Skip to main content

காட்டிற்குச் சென்ற ஆறாம் நாள் இரவு... துயரம் தாங்க முடியாத தசரதர்...

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

முனைவர் இரா. இராஜேஸ்வரன்
 

இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சி யடையும் அதே மனம் துன்பம் ஏற்படும் போது, "கடவுளுக்கு கண் இல்லையா?', "எல்லாம் என் தலைவிதி', "என்ன பாவம் செய்தேனோ?' என பலவாறு புலம்புவ துண்டு. தர்மசாஸ்திர நியதிப்படி நாம் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. கர்ம வினைக்கேற்ப பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனவைருக்கும் பொருந்தும்."நானிலத்தோர் தந்தாய்' (பூமியிலுள்ள எல்லாருக்கும் தந்தைபோன்று இருப்பவனே) என "திருவடிக்கட்டு' படலத்தில் இராமன் தன் தந்தையான தசரதன் (தயரதன்) பற்றி பெருமிதத்துடன் கூறியுள்ளார். அப்பேற்பட்ட தசரத மகாசக்கரவர்த்தி இளைஞனாக இருந்தபோது செய்த பாவச்செயலுக்காக பின்னாளில் அயோத்தியின் அரசனாக இருந்தபோது அந்த கர்ம வினையின் பலனை அனுபவிக்க வேண்டிய தாயிற்று. "புத்திர சோகம்' என்னும் கொடுமையை அனுபவித்து, அந்தத் துயரம் தாங்காமல் இறந்தார் என்பதை இராமாயணத்தின் அயோத்தியா காண்டம் மூலம் அறியலாம். ஆக விதியென்பது எல்லாருக்கும் பொதுவானது.

temple

பங்குனி மாதம், நவமி திதி, புனர்வசு நட்சத்திரம்கூடிய நல்லநாளில், ஐந்து கோள்களும் உச்சநிலையில் இருக்கும் நல்ல நேரத்தில், கர்க்கடக லக்னத்தில் தசரத மகா சக்கரவர்த்திக்கும், கௌசல்யா தேவிக்கும் (கோசலை) மகனாய்ப் பிறந்தார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.அயோத்தியின் அரசனாக இருக்க வேண்டிய தருணத்தில், மரவுரி தரித்து பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இராமன் காட்டிற்குச் சென்ற ஆறாம் நாள் இரவு... துயரம் தாங்க முடியாத தசரதர் தன் மனைவி கௌசல்யையிடம் புலம்பினார். இந்த புத்திர சோகம் ஏன் தனக்கு ஏற்பட்டது என்பதை யோசித்தபோது, இளம்வயதில் தான்செய்த தவறான செயலால் ஒரு வாலிபத் தவசியின் பார்வையற்ற தந்தையின் சாபம் நினைவுக்கு வந்தது. அதை கௌசல்யையிடம் விவரித்தார்.

நான் இளைஞனாக இருந்தபோது வேட்டையாடுதில் விருப்பமுள்ளவனாக இருந்தேன். அதிலும் குறிப்பாக இரவில் மறைந்திருந்து, மிருகங்களின் சப்தம்வரும் திசையை நோக்கி கூரிய அம்பால் குறிவைத்துக் கொல்லும் "சப்ததேவனம்' என்னும் அம்பு வித்தையில் அதிகம் பயிற்சி பெற்றிருந்தேன். ஒருநாள் மிருகங்களை வேட்டையாட சரயுநதியின் கரையில் இருக்கும் காட்டிற்கு மழைக்கால இரவு நேரத்தில் சென்றேன். நீண்ட நேரம் காட்டில் காத்திருந்த போது நதியில் ஏதோ ஒரு காட்டெருமையோ, யானையோ நீர் அருந்துவது போன்ற சப்தம்கேட்டு அந்த திசையை நோக்கி குறிவைத்து அம்பைச் செலுத்தினேன். அடுத்த வினாடி "ஐயோ!' என்கிற மனித அபயக் குரல் கேட்டது. தவறான கணிப்பில் ஒரு மனிதனைக் கொன்று விட்டோமே எனப் பதறி அந்த இடத்திற்குச் சென்றேன். குறுகிய வாயையுடைய குடத்தில் நீரை எடுக்கும்போது ஏற்படும் சப்தம் எனக்கு ஒரு யானை நீரருந்தும்பொழுது ஏற்படும் சப்தமாகத் தெரிந்ததால், அறியாமல் அவசரத் தில் ஒரு வாலிப மனிதனைக் கொன்றுவிட்டேன். ஒரு பாவமும், தவறும் செய்யாத அந்த வாலிபன் பெயர் சிரவணன். (சிரவணகுமார்). தவ வாழ்க்கையுடன் பார்வையற்ற தன் வயதான பெற்றோரை, தராசு போன்று கூடையில் இருபுறம் உட்காரவைத்து தோளில் சுமந்து வருபவன் என்பதை அறிந்தேன். பெற் றோர் தாகமாக இருக்கிறது எனக் கூறியதால் தண்ணீர் எடுக்கவந்த செய்தி யைத் தெரிவித்து விட்டு, அவர்கள் தாகமாக இருப்ப தால் உடனே தண்ணீர்கொண்டு தருமாறு கூறினான். தவறான கணிப்பில் அம்பெய்ததற்கு அவனிடம் மன்னிப்புக் கேட்டேன்.

temple

இறக்கும் தறுவாயிலும் தான் இறப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல், இனி தன் பெற்றோரை யார் பாதுகாப்பார்கள் என்பதில் அந்த வாலிப தவசிக்கு அக்கறை இருந்ததைக் கண்டேன். அவனுடைய பெற்றோரை நாள் கவனமாகப் பார்த்துக் கொள்வேன் எனச் சொல்லி அவனின் தலையைக் கண்ணீருடன் தடவிக்கொடுத்தேன்.ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிறிது நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டது. அந்த வாலிப தவசி சொன்னதுபோல் அவனது பெற்றோர் கள் இருந்த இடத்தைக் கலக்கத்துடன் அடைந்தேன். அந்த முதியவரின் பெயர் சலபோசனன். இறைவழிபாட்டையே முக்கியப் பணியாகக்கொண்டு பல இடங் களுக்குச் சென்று வருபவர்கள். தண்ணீர் எடுக்கச்சென்ற தங்களின் மகன் நீண்டநேரமாக வரவில்லையென்கிற தவிப்பு அவர்களிடம் இருந்ததை அறியமுடிந்தது.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.