Skip to main content

ஒரு வடை போதும் ஆஞ்சநேயருக்கு !

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

ஆன்ம பலமும், ஆரோக்கிய வாழ்வும் தந்தருளும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குபவர் அஞ்சனையின் மைந்தன் அனுமன் ஆவார்.ஸ்ரீராமஜெயம் சொன்னாலே போதும்; அதனால் அகம் மகிழ்ந்து அருளும் கடவுள் ஆஞ்சனேயர். அவரது பரிபூரண அருளைப் பெறுவதற்கு சில எளிய வழிபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.வெண்ணெய்க் காப்பு இராமாயணப் போரில் இராவணன் இறந்தபோதிலும் இரண்டு அசுரர்கள் தப்பிவிட்டனர். தப்பிய அவர்கள் அரிய தவங்கள் புரிந்து பெரிய சக்திகளைப் பெற்று தேவர்களைத் தொந்தரவு செய்து வந்தார்கள். இந்த அசுரர்களின் தொல்லைகளைப் பொறுக்காத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.அவர்களை வதம்செய்வதற்காக அனுமனை அனுப்பினார் பகவான். அனுமன் புறப்படும் போது கிருஷ்ண பகவான் அனுமனிடம் வெண்ணெய்யைத் தந்து, ""இந்த வெண்ணெய் உருகுவதற்குள் அந்த அசுரர்களை வதம் செய்வாயாக'' என்று கூறியருளினார்.அனுமனும் அந்த கால அவகாசத்துக்குள் அசுரர்களை வதம்செய்து வாகைசூடினார். ஆகவே ஆஞ்சனேயருக்கு வெண்ணெய்க் காப்புசாற்றி வழிபட்டால், அந்த வெண்ணெய் உருகுவதற்குள் நமது துன்பங்கள் நம்மைவிட்டு உருகி ஓடிவிடும் என்பது ஆழமான நம்பிக்கையாகும்.
 

anjeneyar vada malai

வெற்றிலை மாலை
அசோக வனத்தில் இருந்த சீதாப்பிராட்டி யாரை ஸ்ரீராம தூதனாக ஆஞ்சனேயர் சென்று சந்தித்தபோது, ஒரு வெற்றிலையை எடுத்து அனுமனின் தலை உச்சியில் வைத்து, ""நீ என்றும் சிரஞ்சீவியாக வாழ்வாயாக'' என்று சீதாப்பிராட்டியார் ஆசிர்வாதம் செய்தாராம். இதனால் உச்சிகுளிர்ந்து மகிழ்ந்தாராம் ஆஞ்சனேயர். சீதாப்பிராட்டியார் ஆசிர்வதித்த வெற்றிலையை மாலையாகத் தொடுத்து அவருக்கு சாற்றி வழிபாடு செய்தால், ஆஞ்சனேயர் உச்சிகுளிர்ந்து நமக்கு அருள்புரிவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே வெற்றிலை மாலை சாற்றி அவரை வணங்கி அருள்பெறுவோம்.

வடைமாலை
ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் உளுந்தும் ஒன்று. ஸ்ரீராமபிரானோடு இணைந்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த தனது மகன் அனுமன் உடல் என்றும் களைப்பு அடையாதிருக்கும் வகையில் தாயார் அஞ்சனாதேவி தினமும் பெரிய உளுந்துவடை செய்து தருவாராம். ஒரு வடை சாப்பிட்டால் அன்று முழுவதும் ஆஞ்சனேயர் உடல் களைப்பின்றி உற்சாகமாக இருப்பாராம். எனவே ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் வாழ்வில் சோர்வின்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.

துளசிமாலை
துளசி இலை திருமாலுக்கு மிகவும் உகந்ததாகும். திருமால் எடுத்ததுதானே ஸ்ரீராமாவதாரம். எனவே ஸ்ரீராம பக்த அனுமனுக்கு துளசி இலையும் மிகவும் பிடித்த ஒன்றானது. துளசிமாலை சாற்றி அனுமனை வழிபட்டால் உடல் பிணிகள் அகன்று ஆரோக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

பழமாலை
பெரும்பாலும் வானரங்களுக்கு பழங்கள் என்றால் பிடிக்கும். வானர ரூபமான ஆஞ்சனேயருக்கும் பழங்கள் மிகவும் பிடித்த ஒன்று. எனவே பழங்களால் மாலை செய்து அனுமனுக்கு சாற்றி வணங்கினாலும் அவரது திருவருளை எளிதாகப் பெறமுடியும்!
 

