Skip to main content

மனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வுக்கு...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தேவையற்ற கெட்ட பழக்கங்களுக்கு பல நேரங்களில் அடிமையாகிவிடுகிறான். அதனால் அவனுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. பல திறமைசாலிகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, கிடைத்த வாழ்க்கையையே வீணடித்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு உடல்நலம் கெட்டுவிடுகிறது. பலர் ஈரலில் பாதிப்பு உண்டாகி, குறைந்த வயதிலேயே இறந்துவிடுகிறார்கள். பலருக்கு கைகால்களிலும் ஒரே நடுக்கம். பலர் அளவுக்குமேல் கோப குணத்திற்கு ஆளாகி, கொலைகாரர்களாகக்கூட ஆகிவிடுகிறார்கள். அவர்களுடைய குடும்ப வாழ்க்கையே துயரங்கள் நிறைந்ததாகிவிடுகிறது. கணவனும் மனைவியும் விவாகரத்து செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலைகூட உண்டாகிவிடுகிறது. மதுப்பழக்கம் எந்த அளவுக்கு ஒரு மனிதனின் வாழ்க்கையையே அழித்துவிடுகிறது என்பதை நாம் பலரின் வாழ்க்கையிலும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இதற்கெல்லாம் காரணம்- ஜாதகத்திலிருக்கும் கிரகங்களின் சேர்க்கைதான்.

 

god



ஒருவர் ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்ந்து லக்னத்திலிருக்க, அந்த ஜாதகத்தில் 6-ல் பாவ கிரகம் இருந்தால், அவர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மது அருந்துவார். லக்னத்தில் சூரியன், சனி, சுக்கிரன் இருந்தால், அந்த மனிதர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவார். விரய ஸ்தானத்தில் சூரியன், ராகு, செவ்வாய் அல்லது சுக்கிரன், ராகு, செவ்வாய் அல்லது சனி, சூரியன், ராகு இருந்தால் அந்த ஜாதகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, அதே ஜாதகத்தில் லக்னாதிபதி பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது 2-க்கு அதிபதி 6-ஆம் அதிபதியுடன் லக்னத்தில் இருந்தால் அவர் மதுவுக்கு அடிமையானவராக இருப்பார். 10-க்கு அதிபதி 6-ல் லக்னாதிபதியுடன் இருந்தால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவார்.லக்னத்தில் சூரியன், கேது அல்லது சூரியன், ராகு, 7-ல் சனி இருந்தால் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். அத்துடன் சூதாடுபவராகவும் இருப்பார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உச்சமாக இருந்து, அந்த சந்திரனுக்கு ராகுவின் பார்வை இருந்தால், அதே ஜாதகத்தில் சூரியனை சனி பார்த்தால், அந்த ஜாதகர் ரகசியமாக மதுப்பழக்கம் உள்ளவராக இருப்பார்.

செவ்வாய், சனி, ராகு லக்னத்தில் அல்லது 8-ல் இருந்தால், ஜாதகர் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். ஜாதகத்தில் லக்னத்தில் புதன் இருந்து, அந்த புதன் அஸ்தமனமாகவோ நீசமாகவோ அல்லது விரய ஸ்தானாதிபதி நட்சத்திரத்திலோ இருந்தால், அவர் குடிப்பழக்கம் கொண்டவராக இருப்பார். ஒரு ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 6-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார். ஒரு மனிதரின் வீட்டின் தென்கிழக்கில் வாசல் இருந்து, வடகிழக்கில் சமையலறை இருந்தால் அவர் குடிகாரராக இருப்பார். அதே வீட்டில் அவரின் படுக்கையறை வடமேற்கில் இருந்து, அந்த அறைக்கு தென்கிழக்கு வாசல் இருந்து, அதில் அவர் மேற்கில் தலைவைத்துப் படுத்தால் அவர் முழு குடிகாரராக இருப்பார்.

 

god



ஒரு வீட்டிற்கு வடக்கு திசையில் வடகிழக்கில் வாசல் இருந்து, அந்த வீட்டிற்கு மத்தியப்பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அந்த வீட்டின் படுக்கையறை தென்கிழக்கில் இருந்தால், அவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருப்பார். ஒரு வீட்டிற்கு வடக்கு திசையில் வடமேற்கில் வாசல் இருந்தால், அந்த வீட்டின் தென்கிழக்கிலோ அல்லது வடகிழக்கிலோ படுக்கையறை இருந்தால், அவர் குடிகாரராக இருப்பார். அந்த பழக்கத்தால் தன் சொத்துகளைக்கூட அவர் இழப்பார்.

பரிகாரங்கள் 

மனதைக் கட்டுப்படுத்துவதற்கு தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் கிழக்குதிசை நோக்கி அமர்ந்து சிவபெருமானின் திருநாமத்தைக் கூறவேண்டும். சூரியன் உதயமான பிறகு, சூரியனுக்கு நீர் வார்க்க வேண்டும். தன் முன்னோர்களை வணங்குதல் சிறப்பானது. தெற்குதிசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும். கருப்பு, அடர்த்தியான ப்ரவுன், அடர்த்தியான நீலம் போன்ற வண்ணமுடைய ஆடைகளைத் தவிர்க்கவும். வீட்டில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் தூபம், தீபம் ஏற்ற வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும்போது, நீருடன் சிறிது கற்பூரம், கோமியம் ஆகியவற்றையும் கலந்து சுத்தம் செய்யவேண்டும். படுக்கையறையில் அடர்த்தியான பச்சை, நீலம், ப்ரவுன் ஆகிய வண்ணங்கள் இருக்கக் கூடாது. தினமும் சிவாலயம் சென்று, சிவலிங்கத்துக்கு நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். வீட்டில் ஸ்படிக லிங்கம் இருந்தால் அதற்கு தினமும் பூஜை செய்வது நற்பலன் தரும். மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால், ஒரு மனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வு வாழலாம்.
 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.