Skip to main content

திண்டுக்கலில் ரோபோ சங்கர்! களைகட்டிய கோவில் திருவிழா

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Robot Shankar in Dindigul!  temple festival

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் மாசி மாதம் நடப்பது வழக்கம். அது போல் இந்த வருடம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த திருவிழாவின்போது வருடந்தோறும் தரணி குழும நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழில் அதிபர் ரத்தனம் சார்பில் கோட்டை மாரியம்மன் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திலும் கலையரங்க வளாகத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கி இரவு கலைநிகழ்ச்சி நடத்துவதும் வழக்கம். அதுபோல் இந்த வருடம் வழக்கத்திற்கு அதிகமாக ஏழாயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த அன்னதானத்தை தொழில் அதிபர் ரத்தனம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ரத்தனத்தின் மகன்களான ஜி.டி.என்.கலைக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் துரை மற்றும் திண்டுக்கல் மாநகர 17ஆவது வார்டு கவுன்சிலரும், வக்கீலுமான வெங்கடேஷ் ஆகியோர் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு வழங்கினர். அதைத் தொடர்ந்து இரவு நடிகர் ரோபோ சங்கர், திரைப்பட இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தேவகோட்டை அபிராமி, நடிகர் புகழ் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

Next Story

‘உனக்காக வாழ நெனைக்கிறேன்…' - இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024

 

நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் தமிழில் பிகில், விருமன் மற்றும் தெலுங்கில் பாகல் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளார். ரோபோ ஷங்கரின் உறவினரான கார்த்திக் மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திரஜா - கார்த்திக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் தம்பதிகளின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதில் நக்கீரன் ஆசிரியரும் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.

 

Next Story

"தியேட்டரை உண்டு இல்லைனு ஆக்க ரெடி பண்ணி வச்சிருக்கேன்" - ரோபோ ஷங்கர்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

robo shankar about kamal maniratnam movie released

 

பேராசிரியர் ஸ்ரீனி சௌந்தராஜன் இயக்கி நடித்திருக்கும் படம் கபில் ரிட்டன்ஸ். தனலட்சுமி கிரியேஷன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜ்பிரதாப் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபோ ஷங்கரும் கலந்து கொண்டார். 

 

பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் படக்குழுவினரை பாராட்டினார். பின்பு அவர்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, கமல் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகள் கழித்து கமலின் 234வது படத்திற்கு கைகோர்த்துள்ளது பற்றிய கேள்விக்கு, "36 வருஷம் கழித்து எனக்கு நானே கமலா தியேட்டரை உண்டு இல்லைனு ஆக்கணும்னு ரெடி பண்ணி வச்சிருக்கன். அப்பப்ப கமல் அலுவலகத்தில் அப்டேட் கேட்டு வருகிறேன். படம் வெளியாகும் பொழுது எந்த தேதியாக இருந்தாலும் நாயகன் படம் வெளியான போது மிக பிரம்மாண்டமான விழாவாக கமல் தியேட்டரில் நான் எடுத்து நடத்த போகிறேன். அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்துவிட்டேன். இதுவரையில் தமிழகத்தில் யாரும் கொண்டாடாத அளவிற்கு கொண்டாட திட்டமிட்டுள்ளேன். ரோகிணி திரையரங்கை விட 20 மடங்கு கமலா திரையரங்கில் நடக்கும். அதற்காக தியேட்டர் உரிமையாளர்களிடம் முறையான அனுமதி வாங்கியுள்ளேன்" என்றார். 

 

லியோ படத்தில் கமல் குரல் வந்தது தொடர்பாக சிலர் கிண்டல் செய்து வந்ததாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "கமல் சார் என்ன கிழிச்சார் என்று சொல்வதற்கான தகுதி யாருக்குமே கிடையாது. இந்த வருஷம் நான் அடிக்க கூடிய போஸ்டரே அதை பற்றி தான். உம்மை தெரியாதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை. உம்மை தெரியாதவர்கள் இவ்வுலகில் இருந்தும் தேவையில்லை. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. லியோ பட இறுதியில் கமல் சாரின் குரல் வரும் போது தியேட்டரே கிழியுது. அதற்கு மேல் என்ன வேண்டும்" என்றார்.