Skip to main content

தோஷ ஜாதகத்தில் யோகம் இருக்குமா?

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்.
 

ஜோதிடத்தில் தோஷமுள்ள ஜாதகம், யோகமுள்ள ஜாதகம் என இரு பிரிவுகள் உள்ளன. தோஷ ஜாதகத்தில் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், பிரம்மஹஸ்தி தோஷம், பிதுர்தோஷம் என பலவகை உள்ளன. மாங்கல்ய தோஷம் என்பது கணவனை இழத்தல் என்பது மட்டும் பொருளல்ல. இது பலவகையில் வரும். உதாரணமாக அன்பில்லாத கணவன், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், நோயுள்ள கணவன், வேலை, தொழில் செய்யாமல் சோம்பேறியாய்த் திரியும் கணவன், சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்குக் கொடுக் காமல் தவறான வழிகளில் செலவழிப்பவன், உத்தமியான மனைவியை சந்தேகிக்கும் கணவன், குடும்பத்தை கவனிக்காமல் எப்போதும் நண்பர்களுடன் சுற்றித்திரிபவன், ஆண்மை யற்ற கணவன், பிடிவாதம், முன்கோபம் உள்ளவன், ஏழ்மையில் துன்பப்படும் தோஷமுள்ள கணவன் அமைவதெல்லாம் மாங்கல்ய தோஷத்தில் வரும்.
 

yoga

களத்திர தோஷத்திலும் பலவகை உள்ளன. உதாரணமாக நல்ல குணமுள்ள மனைவி அல்லது கணவன் அமை யாமல் இருப்பது; கணவன்- மனைவி இருவரும் மதிக்காமல் நடப்பது; கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மனைவி ஊதாரித்தனமாக செலவு செய்வது; பொறுப்பற்ற கணவன்- மனைவி அமைவது; கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமையில்லாமல் இருப்பது; சந்தேகம் கொள்வது; கணவன், மனைவி இருவரும் தவறான வழியில் மறைமுகமான நடவடிக் கையில் ஈடுபடுவது, குடிகாரக் கணவன் அமைவது போன்றவையெல்லாம் களத்திர தோஷ வகையில் சேரும்.
 

yoga

குழந்தைகள் தாமதகமாகப் பிறப்பது; குழந்தைகள் இந்த ஜென்மாவில் அமை யாமல் போவது; குழந்தைகள் பிறந்தும் பெற்றோர்களுக்கு உதவாமல் போவது; நல்ல குணமுள்ள- சமுதாயத்தில் பெய ரெடுக்கும் குழந்தைகள் பிறக்காமல் போவது; பெற்றோர்கள் பிள்ளைகளைத் துன்புறுத்துவது; பிள்ளைகள் வாழ்க் கையில் முன்னேற முடியாமல் கஷ்டப் படுவது; பிள்ளைகள் பிறந்து இடையில் இழப்பது; பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்குத் தள்ளுவது; பிள்ளை களால் பெற்றோர்களுக்கு தலைகுனிவு ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் புத்திரதோஷத்தில் வரும்.
 

yoga

வாழ்க்கையில் அதிர்ஷ்டப் பலன்கள் கிடைத்து அனுபவிப்பதுதான் யோகம். ஜோதிடத்தில் எண்ணற்ற யோகங்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதரின் ஜாதகத்தில் யோகங்கள் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். யோகங்கள் பலவகை உள்ளன. கஜகேசரி யோகம், குருச்சந்திர யோகம், பஞ்சமகா புருஷயோகம், சந்திரமங்கள யோகம், நித்ரயோகம், வெளிநாடு யோகம், புத்திரயோகம், பெற்றோர்களால் யோகம், சகடயோகம், விமலா யோகம், சுனபா யோகம் என எண்ணற்ற யோகங்கள் ஜோதிடத்தில் உள்ளன.
 

