Skip to main content

கனவுகளின் ரகசியங்கள்!

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

மனிதனின் மனம் ஒன்றுதான் என்றாலும், அதைப் புரிந்துகொள்ள மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. உணர்வு மனம்

நாம் செய்யும் வேலைக்கு ஏற்றாற்போல் உணர்வை மாற்றிக்கொள்வது உணர்வு மனம். உதாரணமாக, புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் மனம் படிக்கும் உணர்வுக்கு மாறுவது.

2. அடி மனம்

ஒருவரின் இயல்பான மனதைக் குறிப் பிடுவது. இதை ஒருவரின் உண்மையான சொரூபம் என்றும் சொல்லலாம். ஒருவரின் அடிமனதின் குணங்கள், உணர்வு மனதோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இது ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வைக்கும்.

3. ஆழ்மனம்

ஒருவரின் உண்மையான பலம் என்ன என்பதை ஆழ்மனமே தெரிவிக்கும். ஆழ்மனதை உணர்வு மனமும், அடி மனமும் சாதாரண நேரத்தில் செயல்பட விடாது. ஒருவர் ஆழ்மனதை செயல்படுத்தும்போது மட்டுமே நாம் யார்? ஏன் பிறந்தோம்? எதற்காகப் பிறந்தோம்? என்ன செய்கிறோம்? எதை நோக்கிப் போக வேண்டும் போன்ற அனைத்துக் கேள்விக்கும் விடைபெற முடியும். ஒருவரது சஞ்சித கர்மாவின் நிலையை இந்த ஆழ்மனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

god



இந்த மூன்றுநிலை மனித உணர்வுகளே கனவுகளாக வருகின்றன. கனவு என்பது நமக்குக் கிடைக்காத, நம்மால் செயல்படுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடு. கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் இனி நடக்கப் போவது, முன்னால் நடந்தது என்ற இரண்டு வகையாகவே இருக்கும். சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளும் வரும். சிலர் தமது எதிர்காலம் பற்றி பகல் கனவு காண்பார்கள். சிலர் ஆழ்மன உணர்ச்சியை தியானம், யோக போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தி "நாம் யார்' என்ற கேள்விக்கு "இறைவனின் பரிணாம்மே நாம்' என்ற விடையறிந்து, தங்களுக்கு வேண்டிய நல்ல பலன்களை சஞ்சித கர்மாவாக மாற்றிப் பிறவிப் பயனை அனுபவிக்கிறார் கள். இது ஒருபுறம் இருக்க, மருத்துவரீதியாக சீரான தூக்கம் இல்லாதவர்களை, கனவு என்பது மன அழுத்தம், மனநோயில் ஆழ்த்திவிடுகிறது. இரவில் தூங்கச் செல்லும்போது என்ன சிந்தனையில் இருக் கிறோமோ அதுதொடர் பான கனவே வரும். மிகக் குறிப்பாக இக்காலத்தில் டிவி சீரியல்களே கனவு களுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

கனவுகள் பலருக்கு மனபாரத்தைக் குறைக்கும் வடிகாலாகவும் இருக்கின்றன. கனவுகள் மனிதனை ஒரு தனி உலகிற்கு அழைத்துச் செல்கின்றன. இதனைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகள் மட்டுமே பின்னால் நடக்கவிருப்பதை முன்னரே உணர்த்தும். குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த சம்பவங்கள் அவர்களது கனவில் நிகழ்ந்ததைப்போலவே வாழ்வில் நடக்கும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து குருபகவானால் பார்க்கப்பட்டால், பின்னால் நடக்கப் போவதை முன்னரே கனவுமூலம் அறியும் சக்தி படைத்தவர்கள். பலமுறை சிந்தனை செய்தும், முயற்சி செய்தும் கிடைக்காத புதிர்களுக்கான விடைகள் சிலருக்கு கனவில் விடையாகக் கிடைக்கும். இன்னும் சிலருக்கு அவர்கள் செய்த தவறுகள் கனவில் வந்து தவறை உணரவைக்கும்.

