Skip to main content

கர்ப்பிணி பெண்ணின் சாபம்; தோசையைக் கூட வீட்டில் சுடாத கிராமங்கள்

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

thiruvannamalai temple festival

 

கல்யாணம், காதுகுத்து, கருமாதி, ஆடித்திருவிழா, ஊர் திருவிழா, குடும்ப விழா, பொதுவிழா எதற்கும் எண்ணெய்யில் செய்யப்படும் வடைகள், அதிரசம், முறுக்கு, எள்ளடை, மீன் வறுவல் செய்யாமல் இருக்கமாட்டார்கள். ஆனால் திருவண்ணாமலை அருகே சிலகிராமங்களில் காலம் காலமாக எண்ணெய் பலகாரங்கள் செய்யாமல் இருக்கிறார்கள்.

 

திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படும் வடை, அதிரசம், முறுக்கு, குழி பனியாரம், வறுவல் மீன், சிக்கன் 65, காளிபிளவர், பஜ்ஜி என எதையும் தங்கள் வீடுகளில் செய்யமாட்டார்கள். ஏன் தமிழரின் பாரம்பரிய உணவாக மாறிப்போன தோசை கூட வீட்டில் சுடுவதில்லை.

 

இதற்கெல்லாம் காரணம் ஒரு கர்ப்பிணி பெண்ணின் சாபம் எனச் சொல்லப்படுகிறது.

 

ஊர் பெரியவர்களிடம் கேட்டபோது, இருபது தலைமுறைக்கு முன்பு எங்க முன்னோரின் குடும்பத்தில் 6 பசங்க. அதில் ஐந்து ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. பெண் பெயர் சந்தியம்மா. அண்ணன், தம்பிங்களுக்கு கல்யாணமாகி கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க. கடைக்குட்டியான சந்தியம்மா மீது அண்ணன் தம்பிகள் அதிக பாசம் வச்சி இருந்தாங்க. சந்தியம்மாவை கல்யாணம் செய்து புகுந்த வீடு அனுப்பிட்டாங்க. தலைபிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு அழைத்து வந்த சந்தியம்மாவுக்கு வாய்க்கு ருசியா யாரும் எதுவும் செய்து தரல. அம்மா இல்லாத பிள்ளையால் அண்ணிங்கக்கிட்ட உரிமையா கேட்க முடியல. அந்த ஏக்கத்திலேயே இருந்திருக்கு. அடிக்கடி பொறந்த பொண்ணுக்கும் வாழ வந்த மருமகளுகளுக்கும் சண்டை வந்திருக்கு. ஒருநாள் அண்ணனுங்க எல்லாம் விவசாய வேலைக்கு போனதுக்கப்பறம் வீட்டுக்கு வந்த மருமகளுங்க கூட்டுசேர்ந்து கேழ்வரகு (ராகி) இடிச்சி வடை சுட்டு சாப்பிட்டிருக்காங்க. புள்ளதாச்சியா இருந்த நாத்தனார்க்கு கொஞ்சம் கூடதரல, இதனால் மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா கோபத்தில் அழுதுக்கிட்டே வீட்டுக்கு பக்கத்தல இருந்த கிணத்துல விழுந்து உயிர விட்டுடுச்சி. மாலை வீட்டுக்கு வந்த அண்ணனுங்க தங்கச்சிய காணலயேன்னு தேடினப்ப கிணத்துல பிணமா மிதக்கறத பார்த்து கண்ணீர் விட்டு அழுதாங்க.

