Skip to main content

உடல் - கோவில் அமைப்பு இரண்டும் ஒன்றா ?

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

உடலியல் கூறுகளின் அடிப்படையில் அமைந்துள்ள ஆலயமானது, அது அமைக்கப்பட்டிருக்கும் முறையில் சில அர்த்தங்களைச் சொல்கிறது. ஆலய வெளிப்புற மதில் சுவர் தொடங்கி கர்ப்பக்கிரகம் வரையிலான ஒவ்வொரு நிலையும் ஒரு அர்த்தத்தைச் சொல்லி, இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. அவற்றையெல்லாம் அறியாத நிலையில், நம் மனச்சுமைகளைக் கொட்டிச்செல்லும் கூடாரமாய் ஆலயங்களை எண்ணிக்கொண்டு நிம்மதிதேடி வந்துபோகிறோம். ஆலயம் சொல்லும் செய்தியைத் தெரிந்தும் உணர்ந்தும் வழிபடாதவரை அங்கிருந்து நிம்மதி மட்டுமல்ல; எதுவுமே கிடைக்காது என்பதே நிதர்சனம்.ஆலயத்திற்கு வந்ததும் முதலில் அதைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் பெரிய மதில் சுவர் வரவேற்கும். நம் வீட்டைச் சுற்றிலும் வேலியுண்டு. ஆலயத்தைச் சுற்றிலும் வேலியுண்டு. ஒன்று நம் ஆசையின் அடையாளம்; மற்றொன்று பற்றற்று இருத்தலின் அடையாளம். இன்னும் எளிமையாகச் சொன்னால், வீட்டு வேலி ஜீவாத்மாவின் பலவீனம். ஆலய வேலி ஜீவாத்மாவின் பலம்! ஆசைகள், பந்த பாசங்களிலிருந்து விலகி இறைவனை நாடிவந்தால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும் என்பதன் அடையாளமாக, ஆலயத்தைத் தனித்துக் காட்டும் படியாக அதைச்சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

meenakshiamman temple

வெளிப்புற மதில் சுவரில் வெளிக்கோபுரம் இருக்கும். இறைவனின் திருவடி அடையாளமாகத் திகழும் வெளிக்கோபுரத்தில் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள் என எல்லாம் சிற்ப வடிவில் இடம்பெற்றிருக்கும். இது பிரபஞ்சம் முழுமையும் இறைவனிடம் அடக்கம் என்பதன் அடையாளம். பிரபஞ்சத் தையே தன் காலடியில் வைத்திருக்கின்ற இறைவனின் வீடான ஆலயத்திற்குள் வரும்போது, செருப் போடு சிற்றின்ப ஆசைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் வெளிக்கோபுரத்தில் விரச வடிவிலும் பொம்மைகள் இடம்பெற்றிருக்கின்றன.வெளிக்கோபுரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு, பதினொன்று என ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஒன்றின்மேல் ஒன்றாகப் பெருகிக்கொண்டே போகும். அவை ஒவ்வொன்றுக்கும் அர்த்தங்கள் உண்டு. மூன்று வாசல்கள் ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளையும்; ஐந்து வாசல்கள் ஐம்பொறிகளையும்; ஏழு வாசல்கள் ஐம்பொறிகளுடன் மனம், புத்தி ஆகியவற்றையும்; ஒன்பது வாசல்கள்- மேற்சொன்ன ஏழுடன் சித்தம், அகங்காரம் ஆகியவற்றையும் குறிக்கும். இத்தனை வாசல்கள் இருந்தும் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தரைமட்டத்திலுள்ள ஒரு வாசல் மட்டுமே உதவுகிறது. மற்ற வாசல்கள் இருந்தும் பயன்படாததைப்போல, அக, புறக்கரணங்கள் (வழிகள்) பல நம்மிடம் இருந்தாலும், இறைவனை நாடிச்செல்ல "மனம்' என்னும் கரணம் மட்டுமே பயன்படும். எனவே மற்ற கரணங்களை இருக்கும் தன்மையிலேயே விட்டுவிட்டு, மனதின் உதவி யோடு மட்டுமே இறைவனை நோக்கி உள்முகமாகச் செல்லவேண்டும் என்பதே வெளிக் கோபுரத்தின் தத்துவம்.

