Skip to main content

உங்கள் வேலை தொழிலில் வெற்றிதரும் வண்ணங்கள் எவை?

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

குரு கிரகத்துக்குரிய நிறம் மஞ்சள். குருவின் எதிரி கிரகங்களாக புதனும் சுக்கிரனும் கூறப்பட்டுள்ளன. புதன் பச்சை நிறத்தையும், சுக்கிரன் வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளனர். இதன்மூலம் குரு சார்புடைய தொழில் புரிபவர்கள் பச்சை, வெள்ளை நிறத்தைத் தவிர்ப்பது நல்லது என தெரிகிறது. இதிலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. குருவின் மீன ராசியில் புதன் நீசமடைவார். சுக்கிரன் உச்சமடைவார். எனவே வெள்ளை நிறத்தைவிட பச்சை நிறத்தை அறவே ஒதுக்குவது குரு சார்ந்த தொழில்புரிவோருக்கு சாலச் சிறந்தது என தெளிவாகிறது.

 

god



நீண்டநாள் குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் தம்பதிகள் கூடியமட்டும் பச்சை நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள். குருவுக்கு புதன் பகை மட்டுமல்ல; அவர் வீட்டில் (மீனத்தில்) நீசமும் அடைவார். எனவே குருவுக்கு பகை கிரக பச்சை நிறத்தை ஒதுக்கி, குருவின் நிறமான மஞ்சள் வண்ணத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள். இதன்மூலம் குழந்தை உருவாகும் நிலை விரைவாகும். தடை தகர்க்கப்படும். சுக்கிரனுக்குரிய வண்ணம் வெண்மை. சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், குரு குறிப்பிடப்பட்டுள்ளன. "உத்தரகாலாம்ருதம்' சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியனையும் சந்திரனையும் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது.

சனியின் நிறங்களாக கருப்பு, ஊதா, கிரே எனப்படும் சாம்பல் வண்ணம் கூறப்பட்டுள்ளன. சனியின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், செவ்வாய், கேது குறிப்பிடப்பட்டுள்ளன. "உத்தரகாலாம்ருதம்' சனிக்குப் பகையென்று சூரியன், சந்திரன், செவ்வாய் கூறப்பட்டுள்ளன ராகுவுக்கு செவ்வாயும், கேதுவுக்கு சனியும் பகைவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ராகுவின் நிறம் கருப்பு. தோல் பை, தோல் செருப்புக் கடைக்காரர்களும், தொழிற்சாலைகளில் கடினமான வேலை செய்பவர்களும், பழைய பொருட்கள் விற்பனை, சுரங்கத் தொழில் செய்பவர்களும் சிவப்பு நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

 

god



பழைய பேப்பர் கடை வைத்திருந்தாலும் சரி; மாபெரும் சுரங்கம் வைத்து அதன் அதிபராக இருந்தாலும் சரி- நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்துகொண்டே இருந்தால் அங்கு சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, ஊதா அல்லது கிரே கலர் பயன்படுத்திப் பாருங்களேன். முதலாளிகளிடம் ஏற்படும் ஒரு எதிரி மனப்பான்மை குறைந்து உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நட்புடன் வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.கேதுவின் வண்ணம் பழுப்பு அல்லது பல வண்ணம். 

வாழ்க்கை ஒழுங்காக, தடையில்லாமல் செல்ல எதனைப் பயன்படுத்த வேண்டும்- எதனைத் தவிர்க்க வேண்டும் என்ற சூட்சுமம் மனிதர்களுக்கு கண்டிப்பாகத் தெரியவேண்டும். வாழ்க்கை மேன்மையடைய, முதலில் ஒருவருக்கு "நோ' (சஞ) சொல்லத் தெரியவேண்டும் என்பர். வாழ்க்கை முன்னேற்றக் குறிப்புகளின் முதல் பாடம் இதுவாகத்தான் இருக்கும். இதனைப் படிக்கும்போது எளிதாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் "நோ', "இல்லை', "மாட்டேன்', "முடியாது' என்று கூறுவது மிகமிகக் கடினம். சிலவற்றைத் தவிர்த்தால் வாழ்க்கை வண்டி சிக்கலிலில்லாமல் ஓடும். அதுபோல் சில வண்ணங்களைத் தவிர்த்தால், வாழ்க்கை எளிதாக அமையும். வண்ணங்களே வாழ்க்கைத் தடையாக விட்டுவிடாதீர்கள்.

-ஆர். மகாலட்சுமி.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.