Skip to main content

சார்வரி வருடம் முழுக்க என்ன பலன்? இன்னல்கள் தொடருமா? 

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
sas



2020 ஏப்ரல் 14 அன்று தமிழ் வருடமான சார்வரி வருடம் தொடங்கியது. இந்த சார்வரி வருட பாடல்:-
 

சார்வரி ஆண்ட தனிற் சாதி பதினெட்டுமே 
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றிச் சாவார் இயம்பு.
 

என இவ்வருடத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 
 

ஒரு வருடத்தின் தன்மையைப் பற்றி இவ்வளவு மோசமாக கூறியிருக்கிறார்கள் எனில் அதில் விஷயம் இருக்கத்தான் வேண்டும். 
 

இந்த சார்வரி வருடம் முழுவதும் உள்ள கோட்சார நிலை சற்றே திகிலடையச் செய்கிறது.
 

சார்வரி வருடம் 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் வரை இருக்கும். 
 

முக்கியமான கோட்சார நிகழ்வுகளை காண்போம். 
 

1. 2020 மே 4ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு மாறுவார். இதன் மூலம், செவ்வாய், சனி, குரு என மூன்று கிரக சேர்க்கையிலிருந்து, செவ்வாய் நகர்ந்து விடுவார்.


மேலும் செவ்வாய் சூரியனை பார்க்கும் பார்வையும் விலகிவிடும். இப்போது சூரியன், குரு, சனி என மூன்று கிரகமும் ஹேப்பி அண்ணாச்சிதான். இந்த செவ்வாய் நகர்வு உலகத்தை லேசாக மூச்சுவிட செய்யும். உலக ஆரோக்கியத்தில் சிறு கீற்று ஒளிரும்.
 

2. ஜுன் 21 அன்று சூரிய கிரகணம் நடக்கிறது. அன்று சூரியன், சந்திரன், ராகு என மூன்று கிரகங்களும் மிருக சீரிட நட்சத்திரத்தில்  ஒன்று கூடி நிற்கிறார்கள். மிருக சீரிடம் என்பது செவ்வாய் சார நட்சத்திரம். செவ்வாய் இந்த நேரத்தில் மீன ராசியில் அமர்ந்துள்ளார். அவர் தனது நான்காம் பார்வையால் சூரியன், சந்திரன், ராகுவை பார்க்கிறார். இவர்களுடன் வக்கிர புதனும் உள்ளார். இது ஒரு மோசமான அமைப்பு.
 

3. ஆனி மாதம் அதாவது ஜூன் 18 முதல் ஜூலை 16 வரை செவ்வாய் பார்வையின் சூரியனும் ராகுவும் இருப்பர். கேதுவும் சூரியன், ராகுவை பார்வையிடுவார். இதன் மூலம் செவ்வாய், சூரியன், ராகு, கேது எனும் பாவிகள் சேர்க்கை இருப்பதாக ஆகிறது. இது கெடுதல் செய்யும் அமைப்பு. இவர்களை ஒரு சுப கிரகமும் பார்க்கவில்லை.
 

4. ஜூலை 16 அன்று சூரியன் காலசர்ப தோஷத்திலிருந்து விலகி, கடகத்திற்கு மாறிவிடுவார். இதனால் உலகம் சற்றே முன்னேற்றம் அடையத் தொடங்கும். 
 

5. அடுத்து குரு, ராகு, கேது பெயர்ச்சி நடக்கும். வாக்கியப்படி, செட்பம்பர் 1ந் தேதி, திருக்கணிதப்படி செப்டம்பர் 25 அன்று ராகு ரிஷபத்துக்கும், கேது விருச்சிகத்துக்கும் மாறுவர். 
 

6. டிசம்பர் 24 அன்று செவ்வாய், மேச ராசிக்கு செல்வார். அங்கிருந்து தனது எட்டாம் பார்வையால், கேதுவை நோக்குவார். ஆக செவ்வாய், கேது சம்பந்தம் உண்டாகிறது.  இவ்விளைவு நன்மை தராது.
 

7. 2021ம் வருடம் ஜனவரி 4ஆம் தேதி மறுபடியும் ராகு, கேதுகளுக்குள் மற்ற அனைத்து கிரகமும் அடைப்பட்டுக்கொள்ளும். இரண்டாவதாக ஒரு கால ஸர்ப தோஷம் உண்டாகும்.
 

8. 2021 பிப்ரவரி 22ந் தேதி செவ்வாய், ரிஷப ராசிக்கு மாறி, அங்குள்ள ராகுவுடன் கை கோர்த்துக் கொள்வார். செவ்வாய், ராகு இணைவு மோசமான கோட்சார நிலை ஆகும். 
 

