‘களவாணி’ பட பாணியில் நடந்த களேபரம்; காதலனுடன் காரில் தப்பிச் சென்ற இளம்பெண்!

104

புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்தவர் குமரேசன். அரியலூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், குமரேசனுக்கும் அரியலூரைச் சேர்ந்த அந்த செவிலியருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரித்து, பின்னர் காதலாக மாறியது. அதையடுத்து, இருவரும் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு, அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அவ்வப்போது இருவரும் சந்தித்து தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், குமரேசனும் அவரது காதலியும் திருச்சியில் சில நாட்கள் ஒன்றாகத் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்குத் தெரியவந்ததையடுத்து, அவர்கள் அவளைக் கடுமையாகக் கண்டித்தனர். மேலும், அவளது செல்போனைப் பறிமுதல் செய்து, அவளை சின்னப்பட்டாகாடு கிராமத்தில் உள்ள அவளது சகோதரியின் வீட்டில் தங்கவைத்தனர்.

இது குறித்து அந்தப் பெண் குமரேசனுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சின்னப்பட்டாகாடு கிராமத்திற்கு காரில் வந்த குமரேசன், அவளது சகோதரியின் வீட்டிற்குள் நுழைந்து, தனது காதலியை காரில் அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் குமரேசனுடன் காரில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Ariyalur boyfriend pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe