதி 6-ஆம் வீட்டின் அதிபதியின் சேர்க்கைப் பெற்றோ, 6-ஆம் வீட்டில் அமையப்பெற்றோ இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவத்திற்குரியவர் களால் வாழ்நாளில் நிறைய எதிர்ப்புகள், பகைமை, பிரச்சினைகள் உண்டாகும்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.