 

thiruvannamalai temple festival

 

சடங்குகள் செய்து அடக்கம் செய்த அண்ணன் தம்பிகளுக்கு, தங்கச்சி ஏன் செத்துச்சின்னு தெரிஞ்சிக்க முடியல. குலதெய்வம் அய்யனார்க்கு கிடாவெட்டி வேண்டிக்கிட்டதும், அண்ணனுங்க 5 பேர் கனவுலயும் அய்யனார் வந்து உங்க பொண்டாட்டிகளாள மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா தற்கொலை செய்துக்கிச்சி. உங்க தங்கச்சி சாகும்போது, இனிமே நான் பிறந்த வம்சத்தல யாரும் எண்ணெய் பலகாரங்கள் செய்யகூடாது, மீறி பாலகாரங்கள் செய்தால் அந்த குடும்பத்தில் உள்ளவங்களுக்கு எண்ணெய் கொப்பளம் போட்டு இறந்து போய்டுவாங்கன்னு சாபம் விட்டிருக்குன்னு சொன்னார் அய்யனார். அதன்பின் இறந்துபோன சந்தியம்மாவ எங்க முன்னோர்ங்க தெய்வமாக்கி கோயில் கட்டி வணங்க தொடங்கினாங்க. நாங்களும் அப்படியே செய்யறோம். எங்கள் வம்சம் பெருகி இப்போது 5 கிராமங்கள்ள, வெளிநாடுகள்ள இருக்காங்க. நாடுவிட்டு நாடு போனாலும், எவ்வளவு வசதி வாய்ப்பிருந்தாலும் நாங்க வாழும் வீட்டில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டோம். எங்க வம்சத்தல பொறக்கும் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வீட்ல எதுவும் செய்யமாட்டாங்க. கல்யாணம் செய்துக்கிட்டு கணவன் வீட்டுக்கு போனபிறகு அவுங்கள அந்த சாபம் கட்டுப்படுத்தாது. அவுங்க புகுந்த வீட்ல எண்ணெய் பொருட்கள் செய்யலாம்.

 

20 ஆண்டுகளுக்கு முன்பு, சிலகுடும்பத்தார் சாபத்த மீறி எண்ணெய் பொருட்கள செய்தாங்க. அப்படி செய்து சாப்பிட்ட மூனாவது நாள் அந்த வீடுகளில் இருந்த எல்லார்க்கும் கொப்பளம், கொப்பளம்மா உடம்புல வந்துடுச்சி, ஆஸ்பிட்டல் போனாங்க சரியாகல. கடைசியா அய்யனார்க்கிட்டயும், சந்தியாம்மன் கிட்டயும் கிடா வெட்டறன்னு வேண்டனதுக்கப்பறம் அவுங்க உடம்புலிருந்த கொப்பளம் தழும்பேயில்லாம மறைந்தது. அதுக்கப்பறம் யாரும் அந்த விஷப்பரிச்சையில இறங்கறதேயில்ல என்றார்கள்.

 

thiruvannamalai temple festival

 

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் குலசாமி அய்யனார்க்கும், சந்தியம்மனுக்கும் திருவிழா எடுக்கிறார்கள் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள். திருவிழாவின்போது சந்தியம்மன் கோவில் வளாகத்தில் தங்கள் வம்சத்தில் பிறந்த வயதான பெண்மணி விரதமிருந்து எண்ணெய் சட்டியில கொதிக்கும் நெய்யில் வடை, பனியாரம் சுட்டு சந்தியம்மாளுக்கு படைப்பர். ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துக்கொள்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் அந்த வம்வசத்தில் பிறந்த பெண்கள், வீட்டுக்கு வெளியே சாலையோரம் அடுப்பு வைத்து எண்ணெய் வானலில் வடை சுட்டு தான் பிறந்த குடும்பத்துக்கு தருவார்கள், அப்போதும் வீட்டுக்கு வந்த மருமகள்கள் செய்யமாட்டார்கள். தீபாவளி, பொங்கல், அம்மாவாசை மட்டும்மல்ல அதன்பின் எப்போதும் வீடுகளில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டார்கள். குழந்தைகள் வடை வேண்டும், அப்பளம் வேண்டும் எனக்கேட்கும்போது கடைகளில் வாங்கி தந்து அவர்களை சமாதானம் செய்கிறார்கள்.

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள்” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai says People of North India have also realized it

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரின் போது பா.ஜ.கவும், பா.ஜ.க கூட்டணிக் கட்சியும் 370 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி உரையாற்றினாரே?

