Skip to main content

பெண் மோகத்தால் பறிபோகிறதா செல்வம்?

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

பல ஆண்கள் பெண்களிடம் ஏமாந்து பணம், சொத்து ஆகியவற்றை இழந்துவிடுகிறார்கள். அவர்களுடைய இந்த நிலைமைக்கு ஜோதிடரீதியான காரணம் என்ன?

ஒரு ஆண் ஜாதகத்தில் அவர் பெண்களிடம் பணத்தை இழந்துவிடுவார் என்ற நிலைமை இருந்தால், அதற்குக் காரணம்- அந்த ஜாதகரின் 2-ஆம் பாவமும் சுக்கிரனும்தான். ஒரு ஆண் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி, புதன் இருந்து சந்திரன் நீசமாக இருந்தால், அந்த ஆண் 25 வயதிற்குப்பிறகு பல பெண்களுடன் பழகி அவர்களிடம் ஏமாந்துவிடுவார். அவர்கள் அவரிடமிருந்து சொத்துகளை அபகரித்து விடுவார்கள். ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 2-ல் சனி, 4-ல் சந்திரன், 6 அல்லது 12-ல் சுக்கிரன் இருந்தால் அவர் பல பெண்களிடம் ஏமாறுவார்; பணத்தை இழப்பார்.
 

vaasthu image

லக்னத்தில் சூரியன், சுக்கிரன், 12-ல் செவ்வாய், புதன் இருந்து, ஜாதகர் கலைத்துறையில் உள்ளவராக இருந்தால், அங்கு பணியாற்றும் பெண்கள்மீது மோகம் கொண்டு, செவ்வாய்- புதன் சேர்க்கை காரணமாக, பல பெண்களிடம் அவர் ஏமாறுவார். தன் முக்கிய வேலைகளைக்கூட செய்யமாட்டார். அவரின் சொத்து கையைவிட்டுப் போய்விடும். ஒரு ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 4-ல் சுக்கிரன், கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், அவர் பல பெண் களுடன் பழகி தன் சொத்துகளை இழந்துவிடுவார். ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன், கேது, 7-ல் சனி, ராகு இருந்தால், அவர் தன் நெருங்கிய உறவுப் பெண்ணிடம் ஏமாந்து, பணத்தை இழப்பார்.
 

vaasthu image

ஒரு ஆண் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சுக்கிரன்- செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவரை பல பெண்கள் ஏமாற்றிவிடுவார்கள். லக்னத்தில் சுக்கிரன், செவ்வாய், 4-ல் சனி, 7-ல் சந்திரன் இருந்தால், அவர் தன் திருமணத்திற்கு முன்பே பெண்களிடம் பழகி சொத்துகளை இழப்பார். லக்னத்தில் புதன், சுக்கிரன், 2-ல் ராகு, 4-ல் சனி, 12-ல் செவ்வாய் அல்லது சூரியன், செவ்வாய் இருந் தால், அவர் தன் இளம்வயதிலேயே பல பெண்களுடன் பழகி அவர் களிடம் ஏமாந்து சொத்துகளை இழந்துவிடுவார். 36 வயதிற்குப் பிறகுதான் அவர் நிம்மதியாக இருப்பார். லக்னத்தில் நீசச் செவ்வாய், 2-ல் சனி, 3-ல் நீச சுக்கிரன் ராகுவுடன் இருந்தால், அவர் பல பெண்களுடன் பழகி பணத்தை இழப்பார். அவருடைய சொத்துகளைப் பெண்கள் அபகரித்து விடுவார்கள்.
 

vaasthu image

லக்னத்தில் நீச சூரியன், புதன், 6-ல் சந்திரன், 10-ல் செவ்வாய், 12-ல் சுக்கிரன் இருந்தால், அவர் தேவையற்ற கற்பனை களில் மிதப்பார். மோசமான பெண் களுடன் பழகி சொத்துகளை இழப்பார்.v ஒரு ஆண் ஜாதகத்தில் 6-ஆவது பாவத்தில் செவ்வாய், புதன், கேது, சுக்கிரன் அல்லது செவ் வாய், சுக்கிரன், புதன், சூரியன் இருந்தால் அவர் தன் தகுதியைவிட கீழ்நிலையிலுள்ள பெண் களுடன் பழகி சொத்துகளை இழப்பார். 7-ல் சனி, 12-ல் சுக்கிரன், புதன், செவ்வாய் இருந்து அவர் வசிக்கும் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தாலும், வீட்டின் பிரதான வாசல் மேற்கு திசை சார்ந்த தென்மேற்கில் இருந்து, படுக்கையறை வடகிழக்கில் இருந்து அதன் வாசல் தென்மேற்கில் இருந்தாலும் அவர் பெண் மோகத்தால் பெரிய அளவில் சொத்துகளை இழந்துவிடுவார். லக்னத்தில் சூரியன், செவ்வாய், புதன் இருந்து சுக்கிரன், ராகு சேர்ந்து 3, 6, 12-ல் இருந்தால், அவர் பெண் மோகத்தால் சொத்துகளை இழப்பார். அவமானத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படும்.

பரிகாரங்கள்

வீட்டின் பிரதான வாசல் தென்மேற் கிலோ மேற்கு சார்ந்த தெற்கிலோ இருக் கக்கூடாது. படுக்கையறையில் தென்மேற்கு வாசல் இருக்கக்கூடாது.

தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடுவது நல்ல பரிகாரம்.

அரசமரத்திற்கு நீர் வார்க்கவேண்டும். திங்கள் முதல் சனிக்கிழமைவரை அரசமரத்திற்கு தீபமேற்றவேண்டும்.

வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்தில் தீபமேற்றி வழிபடவேண்டும்.

லக்னாதிபதி, 5-க்குரிய கிரகத்தின் ரத்தி னத்தை அணியலாம்.

வீட்டில் வாஸ்து யந்திரம் வைத்துப் பூஜை செய்வது நற்பலன் தரும்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.