குருச்சந்திர யோகம் என்பது குருவும் சந்திரனும் சேர்வது அல்லது சந்திரனுக்கு திரிகோண ஸ்தானமான 5, 9-ல் குரு இருப்பது. இந்த யோகத்தால் படிப்பிற்கு சம்பந்தமில்லாத துறையில் நுழைந்து, அதன்மூலம் சாதனை செய்து வாழ்க்கையில் பெரிய அளவில் பொருள் சம்பாதித்து முன்னேற்றம் அடைவது. சந்திரனுக்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10-ஆம் இடத்தில் குரு இருந்தால் கஜகேசரி யோகம். இந்த யோகத்தால் சமுதாயத்தில் நான்குபேர் மத்தியில் சிங்கம்போல் வாழ்வார்கள். இது காசு பணம் கொடுக்கும் யோகமல்ல. தோஷமுள்ள ஜாதகமானாலும், தோஷமற்ற ஜாதகமானாலும் யோகங்கள் ஜாதகத்தில் இருக்கும். தோஷமில்லாத சுத்த ஜாதகத்தில் யோகங்கள் இருந்தால் நூறு சதவிகிதப் பலன்கள் கொடுக்கும். தோஷமுள்ள ஜாதகத்தில் யோகங்கள் இருக்கும். ஆனால் தோஷங்கள் அதிகமாக இருந்தால் யோகங்கள் முழுமையான பலன் களைக் கொடுக்காது. யோகங்களின் அளவைக் குறைத்துவிடும். இதனால் யோகங்கள் இருந்தும் பயனில்லாமல் போய்விடும்.
 

யோகங்களின் பலன்கள் அதற்குரிய தசாபுக்தி நடை முறையில் இருந்தால் மட்டுமே முழுமையாகக் கிடைக்கும். லக்னத்தின் அடிப்படையில் யோகங்கள் அமைந்தால் நூறு சதவிகிதப் பலன்கள் கொடுக்கும். ராசியின் அடிப்படையில் வரும் யோகங்கள் ஐம்பது சதவிகிதப் பலன்கள்தான் கொடுக்கும். லக்னாதிபதி வலுவாக இருப்பது மிக முக்கியம். அதேபோல யோகங்களைக் கொடுக்கும் கிரகங்கள் நூறு சதவிகிதம் வலுவாக இருந்தால் மட்டுமே முழுமையான பலன்கள் கிடைக்கும். இல்லையென்றால் அதற்கேற்றாற்போல் யோகப்பலன்கள் அமையும். யோகப்பலன்கள் நடைமுறையில் கிடைக் கிறதோ இல்லையோ- அதையே நம்பிக் கொண்டிருக்காமல் உழைத்து வாழவேண்டிய யோகம் இருந்தால்போதும். அதை வைத்து வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்.
 

யோகப் பலன்கள் சில நேரங்களில் நேர்வழியில் வரும்; சில நேரங்களில் குறுக்குவழியில் வரும். உதாரணமாக, குருவும் கேதுவும் சேர்ந்தாலோ பார்த்தாலோ கோடீஸ்வர யோகம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த யோகம் நேர்வழியில் அமைந்தால் வாழ்க் கையில் பயன்படும். குறுக்குவழியில் கிடைக்கும் கோடீஸ்வர யோகம் பின்னால் சிக்கலில் மாட்டிவிட்டு நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடும். தசாபுக்தி முடிந்துவிட்டால் யோகங்கள் எல்லாம் முடிந்துவிடும். மீண்டும் யோகத்தைத் தராது. ராகு வழியில் வரும் யோகம் சில நேரங்களில் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். அதே ராகு கீழே அதளபாதாளத்திற்குத் தள்ளிவிடும். எனவே தோஷமுள்ள ஜாத கத்தில் யோகங்கள் இருக்கும்; ஆனால் தோஷம் கடுமையாக இருந்தால் யோகத்தின் அளவைக் குறைத்துவிடும்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.