Skip to main content

திருநாவுக்கரசர் யார்? என்ன செய்தார் அவர்? - விளக்குகிறார் நாஞ்சில் சம்பத்

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

Who is Thirunavukarasar? What did he do?- Nanjil Sampath explains!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து, "வாழ்க்கை என்பது ஒன்றடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாவது அல்ல. நிலத்தில் விளைந்தவைகளை தின்று, திரிந்து கதை முடிப்பதல்ல. உண்ட உணவின் கொழுப்புகளைப் பிறரோடு கூடித் தணித்துக் கொள்ள வேண்டும் என்கின்ற தன்னிச்சையின் பார்பட்டது அல்ல. வாழ்க்கை என்பது வாழ்வாங்கு வாழ்வதென்று, மண் செழிக்க மழை பொழிவது போல மனிதன் மனம் செழிக்கப் பாடிய  வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையறை செய்து வைத்தார். 

 

இப்படித்தான் வாழ வேண்டும் என்று வகுத்துக் கொண்டு, அப்படி வாழ்ந்தவர்கள் தான் அருளாளர்கள். அவர்கள் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லை. இறைவன் மீது வைத்திருந்த ஈடில்லாத பக்தி நம்மை கரை சேர்க்கும் என்றவர்கள். மனப்பூர்வமாக நம்பினார்கள். அதற்காக, அடக்குமுறை சட்டத்தை ருசிப் பார்த்தார்கள். ஆபத்துகளின் மடியில் உட்கார்ந்த பொழுதும் அச்சப்படாமல் இருந்தார்கள். எதையும் எதிர்கொள்வதற்கான சித்தமிருந்தார்கள். இதிலிருந்து உங்களுக்கும், எனக்கும் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், எது வந்தாலும் தாங்கிக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை அருளாளர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. 

 

சமயக்குறவர்களில் எப்பொழுதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு மகத்தானவர் திருநாவுக்கரசர் என்கிற அப்பர். இன்றைக்கு தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் உழவாரப் பணியை தமிழக அரசு செய்வதற்கு முன் வந்திருக்கிறது. இந்த உழவாரப் பணி என்பது வேறொன்றும் இல்லை. கோவில்களிலே பாசி படர்ந்திருந்தால்; கோவில்களின் இண்டு இடுக்குகளிலே செடியும், கொடியும் முளைத்திருந்தால்; கோவில்களிலே அழுக்கு, சகதி இருந்தால்; போவதும், வழிபடுவதுமாக வரக் கூடிய பக்தர்கள் அதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அசிங்கமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வருவார்களே தவிர அந்த அசிங்கத்தைப் போக்குவதற்கு ஒரு துரும்பைத் தூக்கிப் போடுவதில்லை. 

 

'Clean India' என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து இன்றைக்கு இந்தியா முழுவதும் தூய்மைப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திருக்கோயில்களில் வாங்கிய பிரசாதத்தை வாயிலே போட்டுக் கொண்டு தூணிலே துடைத்து விடுகிறார்கள். கோயில்களில் அழுக்கு படிந்திருக்கிறது. கோயில்களின் மதிர் சுவர்களில் செடியும், கொடியும் படர்ந்திருக்கிறது. இது இன்றைக்கு தானா என்றால், இன்றைக்கு மட்டும் இல்லை. அன்றைக்கும் இருந்தது. அப்போது தான், வயதிலே பெரியவர் அவர். ஏறக்குறைய 80 வயது தாண்டிய நிலையில் கூட கையிலே கருவிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கோயிலாக சென்று செடிகளை அகற்றினார், கொடிகளை அகற்றினார், பாசி படர்ந்திருந்த இடத்தில் பாசியை சுத்தப்படுத்தினார், தடாகத்தைச் சுத்தப்படுத்தினார். அந்த கோயில் முழுவதும் தானே ஒருவனாக நின்று திருக்கோயிலைச் சுத்தம் செய்யக் கூடிய தூய்மைப்பணியை ஆறாவது நூற்றாண்டில் அன்றொரு நாள் அவர் மேற்கொண்டார். அவருடைய பெயர் திருநாவுக்கரசர். 

 

இந்த திருநாவுக்கரசர் இந்த பணியை மேற்கொண்டதால் தான் அவருக்கு அப்பர் என்று பெயர் வந்ததா என்பது வேறு. ஆனால் அப்பர் என்கிற உயர்வுக்கு அவர் பேசப்பட வேண்டிய காரணம், அவர் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டார். ஆசாபாசங்களுக்கு அடிபணியாமல், ஆதிக்கத்தைக் கண்டு கலங்காமல், எதைப் பற்றிய மனக்கிரேசமும் இல்லாமல், எது வந்தாலும் எதிர்கொள்ளக் கூடிய துணிச்சலோடு இறைவன் மீது வைத்திருந்த ஈடு இல்லாத நம்பிக்கை தன்னை காப்பாற்றும் என்று சொல்லிக் கொண்டு இந்த உழவாரப் பணியை அவர் நாளும் செய்து வந்தார். அன்றைக்கு அவர் செய்த உழவாரப் பணியை மீண்டும் தமிழ்நாட்டில் செய்வதற்கு இன்றைக்கு தமிழக அரசு முன்வந்திருக்கிறது என்பது ஒரு செய்திதான். 

 

ஆகவே, கோயிலானாலும் வீடானாலும் சுற்றுப்புறங்களானாலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று இன்றைக்கு வந்திருக்கின்ற விழிப்புணர்ச்சியை  ஆறாவது நூற்றாண்டில் தொடங்கி வைத்தவர் அப்பர் சுவாமிகள்" எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.