Auspicious Maha Shivratri; Fasting and benefits!

மனித மனம் மண், பொன், பெண் ஆகிய மூவாசைகளையும் சுற்றியே அலைபாய்கிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூன்று ஆசைகளே விளங்குகின்றன. ஒவ்வொருவரின் மனமும் செல்வத்தில்அந்தஸ்தில்புகழில் மற்றவர்களைக் காட்டிலும் தான் சிறந்து விளங்க வேண்டுமென்று போராடுகிறது. பிறக்கும் போதே ஒருவர் செல்வச் செழிப்பான பெற்றோருக்குபிறப்பதற்கும்ஏழ்மையில் வாடும் பெற்றோருக்குபிறப்பதற்கும் அவரவரின் ஊழ்வினையே காரணம். முன் ஜென்ம ஊழ்வினையை அறுக்க ஒவ்வொருவரும் பல வழிகளையும் தேடி அலைகிறார்கள்.

Advertisment

ஊழ்வினையிலிருந்து மீண்டு இறைவனை அடைய நம் முன்னோர்கள் பல்வேறு வழிகளை போதித்துள்ளார்கள். உலகிலுள்ள மதங்களில் எந்தவித கட்டுப்பாடுமில்லாமல்எந்தவகையில் பூஜித்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்னும் நம்பிக்கையுள்ள ஒரே மதம் இந்து மதம். கர்மவினையைத் தீர்த்து பிறவா நிலையடைய இந்து மதத்தில் நான்குவித உபாயங்கள் கூறப்பட்டுள்ளன.

Advertisment

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன்கோவில்களுக்குசென்று இறைவனைதுதித்துப் பாடுவது; மலர்மாலை தொடுப்பது;சந்தனம் அரைத்துக் கொடுப்பது போன்ற இறைப்பணிக்கு உதவுதல்.திருக்கோவிலில் மெழுகிடுதல்;தூய்மை செய்வது போன்ற உழவாரப்பணிகள் செய்து வணங்குதல் யாவும் சரியானவழியாகும்.

ஒருவர் தன் வாழ்நாளில் மிகுதியான சிரமத்தை அனுபவிப்பதற்கு ஜாதகத்திலுள்ள தோஷங்களே காரணம். அத்தகைய தோஷங்களை அழிக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான். தன்னை வணங்குபவர்களின் மனதிலிருக்கும் கெட்ட எண்ணக்கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட கர்மவினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக்கவலைகள், வறுமைநிலை போன்றவற்றை அறவே அழிப்பவர்.

ஒருவர் தனது மூன்று பிறவிகளில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்களம், இன்பம் என்று பொருள். ஒருவர் தன் வாழ்வில் வினைப்பயனை அழிக்க எட்டுவிதமான சிவ வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்கலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் மிகச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி திதியன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும். சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு;இன்பம் தருகின்ற இரவு என்று பொருள்.

குளிர்ந்த நீரில் குளித்து, நெற்றியில் திருநீறு பூசி, கடவுள் படம் முன் விளக்கேற்றி, சிவராத்திரி விரதத்தைத் தொடங்க வேண்டும். சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் ஒருவேளை மட்டுமே உணவுண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவை உண்ணாமல், சிவ சிந்தைனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம். பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக் கூடாது. வயதானவர்கள், நோயாளிகள் சமைக்காத உணவுகளான பழங்கள், அவல் சாப்பிடலாம்.

மகா சிவராத்திரியன்று முழுவதும் மௌன விரதமிருந்து, மனதுக்குள் பஞ்சாட்சரமாகிய ‘ஓம் நமசிவாய’மந்திரம் சொல்வதால் புண்ணியப்பலன் மிகுதியாகும். கோவில்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பகல் முழுவதும் உறங்காமலிருந்து விரதத்தை முடித்தால், சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசிபோல் உடனே சாம்பலாகும்.

வயதானவர்கள், குழந்தைகள், கோவிலுக்குச் செல்ல முடியாமல் உடல்நலக் குறைவோடு இருப்பவர்கள் சிவபுராணம், வில்வாஷ்டகம் படித்து, வில்வத்தால் சிவபூஜை செய்தால் அந்த நிமிடமே அவர்களுடைய அனைத்துப் பாவங்களும் நீங்கும். அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். பஞ்சமகா பாதகங்கள் அகலும்.

மகா சிவராத்திரியன்று விரதமிருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதியடைந்து முக்தியடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.

உணவுண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், குரோதம், கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். எல்லாருக்கும் இந்த மகா சிவராத்திரி விரதமிருக்கும் பாக்கியம் கிட்டாது. அவனருளாலே "அவன் தாள் வணங்கி' என்றபடி, அவன் (சிவன்) அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிட்டும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி