Skip to main content

தினம்தோறும் பணப்புழக்கம் வேண்டுமா?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

கோடீஸ்வரர்களாகப் பிரகாசிக்க நிச்சயமாக கிரகங்களின் அருள்வேண்டும். அதில் குரு, சுக்கிரன் முக்கியமானவர்கள். இவர்கள் தந்த பொருளைப் பாதுகாக்க செவ்வாயின் அருள்வேண்டும். விரயங்களைத் தவிர்க்க சனியின் அருள் வேண்டும். புத்திசாலித்தனமாக தனம் திரட்ட புதனை நாடவேண்டிய சூழ்நிலை உண்டாகும். தேடிய தனம் பன்மடங்கு பெருக ராகுவின் அருள்வேண்டும். பெரிய கோடீஸ்வரரின் தனத்தைப் பாதுகாக்க அரசாங்க ஆதரவு வேண்டுமல்லவா? அதற்கு சூரிய- சந்திரர்களின் அருள்வேண்டும். தேடிய தனத்தில் புண்ணியம் தேடிக்கொள்ள கேதுவின் அருளும் வேண்டும். எனவே நவநாயகர்களின் அருளும் இருந்தால்தான் மகா திரவிய யோகம் உண்டாகும்.

குரு- சந்திரன்; குரு- செவ்வாய்; குரு- புதன்; சுக்கிரன்- செவ்வாய்; சுக்கிரன்- புதன்; சூரியன்- சந்திரன்; சூரியன்- குரு; சூரியன்- புதன்; சந்திரன்- செவ்வாய்; சனி- கேது; குரு- ராகு ஆகிய இரட்டை கிரக சம்பந்தமானது வேறு சிறுசிறு கெடுதல்களைச் செய்தாலும் தனவிருத்தியைத் தரக்கூடியவை. உதாரண மாக குரு- ராகு சேர்க்கையானது நாத்திக எண்ணத்தை உருவாக்கினாலும் திரவியத் தைத் தருமென்று நம்பலாம். சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கையால் சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும் என்றாலும் பணம் தரும் யோகம் என்றும் நம்பலாம்.

 

god



தர்மகர்மாதிபதி யோகம் என்பது ஒரு இரட்டை கிரக யோகமல்லவா? இந்த இரட் டையர்களை குரு பார்த்தால் யோகத்தின் அளவு அதிகமாகும். புதாதித்திய யோகம் என்பது சூரியன், புதன் சேர்க்கையாகும். இதை குரு பார்த்தால் வலிமை அதிகமாகும். சந்திரமங்கள யோகம் என்பது செவ்வாயும் சந்திரனும் இணைவதாம். இதை குரு பார்த்தால் வலிமை அதிகரிக்கும். இப்படியாக இரண்டு கிரகங்கள் ஒரு வீட்டில் நிற்க, குரு பார்த்தால் தனப்பெருக் கம் உண்டு. குரு பார்க்கும் மூன்று வீடுகளில் தலா இரண்டு கிரகங்கள் வீதம் நட்பாய் ஆறு வீடுகளில் நின்றால் அது மகா தனப் பெருக்கம் அல்லவா? அதுதான் மகா திரவிய யோகமாகும். ஒரு வீட்டில் நிற்கும் இருவருக்கும் நட்பு இல்லையென்றாலும் பகை இருக்கக்கூடாது.

சனி- கேது, சூரியன்- சந்திரன் ஆகிய இணைவில் 15 பாகைகள் இடைவெளி இருப்பது மிக நன்று. குருவோடு ஒரு நண்பர், குருவின் 5-ஆவது பார்வையில் இரட்டை நண்பர்கள், குருவின் 7-ஆவது பார்வையில் இரண்டு நண்பர்கள், குருவின் 9-ஆவது பார்வையில் இரண்டு நட்பு கிரகங்கள் நிற்கும் நிலை உண்டாகும்போது ஜாதகமே புனிதப்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட நிலையில் தொட்டது துலங்கும் நிலையும் உண்டாகுமல்லவா? பிறகென்ன? மகாலட்சுமியானவள் அருள் புரிய யாரைக் கேட்க வேண்டும்! வீடுதேடி வந்துவிடுவாளே! பெரும் தனவான்களாகப் பிரகாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் இந்த கிரக அமைப்புக்கு மகா திரவிய யோகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த யோகத்தில் தனகாரகனான குரு வலிமை பெறுவது மிக அவசியமாகும். மகாலட்சுமிக்குரிய சுக்ராச்சாரியாரும் பலம்பெற்று நிற்பது அவசியம்.

 

god



ஒருவருக்கொருவர் பகை பெற்றவர்கள் இணைவது நல்லதல்ல என்றாலும், குரு பார்வையால் சமாதானமுண்டு என்று நம்பலாம். சனி- செவ்வாய் இணைவை குரு பார்த்தால் தீமையில்லை. இதுபோல இருவர் இணையும்போது தோஷம் தரும் சூழ்நி லையும் உண்டாகும். குரு பார்வையால் தோஷம் விலக வாய்ப்புண்டு. சூரியனும் செவ்வாயும் இணைந்தால் மாங்கல்ய தோஷ மாகும். ஆனால் குரு பார்த்தால் அது ஔஷத (மருத்துவ) யோகமாகும். ஒரு தோஷத்தைக் கூட குரு பார்வையானது யோகமாக மாற்றும் புனிதத்திறன் படைத்தது என்பது முக்கியமான விஷயமாகும்.

எனவே, குரு பார்வை பெற்ற இரட்டை கிரகங்கள் நலமளிப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். சிலருக்கு குரு- கேது இணைந்திருப் பார்கள். அதுவும் தனவிருத்தி யோகம்தான். ஆனால் இந்த அமைப்பில் குருவைவிட்டு கேது 15 பாகைக்குமேல் தள்ளிநிற்க வேண்டும். குருமீது பாவர்களின் பார்வை படுவது அவருக்கு சற்று பலவீனம்தான். எனவே தனவான்களாகப் பிரகாசிக்க தனகாரகனும், தனலட்சுமி அருள் பெற்றவனும் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும். மேற்கண்ட நிலையில் கிரகங்கள் நிற்கும் போது பணப்புழக்கம் வருவதற்குரிய தசாபுக் திகள் நடப்பில் வரவேண்டும். நவகிரகம் சம்பந்தப்பட்ட யோகம் என்ப தால் சூரியனார்கோவில் சென்று பரிகா ரங்கள் செய்துகொள்ளவும். ஸ்ரீதனாகர்ஷண குபேர ரட்சை அல்லது ஸ்ரீதனலட்சுமி ரட்சை அணிந்துகொள்ளலாம். திரவிய யோகங்களில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட நீங்கள் தினந்தோறும் பணம் புழங்கும் தனவானே!


- கே.ஜி. ராஜன்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.