Skip to main content

எட்டாம் அதிபதி சொல்லும் ரகசியங்கள்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

சிவ. சேதுபாண்டியன்.

 

எட்டாம் அதிபதியைக்கொண்டு ஆயுள் மட்டும் கணிக்கப்படுவதில்லை. ஆயுள் முடியக் காரணமானவரும் அவரே. ஆயுள் முடியும் காலநேரம், அரசாங்கத்தால் ஏற்படும் உயிர்ச்சேதம் (தூக்கு, என்கவுன்டர்), இராணுவத்தில் வீரமரணம், கொலை செய்யப்படுதல், கொடூர விபத்து, உடலுறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்டவை குறித்து எட்டாமிடம் கொண்டு அறியலாம். மனிதனுக்கு மரணமும், பிறப்புக்குரிய அனைத்து வேலைப்பாடுகளும் இந்த எட்டாம் பாவகத்தில்தான் காணப்படுகிறது. எட்டாமிடத்திற்கான அதிபதி (லக்னத்திலிருந்து கணக்கிடவும்) எட்டில் இருப்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடும். எட்டாமிடத்து அதிபதி ஆறில் மறைவதைவிட 12-ல் மறைவது நல்ல ஆரோக்கியத்தையும் தீர்க்காயுளையும் வழங்கும். எட்டாம் அதிபதி 2-ஆமிடத்தில் இருந்தால், அவர் ஏழாம் பார்வையாக எட்டாமிடத்தைப் பார்ப்பார். அதன்மூலம் ஜாதகருக்கு தீர்க்காயுள் கிடைக்கும். எட்டாமிடத்து அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும் ஆயுள் பலமுண்டு. மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாமதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீசம்பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக்கஷ்டம் இருக்கும். துலாம் லக்னத்திற்கு சுக்கிரன்தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம்பெறுவது ஆறாமிடம் என்பதால் நோய்த்தாக்கம் அதிகரிக்கும்.
 

athipathi god

ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குருதான் எட்டாமிட அதிபதி. இந்த ஜாதகங்களைப் பொருத்தவரை குரு நீசம் பெறாமல் இருப்பது நல்லது. குரு உச்சம் பெறாமல் இருப்பதும் நல்லது. அதுவே நீசம், உச்சம் பெற்றிருந்தால் சிறுவயதுமுதல் நோய்கள் வந்துகொண்டே இருக்கும். மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் எட்டாம் அதிபதி சனி பகவான். இவர் நீசம், பகைபெறாமல் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் ஜாதகர் ஒருநிலையில் இருக்கமாட்டார். தவிர மூட்டுவலிலி, வயிற்றுவலி, மூலநோய் வரக்கூடும். தொற்றுநோய்கள் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். விருச்சிகம், கும்ப லக்னத்திற்கு புதனே எட்டாமிடத்து அதிபதி. அவர் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜாதகருக்கு யோகம். அதுவே நீசம் பெற்றால் குடல் புண், ரத்த அழுத்தம் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
 

athipathi

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் அதிபதியாக இருக்கிறார். இவர் மகரத்தில் உச்சம்பெறுவது நல்ல யோகப்பலனைத் தரும். நீண்ட ஆயுள் இருக்கும். மாறாக நீசம்பெற்றிருந்தால் ரத்த அழுத்தம், மூட்டுவலி, சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். தனுசு லக்னத்திற்கு எட்டாம் அதிபதி சந்திரன். அவர் ஆறாம் பாவகத்தில் உச்சம் பெறுவது யோகம் என்றாலும், ஜாதகர் மன நோயாளிபோல நடந்து கொள்வார். சந்திரன் நீசமானால் ஜாதகருக்கு முடக்குவாதம் ஏற்படும். மகர லக்னத்திற்கு சூரியன் எட்டாமிட அதிபதி. சூரியன் நாலாமிடமான மேஷத்தில் உச்சம் பெறலாம். ஆனால் 10-ஆமிடமான துலா ராசியில் இருந்திடல் கூடாது. அப்படி சூரியன் துலாமில் நின்றால் ஜாதகருக்கு தலைவலி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சி, சரியான உறக்கம் இல்லாமை போன்றவை ஏற்படும். மீன லக்னத்திற்கு எட்டாமதிபதி சுக்கிரன். இவர் ஏழாமிடமான கன்னியில் நீசம் பெறுவது நன்மை தரும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு மற்றும் தொற்று நோய்களும் வரக்கூடும். சிறுவயதுமுதல் நெஞ்சில் சளி இருக்கும். இந்த நோய்கள் வருமென்றாலும் கீழுள்ள பரிகாரங்களைச் செய்து கொள்வதன்மூலம் சுபிட்சம் பெறலாம்.

பரிகாரம்- 1

எமதர்மராஜாதான் எட்டாம் அதிபதிக்குக் காரணமாவார். எனவே, "எமதர்மராஜாவே! எங்களைக் காப்பாற்று' என்று தினமும் ஒன்பதுமுறை சொல்லிலிவர, பரிபூரண ஆயுளோடு வாழலாம்.

பரிகாரம்- 2

வசதி படைத்தவர்கள் ஒருமுறையாவது திருக்கடையூர் சென்று மார்க்கண்டேயரையும், ஈசனையும், அமிர்தகடேசுவரரையும், அபிராமியையும் வணங்கி வர பரிபூரண ஆயுள் கிடைக்கும்.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.