Skip to main content

கொடுத்த கடன் திரும்பாதது ஏன்?

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

மனிதன் தன் வாழ்வை சாதகமாக மாற்றியமைத்துக்கொள்ள இறைவன் அளித்த வரப்பிரசாதமே முகூர்த்தம். முகூர்த்தம் என்றால் நம் வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகளுக்கு நேரம் பார்த்தல் என்று எடுத்துக்கொள்ளலாம். எந்த ஒரு செயலும் தொடக்கம் நன்றாக இருந்துவிட்டால் வெற்றி நிச்சயம். இதை பிரபஞ்சம் நமக்குக் கொடுத்த பரிசு, பரிகாரம் என்றும் கூறலாம்.

ஒரு முகூர்த்தம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களின் தொகுப்பாகும். மனித வாழ்வில் விதியை நிர்ணயம் செய்யும் ஜோதிடத்தின் மூன்று அடிப்படைக் கூறுகளில் ஒன்றான நட்சத்திரம் பெரும்பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட நட்சத்திரங்களில்தான் சில காரியங்கள் செய்யவேண்டுமென நியதியை வகுத்துள்ளனர்.

 

lakshmi



உக்கிர சுபாவமுடைய அதிதேவதைகளைக் கொண்ட நட்சத்திரங்களில் எந்த காரியமும் செய்யக்கூடாது. 27 நட்சத்திரங்களுக்கும்  muruganஅதிதேவதைகள் உண்டு. இந்த தேவதைகள் நல்லவர்களாகவும், உக்ரமானவர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அவற்றை மனதில் கொள்ளத்தக்க விதத்தில் ஒரு பாடல் கீழே... 

கூடாத நட்சத்திரங்கள்:

"ஆதிரை பரணி கார்த்தி ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராறும்
மாதனங்கொண்டார் தாரார் வழிந
டைப்பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின் வாய் தேரை தானே.'

விளக்கம்: பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்ப வராது. பயணம் சென்றவர் வீட்டிற்குத் திரும்பி வரமாட்டார். வியாதியுடன் படுக்கையில் படுத்தவர் குணமடைய மாட்டார்.

 

god



இந்த பன்னிரண்டு நட்சத்திரங்களும் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு அந்த நட்சத்திரங்களின் அதிதேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்களாக இருப்பதே காரணம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நட்சத்திரங்களின் அதிதேவதைகள்:

பரணி- எமன்; கார்த்திகை- அக்கினி; திருவாதிரை- ருத்திரன்; ஆயில்யம்- ஆதிசேஷன்; பூரம்- பார்வதி; பூராடம்- வருணன்; பூரட்டாதி- குபேரன்; கேட்டை- இந்திராக்கினி; விசாகம்- குமரன்; சித்திரை- விஸ்வகர்மா; சுவாதி- வாயு; மகம்- பித்ரு தேவதைகள். ஒரு சுபகாரியத்திற்கு நாள் குறிக்கும்பொழுது மேற்கண்டவற்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். நம் அன்றாட நிகழ்விற்கு இதைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

கொடுத்த பணத்தை வசூல் செய்ய முடியாமல் மனவேதனைப்படுவர்கள், தாங்கள் பணம் கொடுத்த நாளை சரிபார்த்தால் மேலே உள்ள நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நாளாகத்தான் நிச்சயம் இருக்கும். அன்றாடம் பணம் கொடுக்கல்- வாங்கலில் இருப்பவர்கள் இதைக் கணக்கிட வேண்டியதில்லை. இந்த நட்சத்திர நாட்களில் நகையையும் அடமானம் வைக்கக்கூடாது. சிறுசிறு உடல் உபாதைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்ல இந்த நட்சத்திரங்களைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கும் பார்க்கக்கூடாது.

அறுவை சிகிச்சை, முதன்முறையாக ஒரு பெரிய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தல் போன்ற காரணத்திற்குப் பார்க்கலாம். அன்றாடப் பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் இதைப் பார்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் தீர்த்த யாத்திரை செல்லுதல், அயல்நாடு செல்லுதல், அண்டை மாநிலம் செல்லுதல் தொடர்பாக தாராபலம் உள்ள நட்சத்திரமாகத் தேர்வு செய்து பயணம் செய்யலாம்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.