9. 2021 சித்திரை மாதம், பிலவ வருட 1ந் தேதி அன்று செவ்வாய், ராகுவைவிட்டு நீங்கி, மிதுனத்தில் நுழைவார்.
 

ஆக இந்த சார்வரி வருடம் முழுவதுமே, கோட்சாரம் பூச்சாண்டியாக பயமுறுத்துகிறது. எப்போது என்னாகுமோ என்று நடுக்கமாக இருக்கிறது.
 

ஆக 2021 ஏப்ரல் 14 வரை, ஒரு நன்மையான செயல்களும் நடக்க வாய்ப்பில்லை.
 

இந்த சார்வரி வருடத்தில் வருஷாதி கிரங்கள் குருவும், சனியும், ராகு கேதுவுக்குள் உள்ளனர். மேலும், ராகு கேதுக்களுடன் செவ்வாய் தொடர்பும் அதிகமாக உள்ளது.

எனவே சார்வரி வருடத்தில் ஜாக்ரதையாக இருக்கவும்.
 

சரி, இதற்கு பரிகாரம்தான் என்ன? 
 

காளியை வணங்குவதே ஒரே பரிகாரம். மேலும் சில காளிகளுக்கு ஆடு, கோழி போன்ற பலி கொடுப்பதும் நிவர்த்தி தரும் பரிகாரம் ஆகும். அப்புறம் உங்களுக்கு தெரிந்த தெய்வம், தெரியாத சாமி, பக்கத்து ஊர் பகவான், எதிர் தெரு அம்மன், அறிந்த தெய்வம், அறியாத கடவுள் என எல்லா தெய்வத்தையும் விழுந்து விழுந்து வணங்குங்கள். செய்த பாவம் தீர வேறு வழி?

-ஆர். மகாலட்சுமி

 

Next Story

அம்மன் பட வில்லன் படத்தைப் பதிவிட்டு அமித்ஷாவுக்கு வாழ்த்து சொன்ன பீகார் எம்.எல்.ஏ!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

amit shah

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ-வான சுரேந்திர பிரசாத் யாதவ், அம்மன் தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த ராமி ரெட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு அமித்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 

அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

நனையும் ஆட்டுக்காக அழுகிற ஓநாய்! - கோயில்களை அபகரிக்கும் ஈஷா!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
ddd

 

சிவராத்திரி விழாவை ஜிலுஜிலு ராத்திரியாக மாற்றிய பெருமைக்குரியவர் ஈஷா யோக மையம் எனும் ஆன்மிக வியாபாரத்தலத்தை நடத்திவரும் ஜக்கிவாசுதேவ் சாமியார். பிரதமர் முதல் பிரபல திரை நட்சத்திரங்கள் வரை பலரையும் அழைத்து, தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர். சிவனுக்கு ஆதியோகி சிலை வைக்கிறேன் என்று சொல்லி, தன் முகத்தை சிலையாக வைத்து பக்தர்களையே அதிர்ச்சியடைய வைத்தவர்.

 


ஈஷா மையத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தனித்தனிக் கட்டணம் விதித்து, அதற்கேற்ப அனுமதிக்கும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவ், இந்த சிவராத்திரியில் குவிந்த பக்தர்களிடம் ஓர் அட்டையைக் கொடுத்து, உயர்த்திப்பிடிக்கச் சொன்னார். அந்த அட்டையில், “"கோவில் அடிமை நிறுத்து'’’ என எழுதப்பட்டிருந்தது. "கோவிலில் அடிமைகள் இருக்கிறார்களா, அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்துவது' என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையிடம் கோவில்கள் அடிமையாக இருக்கின்றனவாம்... அதை நிறுத்தி, அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க வேண்டுமாம்.

 

எதற்காக அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க வேண்டும்?

 

பல கோவில்கள் பராமரிக்கப்படவில்லையாம். ஒருகால பூசைகூட நடைபெறவில்லையாம். அதனால், "அரசாங்கத்திடமிருந்து மீட்டு, இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்கிறார். அவர் சொல்லும் இந்துக்கள் யார்?

