Skip to main content

தமிழுக்கு இவ்வளவு வல்லமையா? யோசிக்க வைக்கும் ஆண்டாள் பாடல்கள் - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

சமயகாலம் சந்தனத்தமிழின் பொற்காலம். அந்தக் காலத்தில் சமயாச்சாரியர்களின் கருத்துக்கு மனம் இருந்தது, குணம் இருந்தது. காலம் தன்னை எப்படி தோலுரித்துக்கொண்டாலும் சமயம் இந்த மண்ணில் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. அதிலிருந்து மீளவும் முடியாது. அன்றைக்கு மொத்தம் 12 ஆழ்வார்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெண். அவர்தான் ஆண்டாள். அந்த ஆண்டாள் பாடிய பாடல்களின் தொகையைப் பார்த்தால் பிற 11 ஆழ்வார்கள் பாடியதைவிட குறைவாகத்தான் பாடியிருக்கிறார். நாச்சியார் திருமொழியும் திருப்பாவையும் 30 பாடல்கள்தான். அந்த 30 பாடல்களிலேயே திவ்யபிரபந்தத்தை மேலே தூக்குகிறார் ஆண்டாள். நம்முடைய தாய் தமிழுக்கு இவ்வளவு வீச்சும் வல்லமையும் இருக்கிறதா என்பதை ஆண்டாளின் பாட்டைப் படிக்கிறபோது அறிந்துகொள்ள முடிகிறது. இறை நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட ஆண்டாளின் பாட்டைப் படிக்கிறபோது அதில் விழுந்துவிடுவார்கள். 

 

சின்னஞ்சிறு வயதில் கண்ணனைக் காதலிக்கிறார் ஆண்டாள். அவரது தந்தை பெரியாழ்வார் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்க்க நினைத்தபோது, நான் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டேன், கல்யாணம் செய்துகொண்டால் கண்ணனைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று உறுதியாகக்கூறி சபதம் எடுக்கிறார். மனிதர்கள் என்னை மணம் செய்துகொள்வது என்று ஒரு நிலை இருக்குமானால் நான் வாழமாட்டேன் என்பதை மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன் என்கிறார். 

 

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்..." 

 

என்ற பாடலை எப்படித் தொடங்கினாரோ அதே வீச்சோடு முடித்திருப்பார் ஆண்டாள். ஆகவே, புலமை, திறமை, கல்வி, ஞானம் என்பது பெண்களுக்கும் உரியவைதான். பெண்கள் கல்வி கற்கக்கூடாது, பெண்கள் கல்விச்சாலைக்கு போகக்கூடாது என்று யார் சொன்னாலும் பிற 11 ஆழ்வார்களுக்கும் இணையாக சமவெளியில் நின்று பாடுகிறார் ஆண்டாள். அர்த்தமுள்ள இந்து மதத்தில், ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று கண்ணதாசன் பதிவு செய்துள்ளார். புலமையும் திறமையும் பெண்ணுக்கும் உரியவைதான் என்று பாரதி சிந்திப்பதற்கு முன்னால், பாவேந்தர் ஒப்புக்கொள்வதற்கு முன்னால், உலகம் ஏற்றுக்கொள்வதற்கு முன்னால், பெண் குளத்தின் சார்பாக ஒரு பெண் நிரூபித்தார் என்றால் அவர் பெயர் ஆண்டாள். அந்த நாள் தமிழகத்தை 30 பாடல்களில் சித்தரித்தார். அந்த நாள் வாழ்க்கை முறையை 30 பாடல்களில் சொல்லிவைத்தார். 

 

நேற்றுவந்த சவால், இனி வரக்கூடிய அறைகூவல் என இரண்டையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் என்னிடம் உள்ளது என்று அவர் பதிவுசெய்துள்ளார். இன்றைக்கு தன்னம்பிக்கை கருத்தரங்குகள் நாடெங்கும் நடக்கின்றன. இன்றைக்கு நாம் பேசும் தன்னம்பிக்கையை அன்றே தமிழுக்கு தந்தார் ஆண்டாள் நாச்சியார். நேர்த்தியாக எழுப்பப்படுகிற மாளிகையைப்போல தன்னுடைய பாடல்களில் அழகான சொற்களைப் பெய்து அருந்தமிழுக்கு கொடையாக இருந்தார், விடுதலைக்கு விடையாக இருந்தார் ஆண்டாள். 

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.