இறைவனை நோக்கி வருவதற்கு மட்டு மல்லாது, எப்பொழுதும் இறைவனை நோக்கிய மனம் இருந்தால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும் என்பதை உணர்த்துவதற்காகவே ஜீவாத்மாவின் அடையாளமாகிய தெய்வ வாகனங்கள் இறைவனை நோக்கியபடி அமர்ந்திருக்கும்.இவற்றைக் கடந்தால் வெளிப்பிராகாரம், உள் பிராகாரம், அதனுள் உள்ள பிராகாரம் என மூன்று பிராகாரங்கள் இருக்கும். ஆசைகள், பந்த பாசங்கள், சிற்றின்பங்களை வெளியே விட்டுவிட்டு வந்ததைப்போல உலகப்பற்றையும் படிப்படியாக விடப் பழக வேண்டும் என்பதன் அடையாளம் இந்தப் பிராகாரங்கள். இதேபோல கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள ஐந்து பிராகாரங்கள், நம்முடைய ஐம்புலன்களையும் அடக்கி பக்தி செலுத்தவேண்டும் என்பதன் அடையாளமாகும். உலகப்பற்றைப் படிப் படியாக விடவும், ஐம்புலன்களை அடக்கி பக்தி செலுத்தவும் பழகிவிட்டால், இறைவனின் சந்நிதானமான கர்ப்பக்கிரகத்தை எளிதில் அடையலாம் என்பதாலயே கர்ப்பக்கிரகத்தின் முன்னும், அதைச் சுற்றிலும் பிராகாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

golden temple

ஆலயம் முழுக்க ஆயிரம் விளக்குகளை அமைத்தாலும், கர்ப்பக்கிரகத்திற்குள் மட்டும் எந்தவித மின் விளக்குகளும் அமைக்கப்படுவதில்லை. ஜன்னல்களோ, இடைவெளிகளோ, கிராதிகளோ வைக்காமல், உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு வாசல் மட்டுமே வைத்து கர்ப்பக்கிரகத்தை அமைத்திருப்பார்கள். இது இறைவனை நாம் நாடிச்செல்வதற்கான ஒரே கரணம் மனம் மட்டுமே என்பதன் அடையாளமே. அந்த மனதை ஆத்மா குடியிருக்கும் உள்ளத்தை நோக்கித் திருப்பினால் அங்கே காரிருள்தான் தெரியும். அதனாலயே உள்ளத்தைக் குறிக்கக்கூடிய கர்ப்பக்கிரகம் வெளிச்சமில்லாமல் இருட்டாக அமைக்கப்பட்டிருக்கும். வெளிச்சமாக இருக்கும்போது மனதை இறைவனை நோக்கி உள்முகமாக வைத்திருப்பது கடினம்.கவனமும் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டையைப்போல சிதறி ஓடும். ஆனால் அது இருளாக இருக்கும்போது சாத்தியம். அப்படித் தொடர்ந்து உள்நோக்கியே வைத்திருக்கப் பழகிவிட்டால், ஆலய வழிபாட்டின்போது தீபாராதனைமூலம் இறைவன் காட்சி தருவதற்குமுன் எப்படி மணியோசை கேட்கிறதோ, அப்படியான ஒருவித மணி யோசையை நமக்குள்ளேயே கேட்கமுடியும். அப்படிக் கேட்கக்கூடிய ஓசையை "ஞானம்' என்றும், அதைக் கேட்டவர்களை "ஞானிகள்' என்றும் அழைத்தனர். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஞானம் உணரும் ஞானிகளாய் எல்லாராலும் இருக்கமுடியாது என்பதாலயே, இறைவன் தன்னையடையும் இன்னொரு மார்க்கத்தை கர்ப்பக்கிரகத்தின் வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று படிகள்மூலம் உணர்த்துகிறான். பெரும்பாலும் கர்ப்பக்கிரகத்தின் வாசலில் மூன்று படிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இது ஆசை, ஆணவம், அகங்காரம் என்ற மூன்று அஞ்ஞானத்தைக் குறிக்கும். இம்மூன்றையும் நீக்கிவிட்டுத் தன்னை நோக்கி வருபவன் தன்னையடையும் தகுதி பெற்றவனாகிவிடுவான் என்பதை பக்தர்களுக்கு எளிமையாக உணர்த்துவதன் அடையாளமே மூன்று படிகள். படிகளின் தத்துவம் உணர்ந்தால் பரமாத்மாவை நெருங்கலாம்.


எழுதியவர் : கோபி சரபோஜி

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.