Skip to main content

திருமணம் செய்துகொண்டவர்கள் திங்கட்கிழமைதோறும் விரதம் ஏன் ?

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

சிவ. சேதுபாண்டியன்

சனி பகவானைக் கொண்டே நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக சனி, செவ்வாய் இணைந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் ஊழ்வினை தோஷமாகும். அதேபோல குரு, சனி இணைந்தாலோ, பார்வை பெற்றாலோ, ஒருவருக்கொருவர் பரி வர்த்தனை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். இதற்கும் சனி பகவானே முக்கிய காரண மாகிறார். நமது ஜாதகத்தை நன்றாக ஆராயும்பொழுது கண்ணுக் குத் தெரியாத ரகசியங்கள் வெளிவரும். அவற்றில் ஒன்றுதான் புனர்பூ தோஷம். இதுவும் சனி பகவானால் உண்டாகக்கூடியது. இந்த தோஷம் இருந்தால் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தாலும் பின்னர் மணமக்கள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிடும் நிலை உருவாகும்.

temple

புனர்பூ தோஷம் என்பது-

● சனியும், சந்திரனும் ஒரே வீட்டில் இணைந்திருப்பது.

● சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் இருப்பது.

● சனி நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது.

● இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்வது.

ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கும் பொழுது புனர்பூ தோஷமிருந்தால் ஒதுக்கிவைக்க வேண்டும்.
 

temple 1

கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படாமலிருப்பதற்கு புனர்பூ தோஷமே காரணமாகிறது. யோனிப் பொருத்தம் இருந்தாலும் புனர்பூ தோஷமிருந்தால் கணவன்- மனைவிக்குள் முதலில் ஒற்றுமையாக இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தபிறகு வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டுவிடும். ஒருசிலர் வேறுவழியில்லாமல் கணவன் செய்யும் தவறுகளை மனைவியும், மனைவி செய்யும் தவறுகளை கணவனும் பொறுத்துக்கொண்டு வெளியில் சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். சிலர் ரகசியமாக வாழத்தெரியாமல் ஊரைக் கூட்டிவிடுவார்கள். பின்பு நீதிமன்றம் போய் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடுவார்கள். எனவே, பொருத்தம் பார்க்கும்பொழுது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் இருக்கிறதா என பார்க்கும்பொழுது, புனர்பூ தோஷமும் இருக்கிறதா என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பரிகாரம்

புனர்பூ தோஷத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள் திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, ஒன்பதாவது திங்கட்கிழமை திருச்செந்தூர் முருகன் அல்லது உங்கள் பகுதியிலுள்ள வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட்டு வர தோஷம் நீங்கும். ஒன்பது வாரத்திற்குக் குறையாமல் விரதமிருப்பது அவசியம்.
 

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.