Skip to main content

நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்! 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

 numerical-benefits-november 

 

1, 10, 19, 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டுமானால் நிதானமான பேச்சு, நிதானமான செயல்களைக் கையாள வேண்டும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி பெருகும். நல்ல லாபத்தையும் பெறுவார்கள். தொழிலாளர்களை அனுசரித்துச் செல்லும் தொழிலதிபர்கள் ஏற்றம்பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் சம்பந்தமாக வெளியூர்ப் பயணம் செல்வர். நல்ல லாபத்தையும் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் உற்சாகத்துடன் தங்கள் கடமையைச் செய்வார்கள்; மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். இந்த மாதம் வரவு - செலவுகளில் பற்றாக்குறை வராது. ஆனால் மிச்சம் ஏற்படாது. கணவன் - மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. பிள்ளைகளின் தேவைகளையும், படிப்புச் செலவுகளையும் சரிக்கட்ட திட்டமிட்டபடி பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். மாணவர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உயர்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். நண்பர்கள் சொல்வதை நம்பி செயல்படக்கூடாது. அவர்களோடு வாக்குவாதமும் செய்யக்கூடாது. அனைத்து செயல்களிலும் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றி காணும் மாதம். தூர தேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிரிகள் தொல்லை ஒழிந்துபோகும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்க வேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

 

2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் பழைய நிலுவைகளைப் பெறுவார்கள். வருமானத்திற்குக் குறைவில்லை. அதேநேரம் பிள்ளைகள் வழியில் படிப்புச் செலவுகள் கூடும். குடும்பத்திற்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் தேடி வந்து உதவி செய்வார்கள். அரசியல் பிரமுகர்கள் நினைத்தபடி வெற்றி பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். ஊழியர்கள் ஒற்றுமையால் உற்பத்தி கூடும். வியாபாரிகளும் விற்பனையில் அதிக லாபம் காண்பார்கள். தொல்லை கொடுத்து வரும் போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். அரசு ஊழியர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிட்டும். மாணவர்களுக்கு நண்பர்கள் வட்டம் விரிவடையும். இளைஞர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். கலைத் தொழில் செய்வோர் ஏற்றம் பெறும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்க வேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

 

3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வருமானத்திற்குப் பஞ்சமில்லை. பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகவும், சிறப்பாகவும் நடந்தேறும். உடல்நிலையில் சற்று கவனம் கொள்ளவேண்டும். மருத்துவச் செலவுகள் கூடும். குழந்தை பாக்கியம் இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரனாக அமையும். தாய் - தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். இளைஞர்களுக்கு தகுந்த அரசுப் பதவிகள் வரும். வியாபாரிகள் புதிதாக வணிக வளாகம் தேர்வு செய்வார்கள். வியாபார விருத்தியையும் அடைவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் புதிய தொழில் தொடங்குவார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் பல விதத்திலும் சந்தோஷமான வெற்றிச் செய்திகளைக் கேட்பார்கள். திட்டமிட்டபடி காரியங்கள் கைகூடும். எதிரிகள்கூட உங்கள் நட்புறவைத் தேடிவந்து பெருமை சேர்ப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்க வேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்க வேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

 

4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குடும்பத்தில் குதூகலம் நிறைந்து விளங்கும் மாதம். கைவிட்டுப் போன பாக்கிகள், பொருள்கள் வந்து சேரும். இதுவரை இழுபறியாக இருந்த வழக்குளில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதரரிடையே நிலவும் ஒற்றுமையில்லாத நிலை சீராகும். இளைய சகோதரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி மாறுதலைக் காண்பார்கள். கணவன் - மனைவியிடையே கருத்தொற்றுமை நீடிக்கும். மாணவர்கள் உயர்படிப்புக்கான முயற்சிகளில் வெற்றிபெறுவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குகளை வாங்கி, லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளின் கொள்முதல் அத்தனையும் விற்பனையாகும். கல்வி நிறுவனம் நடத்துபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். தாய் - தந்தையருக்கு மருத்துவச் செலவு செய்ய நேரும். பெண்கள் திட்டமிட்டபடி ஆன்மிக சுற்றுலா சென்று வருவார்கள். பணத் தொல்லை நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்க வேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்க வேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

 