“அவருக்கு எதிர்க்கட்சி மாடம் கிடைக்கிறதா என்று பார்க்க சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் செய்த ஊழல்களை பற்றியெல்லாம் தென்னிந்திய மக்களுக்கு ஏற்கெனவே தெரியும். வட இந்திய மக்கள் கொஞ்சம் தெரியாமல் இருந்தார்கள். இப்பொழுது, வட இந்திய மக்களும் அதை உணர ஆரம்பித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள், தங்களுடைய தொகுதி குறித்த கோரிக்கைகள் எதையுமே அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. மற்ற எம்.பிக்கள் பேசுவதை மட்டும் காது கொடுத்து கேட்காத இந்தச் செவிட்டு அரசு, மோடி பேசுவது மட்டும் நாங்கள் கேட்டுக் கொண்டு வர வேண்டுமா? நாங்கள் அப்பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்கள்”.

தென்னிந்தியாவில் பா.ஜ.க வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்திற்கு வரும்போது வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?

“நோட்டா கூட போட்டி போட முடியாத சூழல்தான் கடந்த தேர்தலில் நடந்தது. இப்பொழுது நோட்டா அளவுக்கு வரலாம். இன்னும் சில நாட்களில் தேர்தல் வரப்போகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அதைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இந்தத் தொகுதியில் நிற்கக்கூடிய பாஜக வேட்பாளர் கூட இந்த ஊரைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். இங்கே பா.ஜ.க வலுவாக இருக்கிறது என்றால் இங்கே இருக்கக்கூடிய பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டியதுதானே. சென்னையிலிருந்து வேட்பாளரை கூட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

திருவண்ணாமலையில் ஏசி தரத்துடன் இருக்கின்ற பொது நூலகத்தைப் போல இளைஞர்களுக்கு வேறு என்ன ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

“நூலகங்களை விரிவுபடுத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் நூலகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அந்த நூலகத்தில் மக்கள் பயன் பெறுகின்ற, மாணவர்கள் பயன்பெறுகின்ற புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களைத் தயார்ப் படுத்தும் நோக்கத்துடன் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.  அது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்தத் திட்டம் தொடரும்”.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தொழிற்சாலைகள் அமைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த மாதிரி கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறீர்களா?

“நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய 507 கேள்விகளில் ஒன்றிய அரசின் கீழ் எத்தனை துறைகள் இருக்கிறதோ, அந்தத் துறைகள் அடிப்படையில் நான் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.  மாநில அரசு திட்டத்தின் மூலமாக, இந்தத் திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்”.

அண்ணாமலையார் கோவிலை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்களே?

“திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலை கோவிலுக்கு சிமெண்ட் சாலைகளை அமைச்சர் போட்டிருக்கிறார். இன்றைக்கு இந்தத் திருவண்ணாமலையை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். மொத்தமாக் திருவண்ணாமலை நகருக்கு அடிப்படை வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், கார்த்திகை தீப நாளில் 45 லட்சம் மக்கள் எதிர்கொள்ளும் அளவிற்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதில் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பாக அந்தந்த நிதிகளை பயன்படுத்தி என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்”.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழக முதலமைச்சர், அமைச்சர் உதயநிதியும் இதுவரைக்கும் விவசாயி குறித்துப் பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

“விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி, நமது முதலமைச்சர்தான் தள்ளுபடி செய்தார். இந்தியாவிலேயே விவசாயிகள் கடனை முதன் முறையாக தள்ளுபடி செய்தது டாக்டர் கலைஞர்தான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது கலைஞர்தான். அவர் வழியில் நமது முதலமைச்சர், விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த இரண்டரை வருஷத்தில் 2 லட்சம் மின்சாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

இப்போது, தேர்தல் அறிக்கையில் விவசாய கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். இதைவிட விவசாயிகளைப் பற்றி யார் அதிகமாக பேசுவது?. மோடி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? விவசாய கடன் தள்ளுபடி பற்றி மோடியும், எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்காகவே தனிப்பட்ட தனி பட்ஜெட்டை போட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொண்டிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...