தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு மையத்தின் சார்பில் 5-வது சர்வதேச இளைஞர் மன்றத்தின் விழா நடைபெற்றது. ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து சார்லஸ் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் சமூக சேவகருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை அழைத்திருந்தனர். அந்த மாநாட்டில்கலந்து கொண்டார் ஜோஸ் சார்லஸ்.
அண்மைக்காலமாக பாஜகவுக்கு எதிரான அரசியலை புதுச்சேரியில்கட்டமைத்து வருகிறார் சார்லஸ். அதனால், எந்த மாதிரி அரசியலை அவர் பேசப்போகிறார் என்று மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் உற்று கவனித்திருக்கிறார்கள்.
மாநாட்டு விழாவில் பேசியதாவது,
'முல்லைக் கொடியைக் காத்தான் பாரி.
அந்தச் செயல் கருணையும், காவலும் கரம்கோர்த்ததன் அடையாளம். ஓர் அரசனாக தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்ததால் தான் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவர் நினைவில் நிற்கிறார். அவரின் செயலைப் போல இந்த உலகை நாம் பாதுகாக்க வேண்டும்.
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வளவு முக்கியமானதோ, நீராவி எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது எவ்வளவு முக்கியமானதோ அதற்கு இணையாக சமூக வலைதளங்களும், மெய்நிகர் நகரங்களும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவும் மனிதகுலத்தின் மிக கடினமான சிக்கல்களுக்கு தீர்வைத் தருகின்றன.
இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பாளர்கள், வேளாண் கண்டுபிடிப்பாளர்கள் வெறும் செல்போன் கேமரா மூலம் படமெடுத்து பயிர்களை தாக்கும் நோய்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில் பலரது வாழ்வாதாரங்களை காப்பாற்றி வருகின்றனர்.
குறிப்பாக நம்முடைய பகுப்பாய்வு சிந்தனை, சிக்கல்களை ஆக்கபூர்வமாக தீர்க்கும் திறன் மற்றும் தரவுகளை கையாளும் மேதமைமுக்கியம்.
எது சிதைக்கப்பட்டுள்ளதோ அதனை நோக்கி கேள்வி எழுப்பும் தார்மீக தெளிவு, எல்லைகளை கடந்த கற்பனைத் திறன், நியாயமான ஒன்றை உருவாக்கும் துணிச்சல் ஆகியவற்றை கொண்டவர்கள் தான் நீங்கள்.
சங்கக் கவிஞர் கபிலர் கூறியதுபோல்:
“அன்புடைமை ஆளும் உலகம்”
ஒன்றுமைப்பாட்டை நம் பலமாக்குவோம்.
சேவையை நம் பாதையாகக் கொள்வோம்.
ஒற்றுமையே நமது பலம் ;
சேவையே நமது முன்னேறும் பாதை
அதிதீவிரமாகவும், லட்சிய நோக்குடனும், இணைந்து செயலாற்றுவோம். இப்போதே தொடங்குவோம். வாருங்கள் இளைஞர்களே...