தனது தோழியின் உயிரை காப்பாற்ற முதலை ஒன்றுடன் சிறுமியை சண்டையிட்ட சம்பவம் ஜிம்பாப்வே நாட்டில் நடந்துள்ளது.

Advertisment

zimbabwe girl fought with crocodile to save her friend

ஜிம்பாப்வேயின் ஹராரே பகுதியில் உள்ள ஒரு ஆற்றில் ரெபேக்கா என்ற சிறுமி தனது 9 வயது தோழி முவானி உடன் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது முதலை ஒன்று முவானியை ஆற்றுக்குள் இழுத்து சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரெபேக்கா தனது தோழியை காப்பாற்ற அந்த முதலை மீது ஏறி குதித்துள்ளார். அந்த முதலையுடன் சண்டையில் ஈடுபட்ட ரெபேக்கா, அதன் கண்களை குத்தி கைகளால் தோண்டியிருக்கிறார். இதனால் வலி தாங்கமுடியாத அந்த முதலை முவானியை விட்டுவிட்டு மீண்டும் ஆற்றுக்குள் சென்றுள்ளது. தனது தோழியை காப்பாற்றிய சிறுமியின் வீரம் உலகம் முழுவதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisment