Skip to main content

”தமிழகத்தை ஆன்மீக பூமி என்று சொல்ல இதுதான் காரணம்” - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், திருநாவுக்கரசரின் மறுபிறவி ஆசை குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

அன்னைத் தமிழில் இருப்பது மாதிரியான பக்தி இலக்கியங்கள் உலகத்தில் எந்த மொழியிலும் இல்லை. அதனால்தான் தமிழகத்தை ஆன்மிக பூமி என்று சொல்கிறார்கள். செம்மொழியாக தமிழ் இன்று உச்சம் அடைந்திருக்கிறது என்றால் அதற்கு ஆரமாகவும் ஆபரணமாகவும் இருந்தது சமயக்குறவர்கள் தந்த மகத்தான பக்தி இலக்கியங்களே. அவர்கள் மக்களின் மனவோட்டத்தில் என்ன எண்ணவோட்டம் இருக்குமோ, அந்த மொழியை சரியாக உள்வாங்கிக்கொண்டு சிந்தித்தார்கள். 

 

பாவமன்னிப்பு கேட்பது கிறிஸ்தவம். கடைசி நாள் இறுதி தீர்ப்பு நாள் வரும் என்கிறது இஸ்லாம். இந்தப் பிறவியோடு என்னுடைய பிறவி முடியவேண்டும், இன்னொரு பிறவி எனக்கு கூடாது என்று சைவம், வைணவம், கானபத்தியம் கூறுகின்றன. பிறவியை அறுப்பதுதான் கடவுளை வழிபடுவதற்கான நோக்கம் என்றும் அவை வலியுறுத்துகின்றன. ஆனால், அடியர் திருநாவுக்கரசர் எனக்கு இன்னொரு பிறவி வேண்டும் எனக் கேட்கிறார். பிறவியை ஒழிப்பதற்காக வந்தவர்கள், பிறவிப்பெருங்கடல் நீந்த வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள், அதற்காகவே சிவம் எனும் செம்பொருளை ஆராதித்து மகிழ்ந்தவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், எனக்கு இன்னொரு பிறவி வேண்டும் எனக் கேட்கிறார்.

 

அழகை ஆராதிப்பது என்பது மனித இயல்புகளுள் ஒன்று. அந்த வகையில், சிவனின் அழகை கண்குளிர ஆராதிக்கிறார் திருநாவுக்கரசர். ஒரு காலை தூக்கிக்கொண்டு தில்லை நடராஜர் காட்சியளிப்பதைப் பார்க்கும்போது பக்தி இல்லாதவர்களுக்குகூட ஒரு பரவசம் ஏற்படும். தில்லை நடராஜரின் அந்த அழகைக் கண்டு உன்னைப் பார்ப்பதற்காக எனக்கு இன்னொரு பிறவி வேண்டும் எனக் கேட்கிறார் திருநாவுக்கரசர். 

 

இன்னுமொரு பிறவி வந்தாலும் நீதான் எனக்கு வேண்டும் என்று காதலர்கள் கூறிக்கொள்கிறார்களே, அந்த மக்கள் மொழியை சமயகுறவர்கள் விட்டுவிட இல்லை, விட்டுவிலகிவிடவும் இல்லை. நடராஜரின் அழகை,   

 

”குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே”

 

எனத் திருநாவுக்கரசர் பாடுகிறார். சராசரி மனிதர்களின் ஆசைகளை, அபிலாஷைகளை அடியார்களும் எதிரொலிக்கும் அணுகுமுறை பக்தி இலக்கியம் முழுமைக்கும் காணப்படுகிறது.  

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.