Skip to main content

குளித்தால் எண்ணெய் தேய்க்கக்கூடாது ஏன் ?

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

ஒரு பெண் சமூகத்தில் புகழ்பெற்று விளங்கினால், அவளது பெற்றோரும் உற்றாரும் மிகவும் பெருமிதம் கொள்வார்கள். ஆனால் பல பெண்கள் சாதனை படைக்க ஆர்வமிருந்தாலும் நடைமுறையில் செய்யமாட்டார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று முயற்சி செய்யாமல் விட்டுவிடுவார்கள். அதன்காரணமாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை நழுவவிட்டுவிடுவார்கள்; தங்களின் திறமைகளை வீணாக்கிவிடுவார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையுடன் சுயவீட்டிலோ, மூலத்திரிகோணத்திலோ, உச்சமாகவோ இருந்தால், அந்த பெண்ணுக்கு சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் நிறைய இருக்கும். தன் வேலைகளை தைரியமாகச் செய்வாள்.

athipathi god image

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-க்கு அதிபதி நல்ல இடத்தில் வலுவாக இருக்கவேண்டும். சுயவீட்டில் இருக்கவேண்டும் அல்லது சுபகிரகத்தால் பார்க்கப்படவேண்டும். அப்படிப்பட்ட நிலையிலுள்ள பெண்ணுக்கு நல்ல குடும்பவாழ்க்கை அமையும்.அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அவளைப் பாராட்டுவார்கள். பணவசதி இருக்கும். சந்தோஷமாக வாழ்வார்கள். 3-க்கு அதிபதி ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் நல்ல சகோதரர்கள் இருப்பார்கள். அதனால் அவளுக்கு மன தைரியம் இருக்கும். 3-ல் பாவ கிரகம் இருந்தால் தைரியமான பெண்ணாக இருப்பாள்.4-க்கு அதிபதி கெட்டுப்போனால் அல்லது 4-ஆம் வீட்டை பாவ கிரகம் பார்த்தால், ஒரு பெண்ணுக்கு அவளுடைய வீட்டில் பிரச்சினைகள் உண்டாகும். 4-க்கு அதிபதி நல்ல நிலையில் இருந்தால் வாகன வசதி இருக்கும். வீட்டில் சந்தோஷச் சூழல் நிலவும். தைரியமாக வேலையைச் செய்வார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-க்கு அதிபதி நல்ல நிலையில் இருந்தால், அந்தப் பெண் புகழுடன் வாழ்வாள். 5-ஆம் அதிபதி உச்சமாக இருந்தால் அரசியல், கலைத்துறை ஆகியவற்றில் புகழுடன் விளங்குவாள்.

athipathi image 1

6-க்கு அதிபதி பலவீனமாக இருந்தால் நோய்த் தாக்கம் அவ்வளவாக இராது. பாவ கிரகம் இருந்தால் அவள் தைரியத்துடன் இருப்பாள். பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-க்கு அதிபதி 2, 5, 9, 11 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால் நல்ல கணவர் அமைவார். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். ஏதாவது தொழில் செய்தால், அதில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.8-ல் பாவ கிரகம் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். செவ்வாய், ராகு, சனி அல்லது சூரியன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் 8-ல் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு இருமுறை திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது.9-க்கு அதிபதி சுபகிரகமாக இருந்து அது உச்சமாகவோ அல்லது 5, 9, 11-ல் இருந்தாலோ அவள் செய்யும் தொழிலில் அவளுக்கு வெற்றி, புகழ் கிடைக்கும்.

10-க்கு அதிபதி சுயவீட்டிலோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அவள் சுயமுயற்சியால் புகழ் பெறுவாள். யாருடைய உதவியுமில்லாமல், தன் சொந்த முயற்சியால் 31 வயதிற்குப்பிறகு புகழைப் பெறுவார்கள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 11-க்கு அதிபதி 11-ல் அல்லது உச்சமாக இருந்தாலும், 11-ல் சூரியன் அல்லது சனி இருந்தாலும் அந்தப் பெண் நல்ல பணவசதியுடன் இருப்பாள்.12-க்கு அதிபதி பாவ கிரகமாக இருந்தால், அவளுக்கு பயணத்தில் பிரச்சினைகள் உண்டாகும். தூக்கம் நன்றாக வராது. இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். 12-ல் சூரியன், சனி அல்லது செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி இருந்தால் இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.லக்னத்தில் கேது, 7-ல் ராகு, 10-ல் சனி, 12-ல் செவ்வாய் இருந்தால், 30 வயதிற்குப்பிறகு அவள் கடுமையான வாழ்க்கையை வாழவேண்டியதிருக்கும். அவளுடைய கணவருக்கு விபத்து ஏற்படலாம். சிலருக்கு இரண்டாவதாகத் திருமணம் நடைபெறும்.

பரிகாரங்கள்
ஒரு பெண் மகிழ்வுடன் இருப்பதற்கு, தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் சூரியனை வழிபடவேண்டும்.
சமையலறையைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். ஆடைகளை நினைத்த இடத்தில் போடக்கூடாது. அவற்றை மடித்து உரிய இடத்தில் வைக்கவேண்டும். வீட்டைச் சுத்தமாக வைக்கவேண்டும். கருப்புநிற ஆடையைத் தவிர்ப்பது நல்லது.
திங்கட்கிழமைதோறும் சிவனை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமை விரதமிருந்து துர்க்கை ஆலயத்திற்குச் சென்று வழிபடவேண்டும். 5, 9-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணியலாம்.
ஞாயிற்றுக்கிழமை தலைக்குக் குளிக்கக்கூடாது. குளித்தால் எண்ணெய் தேய்க்கக்கூடாது.
குலதெய்வத்தை வணங்குவது அவசியம்.
குரு பகவானின் அருளைப் பெறுவதற்கும், பணவசதி நிலைப்பதற்கும் வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெறவேண்டும்.
வியாழக்கிழமை பசுவுக்கு வெல்லம், மஞ்சள் வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுத்துவந்தால் இன்னல்கள் விடைகொடுக்கும். நிம்மதியான வாழ்வைக் காணலாம்

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.