Skip to main content

 "உருவ வழிபாடு கிடையாது, கதவே கடவுள், நம்பிக்கையே தெய்வம்"

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

ஆலயங்கள் அனைத்திலும் தினசரி பூஜைகளுக்கு மூலவர் சிலையும், திருவிழா காலங்களில் வீதி உலாவிற்கு உர்ச்சவர் சிலையும் இருக்கும். ஆனால் மூலவர், உர்ச்சவர் சிலையே இல்லாமல் கருவறையின் கதவுகளையே கடவுளாக வழிபட்டு வருகின்றனர். அந்த அபூர்வ கோயிலுக்கு ஆச்சர்யம் ஊட்டும் கதைகளும் உள்ளன. மலைகளும் காடுகளும் நிறைந்த தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தேவதானபட்டி கிராமம். இக்கிராமத்தில் மழைக்காற்று இதமாக வீச மஞ்சலாற்று கரையில் அமர்ந்துள்ளது மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வஜ்ஜிரதந்தன் என்கின்ற அசுரனை கொண்ற அம்மன் அங்கேயே தவம் இருகின்றது என்றும், காற்றாற்று வெள்ளத்தில் மிதந்து வந்து அதிசயங்கள் பல புரிந்தது என்றும் அக்கிராம மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

 

god

 

அம்மன் ஆற்றில் மூங்கில் பெட்டியில் மிதந்து வரும் வேளையில் மூங்கிலை கொண்டு அணைக்கட்டி அந்த அம்மனை கரைசேர்த்ததாகவும் கூறுகின்றனர். பூட்டிய கதவோடு குச்சி வீட்டில் தான் அம்மன் குடி இருக்கிறாள். பக்தர்களுக்கு ஜோதிவடிவில் அருள்தரும் மூங்கிலணை காமாட்சியம்மன் மாவட்டம் முழுவதும் பெருமை சூட்டும் விதமாக அமைந்துள்ளன. கருவரையின் கதவுகளுக்கு (கடவுளாக வழிபடும் கதவுக்கு) இருபுறங்களிலும் அனையாத ஜோதி உள்ளது. அந்த ஜோதியையும், கதவையுமே கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இக்கருவறை மன்னாடியார் கோபத்தின் காரணமாக இக்கருவறை பூட்டப்பட்டது. அக்கதவின் முன்பு நாகப்பீடம் அமைத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். காஞ்சிகாமாட்சியம்மன் கோவிலில் இருப்பது போல் பூஜை மண்டபத்தில் பல்லியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளன.

 

god



உடைக்காத தேங்காய், உரிக்காத வாழைப்பழம் மட்டுமே அம்மனுக்கான பூஜை பொருட்கள். அம்மனைச் சுற்றிலும் இல்லறத்தார்கள் வசிக்கக் கூடாது, கோழி கூவும் சத்தம் கேட்க்கக்கூடாது, உரல் உலக்கை இடிக்கக்கூடாது என்ற சத்தியத்தின் அடிப்படையில் தேவதானபட்டியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அம்மன் குடியிருக்கும் வீட்டை யாரும் பார்க்க முடியாது. அம்மன் இரவு கணவில் வந்து சொன்ன பிறகே பிரித்து கூரையை(குச்சி) மேயப்படுகின்றது. முறையாக விரதம் இருந்த இராஜகம்பளத்து நாயக்கர்கள் கண்களை கட்டிக்கொண்டு காமாட்சி புல்லைக் கொண்டு புதியக் கூரை அமைக்க வேண்டும் என்ற ஒரு பாரம்பரிய கட்டுப்பாட்டையும் வகுக்கின்றனர். அம்மன்-வச்சிரதந்தனை வதம் செய்தல் மற்றும் உருவான வரலாறு. 

 

idol worship



முன்னொரு காலத்தில் காஞ்சனா ஆரண்யப் பகுதியான வங்கீசபுரி நகரத்தை சூலபாணி என்ற அசுரன் மன்னனாக ஆட்சி செய்து வந்தான். சூலபாணி மன்னன் ஒரு சிவ பக்தன். வெகுகாலமாகக் குழந்தைப் பேறின்றி சிவனை வணங்கித் தவம் புரிந்தான். அவனுக்கு வச்சிரதந்தன் என்ற மகன் பிறந்தான். சூலபாணி மன்னன் நோய்  வாய்ப்பட்டு இறந்தபின் அவனது மகன் வச்சிரதந்தன் மன்னனான். வச்சிரதந்தன் ஒரு கொடுங்கோலனாகி மக்களையும், மற்றவரையும் கொடுமைப்படுத்தினான். 

 

worship



வச்சிரதந்தனால் கொடுமைப்படுத்தப்பட்ட தேவர்களும் முனிவர்களும் பிரம்மனிடம் சென்று முறையிட்டார்கள். பிரம்மன் இந்திரனை அழைத்து அசுரன் வச்சிரதந்தனை அழித்துர அனுப்பிவைத்தார்.வச்சிரதந்தன் தேவேந்திரனுடன் போர் தொடுக்கச் செல்லும் முன், அவன் பட்டத்துராணி கோட்டைக்குள் கூகையும் ஆந்தையும் கூவுவதாக தீக்கனாக் கண்டதாக கூறி போருக்குப் போகவேண்டாமென மன்னனிடம் கூறுகிறான். தேவேந்திரன் வச்சிரதந்தனோடு போர் தொடுத்தான். வச்சிரதந்தனின் தளபதி துட்டபத்தி தேவேந்திரனின் வஜ்ஜிராயுதப் படையைத் தோற்கடித்து அவனது வெள்ளை யானையையும் பறித்துக்கொண்டு விரட்டினான். தோல்வியடைந்த இந்திரனும், முனிவர்களும் காஞ்சிபரத்தில் காமாட்சி வடிவில் கோவில் கொண்டுள்ள அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டார்கள்.

