Skip to main content

உங்களுக்கு அரசு வேலையா? தனியார்துறையா?

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

சிவ. சேதுபாண்டியன்

லக்னத்திற்கு 10-ஆம் அதிபதியையும், எட்டாமதிபதியையும் பார்த்து ஒருவருக்கு அரசு வேலை கிட்டுமா அல்லது தனியார்துறையில் பணியா என்பதை அறியலாம். சனி பகவான், புதன் வீட்டிலோ அல்லது புதன், சனி வீட்டிலோ வரக் கூடாது. அப்படி வந்தால் அரசு வேலை கிடைத்தாலும் மூப்புவரை வேலை பார்க்கமுடியாது. இவ்வாறு ஜாதகம் அமையப்பெற்றவர்கள் அரசு ஊழியராக இராணுவ வேலைக்கு மட்டும் செல்லலாம். ஏனென்றால் 18 வயதில் ஒருவர் இராணுவத்தில் சேர்ந்தால் 15 முதல் 24 ஆண்டுகள்வரை பணிசெய்ய முடியும். பின்னர் தனியார் துறையில்தான் வேலைபார்க்க வேண்டும். 42 வயதுக்குள் ஓய்வுபெற்று விடுவார். தனியார்துறையாக இருந்தால் 60 வயதுவரை வேலை செய்யலாம்.

 

murugan temple



குறிப்பாக, சனி வீட்டில் புதன் இருந்தாலும், புதன் வீட்டில் சனி இருந்தாலும் ராகு தசை வருவதற்கு முன்னர் விருப்ப ஓய்வில் (வி.ஆர்.எஸ்.) சென்றுவிட வேண்டும். அவ்வாறு செல்லவில்லையென்றால் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஜாதகர் கேது தசை, சுக்கிர தசையில் பிறந்திருந்தால் முன்னெச்சரிக்கையுடன் ராகு தசை வருவதற்கு முன்னர் விருப்ப ஓய்வில் சென்றுவிடவேண்டும். தனியார்துறை என்றால் கடைசிவரை பணியாற்றலாம். லக்னத்திற்கு 10-ஆமிடம் செவ்வாய் வீடாக இருந்தாலும், 10-ஆமிடத்தில் செவ்வாய் இருந்தாலும் மருத்துவத்துறையில் வேலைக்குச் செல்வார். லக்னத்திற்கு 12-ஆம் வீடு சந்திரன் வீடாக இருந்தாலும், 12-ஆம் வீட்டில் சந்திரன் அல்லது ராகு நின்றாலும் அந்த ஜாதகர் மத்திய அரசு வேலைக்கு அல்லது வெளிநாடு செல்வார்.

பத்தாமதிபதி சுக்கிரன் அல்லது புதனாக இருந்தாலும், 10-ஆம் வீட்டில் சுக்கிரன் அல்லது புதன் இருந்தாலும் ஆசிரியர் பணி அல்லது பல்கலைக்கழக வேலைக்குச் செல்வார். 10-ஆம் வீட்டில் புதன் உள்ளவர்கள் பொறியாளராகச் செல்வார்கள். மத்திய அரசுப் பணிக்கு அல்லது அயல்நாடு செல்வார்கள். சனி பத்தாமதிபதியாக இருந்தாலோ, லக்னத்திற்கு 10-ஆம் வீட்டில் சனி இருந்தாலோ- தண்டனையிடல் பணியான அரசு வேலைக்குச் செல்வார்கள். இவர்களே ஐ.பி.எஸ் ஆகவும், நீதிபதியாகவும் வருவார்கள். இவர்கள் அடிக்கடி குற்றவாளிகளை சந்திக்க வேண்டி வரும். ஒருசிலர் வழக்கறிஞராகவும் வரலாம். லக்னத்திற்கு 8-ல் சனி இருந்தாலோ, எட்டாமதிபதி சனியாக வந்தாலோ படிப்பை 12-ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு சீருடையணிந்த அரசுப் பணிக்குச் செல்லவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் பின்னாளில் வம்பு வழக்கில் சிக்கி குற்றவாளியாக சிறைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும்.

 

murugan temple



லக்னத்துக்கு பத்தாமதிபதி குருவாக வந்து ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் நகைக்கடை வைப்பார். அல்லது நகைத்தொழிலில் ஈடுபடுவார். லக்னத் திற்கு 10-ஆம் வீட்டில் குரு இருந்தாலும், ஆட்சி, உச்சமடையாவிட்டாலும் அவர் அரசுப் பணியில் இருக்கலாம். ஒருவேளை புதன் பத்தாமதிபதியாகி நீசவீடான மீனத்தில் இருந்துவிட்டால் அவர் நிறைய பொய் பேசுவார். பணம் காசு சேராது. புதன் நீசமாகிப் பிறந்த வர்கள் புதன் தசையில் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இப்படிப் பட்டவர்கள் அரசு ஊழியராக இருந் தாலும் தனியார்துறையில் இருந் தாலும் எப்பொழுதும் முன்னெச் சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

லக்னத்திற்கு பத்தாமதிபதி சூரியனாக இருந்தாலும், 10-ஆம் வீட்டில் சூரியன் இருந்தாலும் நெருப்பு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடியவர். உதாரணமாக டீக்கடை முதலாளியாகவும், வெல்டிங் பட்டறை வைத்திருப்பவராகவும் இருப்பார். மத்திய அரசுப் பதவியில் இராணுவத்தில் டாங்கிப்படையில் சிறந்தவராக விளங்குவார். ஒருசிலர் தனியார்துறைகளில் நூற்பு, துணி நெய்தல் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவர்.

லக்னத்துக்கு சுக்கிரன் எட்டாமதிபதியாக அமைந்தாலோ, 8-ஆம் வீட்டில் இருந்தாலோ பலவிதமான தொழில்களைச் செய்து முன்னேறுவார். குடும்பம் சீராக அமையாது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிலிப் பிரித்துவிடுவார்கள். தீய பழக்கங்கள் இவருக்கு ஏற்படும். தொழிலில் கெடுதல் வருவதால் அரசு ஊழியராக மட்டும் செல்லக்கூடாது. தனியார்துறைகளிலேயே வேலை செய்யவேண்டும்.

மேற்கண்டவை ஒழுங்காக அமையப்பெறா விட்டால் குரு வீட்டில் சனி வரக்கூடாது அல்லது சனி வீட்டில் குரு வரக்கூடாது. சனி- குரு பார்வையும் பெறக்கூடாது. இப்படி சில தோஷங்கள் இருக்கிறதென்று நீங்கள் நினைத்தால் நல்ல ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தைக் காண்பித்து அவரது ஆலோசனைப்படி நடந்து கொள்ளலாம்.

பரிகாரம்-1

கும்பகோணம் அருகிலுள்ள திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் தோஷ நிவர்த்தி செய்வதுண்டு. (காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை). பரிகாரக் கட்டணம் ரூ.750/- இதனை சம்பந்தப்பட்டவர்தான் செய்துகொள்ளவேண்டும்.

பரிகாரம்-2

மேற்கண்ட பரிகாரத்தைச் செய்துகொள்ள முடியாதவர்கள், அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு அமாவாசையன்று சென்று, 27 விளக்குகள் ஏற்றி வழிபட்டு வர, தோஷம் நீங்கி வேலைவாய்ப்பு கிட்டும். மூன்று அமாவாசைகள் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.