Skip to main content

வீட்டின் படுக்கையறை வடமேற்கில் இருந்தால் ... 

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

ஒரு பெண் தன் இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவாள். ஆனால் சில பெண்கள் தங்கள் கணவனுடன் கருத்துவேறுபாடு கொண்டிருப்பார்கள். அதனால் குடும்பத்தில் அமைதி இருக்காது. அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு ஜோதிடத்தில் காரணங்கள் உள்ளன. மனைவிமீது கணவனுக்கு சில நேரங்களில் தீவிரமான சந்தேகம் எழும். அதன்மூலம் பல பிரச்சினைகளும் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் விரிசல்கள் உண்டாகும்.

 

shivan



அதற்கு முக்கியமான காரணம்- ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் பாவத்திற்கு அதிபதியான கிரகம். அந்த கிரகம் நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்தால், அப்பெண்ணின் கணவர் விபரீதமான சிந்தனை கொண்டவராக இருப்பார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன், கேது இருந்தால், அந்தப் பெண் பலருடன் பேசிப்பழகும் சுபாவம் கொண்டவளாக இருப்பாள். தன் விருப்பப்படி ஆடைகளை அணிவாள். அதனால் அவளை அவளுடைய கணவர் சந்தேகத்துடன் பார்ப்பார். இதன்காரணமாக வாழ்க்கையில் தொல்லைகள் சூழும்.

 

shivan



ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் அல்லது சூரியன், ராகு, சுக்கிரன் இருந்தால், அந்தப் பெண் தேவையற்ற விஷயங்களை தேவையற்ற மனிதர்களுடன் பேசிக்கொண்டிருப்பாள். பல நேரங்களில் கோபமாகப் பேசுவாள். அதனால் அவள்மீது கணவர் சந்தேகப்படுவார். அதன்காரணமாக வீட்டில் சண்டைகள் உண்டாகும்.

பெண்ணின் ஜாதகத்தில் 6-ல் சுக்கிரன், புதன், ராகு அல்லது சுக்கிரன், சூரியன், கேது, புதன் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு பல தடைகளைக் கடந்துதான் திருமணமே நடைபெறும். அவள் பல ஆண்களுடனும் சுதந்திரமாகப் பேசுவாள். திருமணமான பிறகும், அவள் ஆண்களுடன் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். இதனால் அவள்மீது கணவருக்கு சந்தேகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் வாத, விவாதங்கள் எழும்.

 

shivan temple

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 4-ல் இருந்து, அதை இன்னொரு பாவ கிரகம் பார்த்தால், அந்தப் பெண் எப்போதும் தன் குடும்பத்தைப் பற்றியும், பெற்றோரைப் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பாள். அதன்காரணமாக வீட்டில் சண்டைகள் உண்டாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திலோ ஏழிலோ இருந்து சனியைப் பார்த்தால், அந்தப் பெண் எப்போதும் கோபத்துடன் பேசுவாள். தேவையற்ற விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருப்பாள். அவள்மீது கணவனுக்கு பல நேரங்களில் சந்தேகம் உண்டாகும். அதனால் குடும்ப வாழ்க்கை கெடும்.

ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடக்கும்போது ஜாதகத்தைப் பார்ப்பார்கள். பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசி 6-ஆவது ராசி அல்லது 8-ஆவது ராசியாக இருந்தால் சஷ்டாஷ்டகம் உண்டாகும். அதனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அது அதிகமாகும் போது, பெண்ணுக்கு கோட்சாரத்தில் குரு பகவான் 3 அல்லது 6-ல் இருந்தால், அந்த வீட்டில் தேவையற்ற சந்தேகங்கள் உண்டாகும். கணவனும் மனைவியும் பிரியவேண்டிய சூழல்கூட உண்டாகும். ஒரு பெண்ணுக்கு கோட்சாரத்தில் சனி 7 அல்லது 12-ல் இருந்து, அந்த நேரத்தில் ராகு ராசியிலோ 2-லோ இருந்தால், வீட்டில் சந்தேகம் உண்டாகும். அதனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை நடக்கும்.

ஒரு வீட்டிற்கு தென்மேற்கு வாசல் இருந்து அந்த வீட்டின் படுக்கையறை வடமேற்கில் இருந்தால், அங்கு சந்தேகம் அதிகமாக இருக்கும். படுக்கையறையில் வடக்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தாலும் மேற்கில் தலைவைத்துப் படுத்தாலும் சந்தேகம் எழும். வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்து, வடகிழக்கில் மரங்கள் அல்லது தேவையற்ற பொருட்கள் இருந்தால், அங்குள்ள கணவருக்கு தன் மனைவியின்மீது சந்தேகம் உண்டாகும். அதனால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும்.

பரிகாரங்கள்

மனைவிமீது சந்தேகப்படும் கணவர், அது நீங்குவதற்கு தினமும் சிவனுக்கு பால், நீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும்.

வீட்டில் குப்பைகளை சேர்த்துவைக்கக்கூடாது.

படுக்கையறையில் வடக்கு அல்லது தெற்கில் முகம்பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.

தெற்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது. தென்கிழக்கில் படுக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமை துர்க்கை அல்லது மகாலட்சுமியை வழிபடவேண்டும்.

கணவர்- மனைவி இருவருமே கருப்புநிற ஆடை அணிவதைத் தவிர்க்கவேண்டும்.

வீட்டில் பழைய செருப்புகளை சேர்த்து வைக்கக்கூடாது. இரவில் துணி துவைப்பது நல்லதல்ல.

செவ்வாய்க்கிழமை லட்டு, பூந்தி ஆகியவற்றை தானமளிப்பதால் இல்லறத்தில் நிம்மதி நிலவும்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.