 

god



காமாட்சி, துர்க்கையை அழைத்து வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தாள். துர்க்கை, அசுரன் வச்சிரதந்தனுடன் போர் செய்தாள்.அசுரன் துர்க்கையை எதிர்த்து கடுமையாக போரிட்டான். வச்சிரதந்தனின் தலையைத் துர்க்கை வெட்டி வீழ்த்தினாள். வச்சிரதந்தன் தலை வெட்டுண்டு வீழ்ந்த போதும், தன்னுடைய மாய சக்தியினால் புலியாக, சிங்கமாக, பல்வேறு மிருகங்களின் வடிவில் மீண்டும் உயகர்த்தெழுந்து போரிட்டான்.இறுதியில் காமாட்சி தேவியே களத்தில் இறங்கி, அசுரனின் தலையைக் கொய்து அவன் மீண்டும் உயிர்பெறாத வண்ணம், தலையை மிதித்து நசுக்கினாள். அசுரனின் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறியது. இறுதியில் அசுரனை அழித்து வதம் செய்தாள் காமாட்சி. அசுரன் வச்சிரதந்தனின் மனைவியர் அவனுடன் உடன்கட்டையேறி உயிர் நீத்தனர் என்று வரலாறு பேசப்படுகின்றது.


கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்தில் உள்ளவர்கள் இருக்க வேண்டாம். உரல் சத்தம் , உலக்கைச் சத்தம் கேட்காத தொலைவில் குடியிருந்து என்னை வணங்கி வாருங்கள். நெய் விளக்கைத் தவிர எனக்கு வேறு விளக்கு வேண்டாம். தேங்காய் பழம் நிவேத்தியம் போதும். எனக்கு அன்ன நிவேத்தியம் வேண்டாம் என்று அம்மன் கூறினாள் என்ற வரலாறும் உண்டு. மஞ்சளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அன்னை காமாட்சி குழந்தை வடிவத்தில் ஒரு மூங்கில் பெட்டியில் மிதந்துவர, அதனை மூங்கில் புதரொன்று தடுத்து நிறுத்திய இடத்தில் தெய்வமாக காமாட்சி எழுந்தருளிய இவ்விடத்திலேயே கோவில் கட்டப்பட்டது. 

மூங்கில் அணை கட்டி நின்றதால் அன்று முதல் இத்தெய்வம் "மூங்கிலணைக் காமாட்சியம்மன்" எனப் பெயரிட்டு வழங்கப்பட்டது. காமாட்சியம்மனை மூங்கில் புதரருகே கண்டபோது மெய்மறந்து, பக்திப்பரவசத்தில் தேங்காயை உடைக்காமலும், வாழைப்பழத்தை உரிக்காமலும் பூஜை செய்துவிட்டனர் பிறகு அத்தவறை உணர்ந்த மக்கள் , ஈனாத பசுவின் மடியில் பால் அருந்திய அன்னையின் விருப்பம் இதுவாகும் என்று, அன்று முதல் உடைக்காத தேங்காயையும், உர்க்காத வாழைப்பழத்தையுமே இவ்வாலத்தில் வைத்து வணங்கி வருகின்றனர். அசுரனை வதைத்தபின், பாவம் தீர்க்க, காமாட்சி தவமிருந்த மலைப்பகுதியில், காமாட்சியம்மனுக்குத் தனியாக ஒரு சிறு கோவில் இருக்கிறது. மலையின் மேல் பகுதியில் இருப்பதால் இக்கோவில் அம்மா மெச்சு என்றழைக்கப்படுகிறது. இது தேவதானபட்டியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தலையாறு நீர்வீழ்ச்சியின் அருகிலுள்ளது.

ஆலயத்தின் சிறப்புகள்:

1) அம்மனுக்கு விக்கிரகங்கள் கிடையாது. குச்சிவீட்டின் கதவுக்கு மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
2) தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதில்லை. 
3) குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
4) இக்கோயிலில் கோபுரங்கள் எதுவும் கிடையாது. கொடிமரம், பலிபீடம் எதுவும் கிடையாது.

இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தால் இயங்கி வருகிறது. ஒரு பரம்பரை அறங்காவலரும், இரண்டு பரம்பரையில்லாத அறங்காவலர்களும் அடங்கிய குழுவும் இருக்க வேண்டும் எனவும்,  பரம்பரை அறங்காவலர்களாக திரு. என்.வி.கனகராஜ் பாண்டியனும், திரு.என்.வி.தனராஜ் பாண்டியனும் இருவரில் ஒருவர் சுழற்ச்சி முறையில் மாறிமாறி இருக்க வேண்டும் என்று மதுரை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை ) எச்.ஏ.73/1978 இல் நிர்வாகத் திட்டத்தின்படி இத்திருக்கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார் வி.கனகராஜ் பாண்டியன் அவர்கள்.
 


பா.விக்னேஷ் பெருமாள்.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.