அதீத நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையும்கூட இரவில் கனவுகளாக வந்து தொல்லை தரும். கனவில் மனிதன் தன்னை பெரிய வெற்றிவீரனாக நினைத்துக்கொள்வதால் அவனுக்கு யாரும் எதிரியே கிடையாது. அவன் நினைத்ததைப் போல எல்லாமே நடக்கிறது. இதனால் அக்கனவில் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. மனிதனின் பலவீனமான எண்ணங்களும் கனவு களை வரவழைக்கும். எனவே மனதிற்குள் எதை விதைக் கிறோமோ அதுவே இரவில் கனவாக வந்து விளைகிறது.

ஒருவர் படுத்தவுடன் எந்த பிரச்சினையுமின்றி நிம்மதியாகத் தூங்குகிறார் என்றால் 12-ஆம் இடமான அயன சயன ஸ்தானத்தில் சுபகிரக சம்பந்தம் மட்டும் இருக்கும். தானும் மகிழ்ச்சியாக இருப் பதுடன் மற்றவர்களையும் சந்தோஷப் படுத்துவார். கவலைகள் இவரை பாதிக்காது. நிம்மதியாக உறங்கக்கூடியவர்.

கனவுக்கான ஜோதிடக் காரணங்கள்

கனவு என்பது அயன சயன ஸ்தானமான 12-ஆம் இடமும், மனோ காரகனாகிய சந்திரனின் சம்பந்தமும் சேர்ந்தது. ஒருவரின் கனவு, மனம் சார்ந்த நல்லது- கெட்டது அனைத் திற்கும் சந்திரனே காரணம். அச்சந்திரன் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக் கொண்டும், சந்திரனுடன் சேர்க்கை பெற்ற மற்ற கிரகங்களைக்கொண்டும், சந்திரனைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் ஒருவரது மனம் எவ்வாறு இருக்கும்? அவருக்கு கனவுப் பிரச்சினை உள்ளதா? தூக்கமின்மையால் அவதிப்படுகிறாரா என்று எளிதில் சொல்லமுடியும்.

சந்திரன் பாவகர்த்தாரி தோஷம் பெற்றால் அசுபக் கனவும், சுப கர்த்தாரி யோகம் பெற்றால் சுபக்கனவுகளும் இருந்துகொண்டே இருக்கும். சந்திரன் ராகு- கேதுவோடு சம்பந்தம் மற்றும் 6, 8, 12-ல் மறைபவர்களுக்கும் கனவு வரும்.

 

god



ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் 12-ஆம் அதிபதி இருந்தாலும் அல்லது லக்னாதிபதி 3, 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தானங் களில் இருந்தாலும் அவர்களுக்கு கனவுகள் வரும். அத்துடன் லக் னாதிபதி அஸ்தங்கம், நீசம், வக்ரம் பெற்று கோட்சார, தசாபுக்தி நாதனும் சம்பந்தம் பெறும்போது அதிக கனவுகள் வரும். அதனால் நோய்த்தாக்கம், தூக்கமின்மையும் வரும். இவர்களுக்குச் செய்யும் மருத்துவ சோத னையில் எந்தக் குறையும் இருக்காது. ஆனால் ஜாதகர் நோய்த் தாக்கத்தில் இருப்பார்.

ஒரு ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் பாவங்கள் வலிமை பெற்று 12-ஆம் பாவ சம்பந்தம் பெறும்போது சுபக் கனவுகளும், 3, 6, 8, 12-ஆம் பாவகம், அதிபதிகள் தசை நடத்தும்போது ரோகம், இழப்பு, மரணம் தொடர்பான கனவு களும் வரும். மிகக்குறிப்பாக சந்திர தசை, சனிபுக்தி அல்லது சனி தசை, சந்திரபுத்தி நடக்கும்போது மன சஞ்சலமான கனவுகள் மிகுதியாக இருக்கும். இந்த காலகட்டங்களில் வரும் கனவு தூங்கி எழும்போது மறந்துவிடும் அல்லது அரைகுறையாக நினைவிருக்கும். 4-ஆம் இடமான சுகஸ்தானம் 12-க்கு திரிகோணம் என்பதால், சுகஸ்தானத்தை கோட்சாரத்தில் அசுப கிரகம் தொடர்பு பெறும்போது (3-க்கு 2) தூக்கமின்மை மற்றும் குடியிருக்கும் வீட்டில் பிரச்சினை போன்ற காரணத்தால் அசுபக் கனவு வரும். சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற பெண் கிரக சம்பந்தம் ஏற்படும்போது பெண்கள் தொடர்பான கனவுகள் அதிகம் வரும்.

