Skip to main content

மாடிவீட்டு மகாலட்சுமி யார்?

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

சச்சிதானந்த பெருமாள்
 

ஆதிசேஷனின் அம்சமான- வைணவம் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பொற்பாதம் பணிந்து வரைகிறேன். ஸ்ரீராமானுஜரின் ஜோதிட நூல் "பாவார்த்த ரத்னாகரம்' 383 சுலோகங்களினால் அருளப்பட்டது. இதன் சிலவரிகளில் வகுக்கப்பட்ட ராஜயோகநிலை தரும் கிரக அமைப்புகளை வாசகர்களுடன் சிறிது பகிர்ந்து கொள்கிறேன்.
 

ramanujar

தந்தையால் வரும் அதிர்ஷ்டம் எப்படி? ஜாதகத்தில் சூரியன் 9, 12-ஆம் வீட்டுக்குரிய கிரகங்களுடன் கூடிநின்றாலும், குருவும் 12-ஆமதிபதியும் இணைந்து 12-ஆம் வீட்டிலேயே இருந்தாலும், உங்களின் தந்தை யோகவான். அவர் சேர்த்துவைத்த பணம், சொத்து ஆகியவற்றை அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிலி நீங்களே. அயன சயன போஜன யோகம் உண்டு உங்களுக்கு. லக்னத்திற்கு 12-ல் வளர்சந்திரன் இருந்தால் தாயாரின் அனுகூலமும், லக்ன 12-ல் சுப சுக்கிரன் நின்றவருக்கு மனைவிவழி அதிர்ஷ்டம், காசு பணமும் சேரும். உங்களின் செவ்வாய் 12-ல் ஆட்சி, உச்சமானால் உடன் பிறப்புகளால் ஆனந்தம், அதிர்ஷ்டம் உண்டுதான்.
 

ramanujar

சுய சம்பாத்தியம் மற்றும் நல்ல துணைவர், நண்பர்கள்மூலம் அதிர்ஷ்டம் அடைய வேண்டுமானால் உங்களின் 7, 9-ஆம் அதிப திகள் பரிவர்த்தனை யோகத்தில் இருக்க வேண்டும். அதாவது பாக்கியாதிபதி (9) 7-ஆம் வீட்டிலும், களஸ்திர ஸ்தானாதிபதி 9-ஆம் வீட்டிலுமாக யோகம்தரும் விருத்திநிலை இது. 7, 9-ஆம் அதிபதி பரிவர்த்தனையால் நல்ல கல்வி, வேலை, துணைவர், பதவி, தூரதேசப்பயணம், தெய்வ கடாட்சம் ஆகிய அதிர்ஷ்டநிலைகளை, 7-ஆம் அதிபதியின் தசா காலங்களில் அனுபவிப்பீர்கள். குறிப்பாக விருச்சிகம் மற்றும் மகர லக்னப் பெண்களின் சுக்கிரன், சந்திரன் பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன், சூரியன் பரிவர்த்தனையானது மாடிவீட்டு மகாலட்சுமியாக புகழுடன் வாழவைக்கும்.
 

ramanujar temple

6-ஆம் வீட்டில் அமர்ந்த புதன் ஆட்சியானால், தன் தாயாருடன் பிறந்தோர் (தாய் மாமன்வழி) மூலமாக அதிர்ஷ்டம், பணம் சம்பாதிக்க முடியும். ஒருபடி மேலாக 2-க்குரிய கிரகமும் புதனும் கூடி 6-ல் அமர்ந்த யோகவான்களுக்கு மாமன் பிள்ளைகள் உங்களின் முன்னேற்றத்திற்குக் கைகொடுப்பார்கள். இதையே வள்ளுவர்கள் "ஆறும் புதனும் பலம்' என குறிக்கிறார்கள். உங்கள் கட்டங்களில் 4-க்கு 3-ஆமிடமான 6-ஆம் வீட்டைக் கொண்டு தாயாரின் உடன்பிறந்தவர் கதி நிர்ணயிக்கப்படுவது ஜோதிட அரிச்சுவடி. 6-ல் புதன் நன்னிலை பெற்றவரை எதிரிகள் வீழ்த்த இயலாது.

கோபம் மிகுந்தவரானபோதும் குணவதி களான விருச்சிகம் மற்றும் சிம்ம லக்னத் தாய்மார்களுக்கு, 5-க்குரியவரான குரு உச்சம் பெற்றால் உங்களின் பிள்ளைகள் பேர் சொல்லும் (ஊர் மெச்சும்) வாரிசுகளே.

குழந்தை பிறந்த நேரம் உங்களை கோபுர உச்சிக்கே புகழ், கௌரவத்துடன் உயர்த்தும். கிராமத்து அக்ரஹாரத்து ஓட்டு வீட்டை விட்டு, நாகரிகநகரில் பல அடுக்கு மாளிகை வீட்டில் பிள்ளைகளால் மகிழ்வாழ்வு அனுபவிப்பவர் ஏராளம்.

ராஜயோகம் என்பது செல்வாக்கும், சொல்வாக்கும், அதிகாரப் பதவி அந்தஸ்தாலும் அமைவது. உங்களின் தனாதிபதி- 2-ஆம் வீட்டிற்குரியவர் 2-ஆம் வீட்டிலேயும், பஞ்சமாதிபதி- பூர்வபுண்ணியாதிபதி 5-ஆம் வீட்டிலேயும் நின்றாலும், 10-ஆம் வீட்டில் 5-க்குரிய கிரகம் ஆட்சி, உச்சமானாலும் பணம், பதவி, செல்வாக்கிற்கு பஞ்சமில்லா அதிர்ஷ்டசாலிகளே நீங்கள். குறிப்பாக இந்த 2, 5, 10-ஆம் வீடுகளில் ஒருவரின் செவ்வாய், சந்திரன், சூரியன் ஆட்சி, உச்ச மானவர்கள் அரசியலில் புகழ், அதிகாரப் பதவி, வருமானத்திற்கு மிகையாக சொத்து சேர்க்கமுடிகிறது. விதிவிலக்காக 5-ல் பலமான குருவுடன் கேதுவும் கூடி நின்று, கேது தசாபுக்தி நடக்கையில் புகழ், கௌரவத்திற்குக் களங்கம், அவமானமும் தருவது வெற்றி ஜோதிடர் அனுபவம்.

முடிவுரையாக, கேரள ஜோதிடப்படி உங்களின் குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன், சனி இவர்கள் பஞ்சம பாக்கியஸ் தானமான 5-ஆம் வீடு, 9-ஆம் வீடுகளில் உச்ச கிரக வலுப்பெற்றவர்கள் மிக யோக வான்களே. எதிலும் வெற்றி! வாழ்வில் இன்பமே எந்நாளும். சிரமமே இல்லாமல் சொகுசு வாழ்வு அனுபவிப்பவர்கள் நீங்களாகவே இருப்பீர்கள். வாழிய நலம்.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.