Skip to main content

தொழில் செய்து நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு வரணுமா ?

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

பெண்கள் தாங்கள் வாழச் செல்லும் வீடு நல்ல வசதி வாய்ப்புகளுடன் அமைய வேண்டுமென விரும்புவார்கள். சிலருக்கு வசதி வாய்ப்பில்லாத வாழ்க்கைத்துணை அமைந்தாலும் கணவன் வீட்டிற்குச் சென்றவுடன் அந்த வீட்டில் எதிர்பாராத முன்னேற்றங்களும் பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தும் ஒருவருக்கு மனைவி என்ற உறவு வந்தவுடன் அதிர்ஷ்டங்கள் தேடிவந்தால், "இந்தப் பெண் வந்த நேரம் நல்ல நேரம்; இவள் மகாலட்சுமி' என அக்குடும்பத்திலுள்ள அனைவரும் போற்றுவார்கள். மனைவி என்ற உறவு வந்தபின்தான் வாழ்க்கையில் பல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம், பொன், பொருள், வீடு, வாகனச் சேர்க்கை, தொழில், உத்தியோகத்தில் உயர்வு, சுக வாழ்வு யாவும் அமையும்.

 

god



ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீடானது களத்திர ஸ்தானமாகும். நவகிரகங்களில் சுக்கிரன் களத்திர காரகனாவார். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7-ஆம் வீடும், களத்திரகாரகனும், சுக்கிரனும் ஆட்சி, உச்சம் பெற்றாலும், வலுவாக அமைந்திருந்தாலும் திருமணத்திற்குப்பிறகு அமையும் வாழ்க்கைத்துணைமூலம் பொருளாதார மேன்மைகளும் உயர்வுகளும் உண்டாகும்.ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பலவீனமடைந்திருந்தாலும், வக்ரம் பெற்றாலும் வாழ்க்கைத்துணைமூலம் நற்பலனையடைய இடையூறுகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் இடம் தனஸ்தானம் ஆகும். 11-ஆம் இடம் லாபஸ்தானம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 2, 11-க்கு அதிபதிகள் 7-ஆம் வீட்டு அதிபதியுடனோ, சுக்கிரனுடனோ இணைந்து பலம்பெற்றிருந்தாலும், 7-ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப்பின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும்.ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபகிரக சாரம் பெற்று பலமாக இருந்தால், திருமணத்தின்மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.

 

raman god



ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீடு அசையும்- அசையா சொத்து மற்றும் சுக வாழ்வைக் குறிப்பது. ஜாதகத்தில் 4-ஆம் அதிபதியும், 7-ஆம் அதிபதியும், சுக்கிரனும் பலம் பெற்றிருந்தாலும், 4, 7-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், 4, 7-க்கு அதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்து ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருந்தாலும் திருமணத்திற்குப்பின் சொந்த பூமி, மனை, வீடு, வண்டி வாங்கி அனுபவிக்கும் யோகம் சிறப்பாக அமையும். தொழில் செய்து நிறைய சம்பாதிக்கும் வாய்ப்புண்டாகி நல்ல லாபம் கிடைக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டின் அதிபதியுடன் 7-ஆம் அதிபதி இணைந்திருந்தாலும், பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப்பின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து தொழில் செய்து உயரக்கூடிய யோகம் உண்டாகும். 7, 10-க்கு அதிபதிகளுடன் சுக்கிரன் சம்பந்தமும் ஏற்பட்டிருந்தால் கணவன், மனைவி இருவரும் இணைந்து தொழில் செய்து, அதன்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பினைப் பெற்று உயர்வுகளை அடைய முடியும்.

ஜென்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டின் அதிபதி பலம் பெற்றிருந்தால்தான் சொந்தத் தொழில் செய்து சம்பாதிக்க முடியும். அப்படி 10-ஆம் அதிபதி பலம் பெறாமலிருந்து 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருந்தால், ஜாதகர் வாழ்க்கைத்துணையின் பெயரில் தொழில் தொடங்கி நற்பலன்களை அடைய முடியும்.

ஒருவர் ஜாதகத்தில் 7-ஆம் வீடு கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகும். உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் அதிபதி பலம் பெற்றிருந்தால், 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாட்களைக் கூட்டாளிகளாகச் சேர்க்காமல், மனைவியை மட்டுமே கூட்டாளியாக வைத்து தொழில் செய்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் முன்னேற்றத்தை அடையமுடியும்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.