Next Story

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். 

Next Story

''சிங்கங்களின் பெயரை மாற்றுங்கள்...'' - வினோத வழக்கில் தீர்ப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
 "Change the name of the lions...." -Judgment in a strange case

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் உள்ள ஆண் சிங்கத்திற்கும் பெண் சிங்கத்திற்கும் பெயர் மாற்ற வேண்டும் என்ற விஷ்வ இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 7 வயது ஆண் சிங்கம் ஒன்று பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் அக்பர். அதேபோல அங்கு இருக்கும் 6 வயது பெண் சிங்கத்தின் பெயர் சீதா. ஒரே இடத்தில் அக்பர், சீதா என பெயர் கொண்ட ஆண் பெண் சிங்கங்கள் இருப்பதற்கு விஷ்வ இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. வினோதமான முறையில் இதற்கு வழங்கும் தொடுக்கப்பட்டது. இராமாயண கதாபாத்திரமான சீதா இந்து மத வழக்கங்களில் கொண்டாடப்படுபவர். அதனால் அக்பர் என்ற பெயருடைய சிங்கத்துடன் சீதா என்ற பெயர் கொண்ட சிங்கத்தை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். எனவே சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விஷ்வ இந்து அமைப்பு.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற முதல் விசாரணையில், அன்பின் அடிப்படையில் சிங்கங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம், இதில் என்ன பிரச்சனை என நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு விஷ்வ இந்து அமைப்பு, இன்று சிங்கத்திற்கு பெயர் வைத்தது போல நாளை வேறு விலங்குகளுக்கு பெயர் வைக்கலாம். எனவே இதை தடுக்க வேண்டும். இது எங்களுடைய மனதை புண்படுத்தும் என பதில் அளிக்கப்பட்டது.

துர்கா பூஜையில் சிங்கம் இடம் பெற்றுள்ளது. பல இந்து கடவுள்களின் வாகனங்களாக சிங்கங்கள் உள்ளது. சிங்கங்கள் கடவுளாகவும் போற்றப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். கடவுள்களின் வாகனங்கள் தான் சிங்கங்கள். ஆனால் அவைகளை வணங்குவதற்காக தனியாக மந்திரங்கள் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் வைக்கப்பட்டது.

இந்த மனுவை பொதுநலமனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. குறிப்பிட்ட சிங்கங்களுக்கு பெயர் வைத்தது மேற்கு வங்க அரசோ அல்லது பூங்கா நிர்வாகமோ அல்ல, சிங்கங்களை ஏற்கனவே வைத்திருந்த திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் என மேற்குவங்க அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இந்த வழக்கில் நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ''நேற்று இரவு நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். கடவுள், சுதந்திர போராளிகள், தலைவர்களின் பெயர்களை ஒரு விலங்குக்கு வைக்கலாமா? ஒரு சிங்கத்திற்கு விவேகானந்தர் என்றோ, ராமகிருஷ்ண பரமஹமசர் என்றோ பெயர் வைப்பீர்களா? அதை உங்களால் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, மேற்குவங்க அரசு வழக்கறிஞரைப் பார்த்து, உங்கள் வீட்டில் செல்ல பிராணிகளின் பெயர்கள் என்ன என கேட்டார். அதற்கு அவர், டாஃபி, டஃபில், தியோ என பதிலளித்தார். எந்த சர்ச்சையும் ஏற்படாத வகையில் வீட்டு விலங்குகளுக்கு பெயர் வைத்துள்ள நீங்களே சிங்கங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதிகாரிகளிடம் கேளுங்கள் என நீதிபதி தெரிவித்தார். மேலும் தயவு செய்து எந்த விலங்குகளுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ தீர்க்கதரிசிகள், சுதந்திர போராளிகள் பெயர்களை  வைக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.