Skip to main content

அபிஷேகப் பிரியர் சிவபெருமான்; 12 மாத பௌர்ணமி அபிஷேகமும் பலன்களும்!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

God sivan 12 Months Abhishekam and Benefits 

 

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நன்னாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதை தரிசிக்கலாம். மேலும், ஆகம முறைப்படி குறிப்பிட்ட நாளில் அமையும் நட்சத்திரத்துக்குரிய பொருள் அபிஷேகப் பொருளாக அமைந்திருக்கும். அதற்கேற்ற பலன்களும் உண்டு.

 

சித்ரா பௌர்ணமி - மரிக்கொழுந்து இடம்பெறும். வாழ்வில் மிகுந்த பெருமையும் புகழையும் கொடுக்கும்.

 

வைகாசிப் பௌர்ணமி - சந்தனத்தால் அபிஷேகம் செய்வர். இதனால் மனை, வீடு முதலிய பாக்கியம் கிடைக்கும்.

 

ஆனிப் பௌர்ணமி - மா, பலா, வாழை எனும் முக்கனிகளால் அபிஷேகம் நடைபெறும். கேட்ட நல்லவரம் கிடைக்கும்.

 

ஆடிப் பௌர்ணமி - பசும்பால் அபிஷேகம். பயம் நீங்கும்.

 

ஆவணிப் பௌர்ணமி - வெல்லம் - பாவம், தோஷம் நீங்கும்.

 

புரட்டாசி பௌர்ணமி - கோதுமை நெய்யப்பம். இதனால் ஐஸ்வரியம் தங்கும்.

 

ஐப்பசி பௌர்ணமி - அன்னாபிஷேகம். செல்வம், கல்வி, ஞானம், வீடுபேறு மற்றும் பசித்த வேளையில் உணவு தேடிவரும்.

 

கார்த்திகை பௌர்ணமி - பசுநெய் அபிஷேகம். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

 

மார்கழி பௌர்ணமி - நறுமண வெந்நீர் அபிஷேகம். நோய் நொடிகள் நீங்கி ஆயுள் கூடும்.

 

தை பௌர்ணமி - கரும்புச்சாறு அபிஷேகம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

 

மாசி பௌர்ணமி - பசு நெய்யால் தோய்த்த கம்பளி சிவலிங்கத்தின் மீது போர்த்தப்படும். குழந்தைச் செல்வம் கிட்டும்.

 

பங்குனி பௌர்ணமி - பசுந்தயிரால் அபிஷேகம் நடைபெறும். இதனைத் தரிசித்தால் மனதிற்கேற்ற வாழ்க் கைத்துணை அமையும். இல்லறத்தில் சுகம் காணலாம்.

 

அந்த வரிசையில் ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று நடைபெறும் அன்னாபிஷேகம் மிகவும் போற்றப்படுகிறது.

 

ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அந்நாளில் நடைபெறும் அன்னாபிஷேக வைபவத்தில் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் அன்னாபிஷேகத்திற்குரிய பொருட்களை கோவில் நிர்வாகத்தினரிடம் அளித்து கலந்து கொண்டால் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. உலகிலுள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்து காக்கும் சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவலிங்கத் திருமேனியில் அன்னம், காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள்.

 

‘அன்னம் பிராணமயம்' என்று வடமொழியும், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சங்கத்தமிழும் அன்னத்தின் சிறப்பைப் போற்றுகின்றன. மேலும்,

‘அன்னமே உண்மையான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ

சொரூபம். ஆகையால் அன்னமே உயர்

வானது' என்று வேதம் சொல்கிறது.

‘அன்னம்தான் ஜீவன்' என்கிறது சாஸ்திரம்.

 

‘தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான் மட்டும் உண்பவன் பாவப் பிண்டத்தைதான் உண்கிறான்' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

‘அன்னம் அளி... அன்னம் அளி... ஓயாமல் அன்னம் அளி' என்கிறது பவிஷ்ய புராணம்.

‘உலகிலுள்ள மானிடர்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது' என்று வேத நூல்கள் கூறுகின்றன.

 

‘ஐப்பசிப் பௌர்ணமியில் சிவலிங்க மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கையும் சிவாம்சம் பெற்றது. அதாவது சிவரூபமாகும். இதனைத் தரிசிப்பதால் ஒரே சமயத்தில் கோடி லிங்கங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்' என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இதனையெல்லாம் நினைவுகூர்ந்துதான் துலா மாதமான ஐப்பசிப் பௌர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

 

பொதுவாக அன்னாபிஷேகம் மாலை நேரத்தில் நடைபெற்றாலும், சில கோவில்களில் முற்பகலிலும் நடைபெறுகிறது. தில்லையில் ரத்னசபாபதிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு, பிரசாதமாக அளிக்கப்படும் அன்னத்தை உண்டால் குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிட்டும். கல்வி, கலை, ஞானத்தில் சிறந்து விளங்குவர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் வசந்தம் வீசும் என்று சொல்லப்படுகிறது.பொதுவாக ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம் பக்தர்களுக்கு எல்லா வளமும் நலமும் அளிக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.