5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் குடும்பச் செலவுகள் கூடும். அதற்கேற்ற வரவுகளும் வரும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் போடுவார்கள். புதிய தொழில் நிறுவனம் கட்ட முற்படுவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இதுவரை வாட்டிவதைத்த மருத்துவச் செலவுகள் நீங்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவரும் வில்லங்கங்கள் நீங்கும். பழைய நண்பர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்து மகிழ்வீர்கள். இதுவரை பிள்ளைகளுக்குத் திருமண விஷயத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். நல்ல வரன் வந்துசேரும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். மாணவர்கள் உயர்படிப்புக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். குழந்தை பாக்கியமில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும், நன்மதிப்பை யும் பெறுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் விற்பனையில் புதிய அணுகுமுறையைக் கையாள்வார்கள். அரசியல்வாதிகள் நினைத் தபடி வெற்றி காண்பார்கள். தூரதேசத்திலி−ருந்து நல்ல செய்திகள் வரும். மகான்களின் தரிசனம் கிட்டும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

 

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் வரவு- செலவுகளில் கவனத்துடன் செயல்பட்டால் கடன் தொல்லைகள் வராமல் தவிர்க்கலாம். உங்களைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்துவரும் மகன் வந்துசேர்வார். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளை சமாளிக்கவேண்டி வரும். அவர்களின் சதித்திட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கவேண்டும். தொழிலதிபர்கள் மிகுந்த கவனத்துடன் தொழிலாளர் பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும். தொழிலாளி- முதலாளி பேதம் வராமல், எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். இளைஞர்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலையைப் பெறுவார்கள். சிலருக்கு கண் சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பிள்ளைகள்வழியில் கூடுதல் செலவுகள் வரலாம். அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி மாறுதல் அடையலாம். கடிதத் தொடர்புகள் நல்ல செய்திகளைக் கொண்டுவரும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

 

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இது பெண்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய மாதம். பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கமுடியும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். உயர்படிப்பிற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். ஒருசிலருக்கு இதுவரை கிடைக்காம−ருந்த குலதெய்வ அருள் கிட்டும். மாமன், மைத்துனர் வழிகளில் இருந்துவரும் சிக்கல்கள் தீரும். "வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளைப் பெற்றோமே' என்று வருத்தம் கொண்டுள்ள பெற்றோர் களின் கவலை தீரும். பிள்ளைகள் தாய்- தந்தையர் சொல்கேட்டு நடப்பார்கள். காவல்துறை நடவடிக்கைகள் சாதகமாக அமையும். வியாபாரிகளிடையே போட்டி அதிகமிருந்தாலும் லாபத்தில் குறைவு வராது. தொழிலதிபர்கள் வெளிமாநிலம், வெளிநாட்டில் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். பணிச்சுமை குறையும். இந்த மாதம் தெய்வபக்தியும்கூடி, அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். எதிர்பார்த்த வேலை உத்தரவுகளை கடிதத் தொடர்பில் பெறலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் அமையும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

 

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உங்களைப் பிரிந்துசென்ற தொழில் கூட்டாளிகள் வருந்தி, திருந்தி வந்து சேர்வார்கள். இதுவரை உங்கள் தொழிலுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர்கள் இருக்குமிடம் தெரியாமல் விலகிச் செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிள்ளைகளுக்குத் தடைப்பட்டுவரும் திருமணம் இனிதே நடக்கும். நல்ல வரனாக அமையும். வரவு- செலவில் நிதானமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் உயர்படிப்புக்கான செலவுகள் கூடும். அரசு ஊழியர்களின் கனவு நனவாகும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். ஒருசிலருக்கு தடைப்பட்ட வேலை மீண்டும் அமையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபமடைவார்கள். தொல்லைகொடுக்கும் வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். அரசியல் பிரமுகர்கள் வெற்றிபெற்று தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

 

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். அதன்மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குகளை நல்ல லாபத்துக்கு வாங்குவார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வியாபாரமும் பெருகி நல்ல லாபத்தையடைவார்கள். இதுவரை பிரிந்து வாழ்ந்த உறவினர்கள் வந்துசேர்வார்கள். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதல் பெறுவார்கள். பழைய நிலுவைகள் தாமதமின்றிக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். திருமணம் தடைப்பட்டுவரும் பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும். வயதான பெற்றோர்வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுவருவார்கள். தொல்லை கொடுத்துவரும் எதிரிகள் விலகிச் செல்வார்கள். பெண்களால் அதிக நன்மைகளை அடையலாம். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த பலனையடைவார்கள். தெய்வ பக்தியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

 


 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.