 

 

கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

 

 

கடந்த மார்ச் 25-ஆம் நாள் திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோவிலின் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. 1920-களில் ஓடிய தேர், தீவிபத்தில் எரிந்துபோன நிலையில்... புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, 1940-களின் நடுப்பகுதிவரை ஓடியது. அதன்பிறகு தேரோட்டம் நின்று போனது. வருமானம் இல்லையா? தியாகராஜ சாமி திருக்கோவிலுக்கு 1000 வேலி நிலம் (1 வேலி=ஏழரை ஏக்கர்) உண்டு. அதனை நிர்வகித்தவர்கள் இந்து பரம்பரை தர்மகர்த்தாக்கள்தான். ஆனாலும், தேரோட்டத்தை நடத்த முடியவில்லை.

 

 

ddd

 

1969-ல் முதலமைச்சரான கலைஞர், அடுத்த ஆண்டு திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திக்காட்டினார். வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் பெரியளவில் சிரமப்படாதவாறு, தேரோடும் தெருக்களை அகலப்படுத்தி, தேரின் சக்கரத்துக்கு பால்பேரிங் பொருத்தி, தேரைச் சீராக ஓட்டுகிற வகையில் திருச்சி பெல் நிறுவனத்தின் பொறியாளர்களைக் கொண்டு ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் அமைத்து ஆழித்தேரை ஓடச் செய்தார். இப்போதும் அதே நவீன முறைப்படி தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்து அறநிலையத்துறைதான் தேரோட்டத்தை நடத்துகிறது. அதன் நெறிமுறைகள் -ஆகமங்கள் ஆகியவற்றை அதற்கான பக்தர்களைக் கொண்ட குழு கவனித்துக்கொள்கிறது.

 

திருக்கோவில் திருவிழாக்களுக்கே உரிய அனைத்து அம்சங்களுடனும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துகிறார்கள். அதிலும் இந்த முறை, பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் தேரோட்ட வேண்டும் என்கிற இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ். -சிவபக்தர்கள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையையும் ஏற்று, அதே நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. நவீன முறையில் கலைஞர் ஆட்சியில் தேரோட்டம் நடைபெற்றபோதும் இதுபோலவே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

 

பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், புராதன கோவில்களில் பாதுகாப்பற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த இறைவன்-இறைவி செப்புத் திருமேனிகளைப் பத்திரமாக எடுத்து வந்து, திருவாரூர் கோவிலில் கட்டப்பட்ட சிலை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர். அவை எந்தெந்த கோவில்களுக்கு உரியனவோ, அந்தக் கோவிலின் திருவிழா நடைபெறும்போது, இந்த செப்புத் திருமேனிகள் அங்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பிறகு மீண்டும் சிலை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும்.

 

இதனிடையே, புராதன கோவில்களைப் பாதுகாக்கும் பணியை இந்து அறநிலையத்துறை, தொல்லியல் துறை ஆகியனவும் மேற்கொண்டன. அதன் காரணமாக பல கோவில்கள் புனரமைக்கப்பட்டன. அங்கேயே பாதுகாப்பாகச் சிலைகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ஆசியாவிலேயே உயரமான திருவரங்கம் கோவிலின் தெற்கு ராஜகோபுரப் பணிகள் நிறைவடைந்து, புனித நீராட்டு நடைபெற்றது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் மன்னை ராஜகோபால சுவாமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உள்ளிட்ட பல பெரிய கோவில்களுக்கு குடமுழுக்கு நடை பெற்றது. கும்பகோணம் மகாமகம் குளம், மயிலாப்பூர் தெப்பக்குளம், திருவாரூர் கமலாலயம் திருக்குளம் ஆகியவை தூர்வாரப்பட்டன.

 

திருக்கோவில்களில் ஒரு கால பூசை என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான நிதி வசதி இல்லாத கோவில்களுக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. உபயதாரர்கள் வாயிலாக பூசை மட்டுமின்றி, அன்னதானமும் நடைபெற்றது. ஜெயலலிதா ஆட்சியில் திருக்கோவில்களில் அன்னதானத்தைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இந்து அறநிலையத்துறையினுடையது. அந்த அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு ‘இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்.

 

 

அவர் மட்டுமா சொல்கிறார்? பா.ஜ.கவின் ஹெச்.ராஜா சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. விஸ்வ இந்து பரிஷத் சொல்கிறது. அதையேதான் ஜக்கியும் சொல்கிறார். ஜக்கி பேசுவது, செய்வது எல்லாமே பா.ஜ.க பாணியிலேயே இருக்கும். கோவில்களை அறநிலை யத்துறையிடமிருந்து மீட்பதற்காக 3 கோடி பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களாம். மிஸ்டுகால் கொடுத்திருக்கிறார்களாம். இந்த ‘மிஸ்டு கால்’ கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக நுழைத்தது பா.ஜ.க.தான். பல லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததாக அந்தக் கட்சி சொன்னது. தனித்து நின்று நோட்டாவைவிடக் குறைவாக ஓட்டு வாங்கியது. ஜக்கியும் அதே போல ஏமாற்றுகிறார். ஏற்கனவே காவிரியை காப்பதாகக் கூறி மிஸ்டுகால், பண வசூல் என பல மோசடிகளைச் செய்தார்.