சனி, ராகு, கேது போன்ற கர்மவினையை வெளிப்படுத்தும் கிரகங்கள் 6, 12-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் பெற்று செவ்வாய் சம்பந்தமும் பெற்றால் அடிதடி, சண்டைக் கனவு வரும். 6, 12-ல் ராகு, சனி சம்பந்தம் பெறும்போது இறந்த முன்னோர்களின் கனவு வரும். 6, 12-ல் செவ்வாய், ராகு சம்பந்தம் பெறும்போது மிருகங்கள் கனவு வரும். உடலில் கபம், வாதம், பித்தம், வாயு தொடர்பான பிரச்சினை, அஜீரணக் கோளாறு தந்து கனவை உருவாக்கும்.

ஒரு குடும்பத்தில் சாதாரண மரணமோ அல்லது திடீர் மரணமோ ஏற்பட்டிருந்தால், அதற்கான கர்மங்களைத் தொடர்ந்து 12 நாட்கள் செய்வார்கள். ஏராளமான பணத்தை செலவுசெய்தும், கடுமையான நியமங்களைக் கடைப்பிடித்தும் 12 நாட்கள் செய்யப்பட்ட இறுதிக் கர்மக் காரியங்களால் அந்த ஆத்மா நற்கதியை அடைந்தாரா? இல்லையா என்பதை சில கனவுகள்மூலம் அறிந்துகொள்ளலாம்.

நல்ல கனவு வந்தால் ஆத்மா நற்கதி பெற்றது என்றும், தீய கனவு வந்தால் நற்கதி அடைவதில் சிக்கல் இருக்கிறது என்றும் அறிந்துகொள்ள வேண்டும். நல்ல கனவு களென்றால் பழுத்த பழங்களுடன் மரம், காளை, கருடன், மயில், தேவர்கள், அவர்களின் வாகனங்கள் கனவில் தோன்றுவது. கர்மா நடைபெற்ற வருடத்தில் கர்மா செய்தவரின் மகன் அல்லது மகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது சுபப் பலன்.

ஓரிடத்தில் படுத்திருக்கும் நபர் காலை எழும்போது இடம் மாறி எழுவது, தனது குடும்ப நபர்கள் தன்னைவிட்டோ, தன் குடும் பத்தைவிட்டோ வெளியேறுவது, யாரோ ஒருவர் தன்னைத் தூக்கிச்செல்வது, உண்ணும் உணவை மற்றவர் அபகரித்துச் செல்வது போன்ற கனவுகள் அசுபமாகும். இதுபோன்ற கனவுகள் வந்தால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, இறந்தவருக்கு நற்கதி ஏற்படவேண்டும் என சங்கல்பம் செய்து, ஏழை எளியவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தானமாகக் கொடுக்கலாம்.

சுபக் கனவுகள்

ஆலய தரிசனம், கடவுளுக்கு அபிஷேக ஆராதனை, புனித நீராடுதல், நீர் நிலைகளைக் கடந்து செல்லுதல், புத்தாடை, புது ஆபரணம் அணிவது, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, விருந்துணவு சாப்பிடுதல், ஒளியுடன் கூடிய பிரகாசமான பொருள்களைக் காண்பது, மலைமேல் ஏறிச்செல்வது, மழை பெய்தலைக் காணுதல், பயிர்களைக் காணுதல், கடவுள் சிலைகள், படங்கள், உயிருடன் இருக்கும் தாயார்- தகப்பனார், மனைவி- குழந்தைகள், கன்னிப் பெண், பறவை, சிகப்பு, வெண்மை, மஞ்சள் நிற மலர்கள், அலங்காரம் செய்த பெண், பசு, காளை, கண்ணாடி, பலாமரம், தாமரைப்பூ, பால், கோழி, அன்னம், கொக்கு, பிராமணர், தேர், சப்பரம், திருவிழா, கோபுரம் ஆகியவை சுபக் கனவுகளாகும். இதனால் நன்மை ஏற்படும். 
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.