Skip to main content

மனநிம்மதியுடன் வாழ என்ன பரிகாரம்?

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

மனிதர்கள் எப்போதும் நிம்மதியான உணர்வுடன் இருக்கவே ஆசைப்படுவார்கள். அப்படி மனநிம்மதி இல்லாமல், எப்போதும் பரபரப்புடன் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகளும் இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் மனபலத்திற்கான கிரகம் சூரியன் சரியாக இருந்தால், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவர் தைரியத்துடனும், நிம்மதியுடனும் இருப்பார்.

ஒரு ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால், அந்த ஜாதகர் மிகுந்த தைரியசாலியாக இருப்பார். லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்தால் மனநிம்மதி இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பார். ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக அல்லது நீசமாக இருந்தால்- 2-ஆம் அதிபதி கெட்டுப்போயிருந்தால், அவருக்கு குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் கடன் வாங்கி, அவருக்கு பிரச்சினையைத் தருவார்கள். சந்திரன் பலமில்லாமல் இருப்பதால், அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. மனஅமைதி இருக்காது.

 

god



ஜாதகத்தில் 3-க்கு அதிபதியான கிரகம் 2-ல் இருந்து அதை பாவ கிரகம் பார்த்தால், அவருக்கு சகோதரர்களால் பிரச்சினைகள் உண்டாகும். அதனால் அவருக்கு மனநிம்மதி இருக்காது. சரியாகத் தூக்கம் வராது. எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பார். 12-ல் சந்திரன் இருந்து, 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பார். எல்லா விஷயங்களுக்கும் கோபப்படுவார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்படும். மனநிம்மதி கெடும்.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி 2-ல் இருந்தால், இளம்வயதிலேயே அவருக்குப் பிரச்சினைகள் இருக்கும். சரியாகப் படிக்க முடியாமல் போய்விடும். அதனால் சாதாரண வேலை பார்த்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவர். மனதில் சந்தோஷம் இல்லாமல் இருப்பார். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு அல்லது சுக்கிரன், புதன், ராகு அல்லது சூரியன், சுக்கிரன், சனி 8-ல் இருந்தால், அவர் பல பிரச்சினைகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பார். மனதில் அமைதி இருக்காது. திருமண வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுக்குடும்பத்தில் அவரால் வாழமுடியாது. பலர் அலைந்து திரியும் வேலைகளைப் பார்ப்பார்கள். அதன் காரணமாக மனக்கவலையுடன் காட்சியளிப்பார்கள். சந்திரனுக்கு முன்பும் பின்பும் பாவ கிரகங்கள் இருந்தால், அந்த மனிதருக்கு பாவ கர்த்தாரியோகம் உண்டாகும். அதனால் மனஅமைதி இருக்காது.

 

god



சந்திரனும் சனியும் சேர்ந்து 5-ல் இருந்தால், அவருக்கு மனநிம்மதி இருக்காது. சந்திரனும் சனியும் சேர்ந்தால், விஷ யோகம் உண்டாகும். 5-ஆம் பாவத்தில் விஷ யோகம் இருந்தால், அவர் பலவிதமான சிந்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அதனால் சரியாகத் தூக்கம் வராது. மனதில் அமைதியே இல்லாமல் இருப்பார். ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருந்து அதை குரு பார்த்தால் அல்லது லக்னத்திலிருந்து கேந்திரத்தில் குரு இருந்தால் அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எதையும் தாங்கிக்கொள்வார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் சுயவீட்டில் அல்லது உச்சமாக இருந்தால் அல்லது சந்திரனை குரு பார்த்தால் அல்லது சந்திரனிலிருந்து கேந்திரத்தில் குரு இருந்தால், அந்த மனிதர் நல்ல மனஅமைதியுடன் இருப்பார். தூக்கம் சரியாக வரும். எப்போதும் நிம்மதியாக இருப்பார்.

பரிகாரங்கள்

தினமும் காலையில் கண் விழித்தவுடன், தன் உள்ளங்கையில் கடவுள்கள் இருப்பதாக எண்ணி, அதைப் பார்த்து வணங்கவேண்டும்.

உணவில் பித்தத்தை உண்டாக்கும் காரம், புளிப்பு, வறுக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றைக் குறைக்கவேண்டும்.

வடக்கு அல்லது மேற்கில் தலைவைத்துப் படுக்கக்கூடாது.

தினமும் சாப்பிட்ட பிறகு சிறிது வெல்லம் சாப்பிட வேண்டும். அதனால் உணவு ஜீரணமாகும்.

தினமும் காலையில் சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். சிவலிங்கத்தின்மீது சிறிது தேனை ஊற்றி மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை கூறவேண்டும்.

லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிவது நல்லது.

வீட்டில் தேவையற்ற பொருட்கனை நீக்கவேண்டும். கறுப்பு நிற ஆடையைத் தவிர்க்கவும்.

தினமும் படுக்கும்போது சிவனின் பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும்.

கட்டிலுக்கு எதிரே முகம்பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.

தினமும் பசுவுக்கு உணவளித்து, அதைத் தொட்டு வணங்குவது நல்லது.

குருநாதர் மற்றும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது நன்று.

மேற்கண்டவற்றைக் கடைப்பிடித்தால் மனநிம்மதியுடன் சந்தோஷமாக வாழலாம்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.