 

திருக்கோவில்கள் பாதுகாப்புக்கான இந்து அறநிலையச் சட்டம் என்பது, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் சென்னை மாகாணத்தை தேர்தல் வெற்றி மூலம் நிர்வாகம் செய்த நீதிக் கட்சி ஆட்சியின் முதல் அமைச்சர் பனகல் அரசரால் கொண்டு வரப்பட்டதாகும். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்துமதத் தலைவர்களின் ஆலோசனைகள் -திருத்தங்கள் -ஒப்புதல் இவற்றோடுதான் அது நிறைவேற்றப்பட்டது. இதன்படி கோவில் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருந்த தனியார் பெருமுதலைகளிடமிருந்து அவற்றை மீட்டு, உரிய கணக்கு வழக்குடன் நிர்வாகம் செய்யும் பணியை அரசு மேற்கொண்டது. திருவிழாக்கள் உள்ளிட்ட ஆகமங்கள் சார்ந்தவற்றை அரசாங்கம் மாற்ற முடியாது. 

 

ddd

 

பின்னர் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஓமந்தூர் ராமசாமியார், காமராஜர் போன்றவர்களின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை பலப்படுத்தப்பட்டது. அதன் பிறகே, கோவில் நிலங்கள் காலம்காலமாக எவர், எவர் கைகளிலோ சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டு கணக்கிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்து அறநிலையத்துறையில் இந்து மதத்தினர் மட்டுமே இடம்பெறுவர். அது அமைக்கும் கமிட்டிகளில் பட்டியல் இனத்தவர் -பெண்கள் உள்பட இந்துக்களே இடம்பெறுவர். எல்லா வகையிலும் இந்து மதத்தினரை சார்ந்தே இயங்கக்கூடிய அறநிலையத்துறையை அரசாங்கத் திடமிருந்து எடுத்து, தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது?

 

"கோவில்கள் பராமரிக்கப்படவில்லை -கோவில் நிலங்கள் பறிபோகின்றன -சிலைகள் திருட்டுப் போகின்றன' என்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் முறைகேடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டியது கட்டாயம். அதே நேரத்தில், சிலைகள் திருட்டுப் போகிறதென்றால், கோவிலின் அர்ச்சகருக்குத் தெரியாமல் களவுபோக முடியாது. செப்புத் திருமேனியை அன்றாடம் தொட்டுப் பூசை செய்யும் உரிமை கொண்டவர்கள் அர்ச்சகர்கள் மட்டுமே. அதிலும், அனைத்து சாதியினரும் அதற்குள் வரக்கூடாது என்று ஒரு தரப்புக்கே பட்டா போட்டுத் தரப்பட்டிருக்கும் நிலையில்... கோவில் சிலைகள் களவு போகின்றன என்றால் அதற்கு உடந்தையாக இருப்பது யார்?

 

சிதம்பரம் நடராசர் கோவிலை அரசாங்கம் நிர்வகித்தபோது, உண்டியல் காணிக்கை லட்சங் களில் இருந்தது. தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப் பட்டபோது, மூவாயிரம், நான்காயிரம் என வெகு வாகக் குறைந்தது. தனியாரிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டால் என்னவாகும் என்பதற்கு இதுவே சாட்சியம். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு எனக் கூவுகிற ஈஷா மையம் எங்கே உள்ளது? வெள்ளியங்கிரி அடிவாரத்தில் யானைகள் வலசை செல்லும் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தால் இன்றுவரை இயற்கை ஆர்வலர்களும், வனப் பகுதி மக்களும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

 

அதிகாரத்தில் இருப்பவர்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு ஆன்மிகத்தின் பெயரால் இயற்கையைச் சுரண்டி வயிறு வளர்ப்போர், "கோவில் அடிமை நிறுத்து'’என்கிறார்கள். இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில், "இந்து கோவில்களை ‘துறவிகளிடம் ஒப்படைப்போம்' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இப்போது புரிகிறதா, ஆடுகளுக்காக அழுகிற ஓநாய்களின் லட்சணம்?

 

-கீரன்