Skip to main content

தோழியை காப்பாற்ற முதலையுடன் சண்டையிட்ட சிறுமி...

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

தனது தோழியின் உயிரை காப்பாற்ற முதலை ஒன்றுடன் சிறுமியை சண்டையிட்ட சம்பவம் ஜிம்பாப்வே நாட்டில் நடந்துள்ளது.

 

zimbabwe girl fought with crocodile to save her friend

 

 

ஜிம்பாப்வேயின் ஹராரே பகுதியில் உள்ள ஒரு ஆற்றில் ரெபேக்கா என்ற சிறுமி தனது 9 வயது தோழி முவானி உடன் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது முதலை ஒன்று முவானியை ஆற்றுக்குள் இழுத்து சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரெபேக்கா தனது தோழியை காப்பாற்ற அந்த முதலை மீது ஏறி குதித்துள்ளார். அந்த முதலையுடன் சண்டையில் ஈடுபட்ட ரெபேக்கா, அதன் கண்களை குத்தி கைகளால் தோண்டியிருக்கிறார். இதனால் வலி தாங்கமுடியாத அந்த முதலை முவானியை விட்டுவிட்டு மீண்டும் ஆற்றுக்குள் சென்றுள்ளது. தனது தோழியை காப்பாற்றிய சிறுமியின் வீரம் உலகம் முழுவதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த ஆப்பிரிக்க நாடு!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

COVAXIN

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்திருந்தது. கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டபோது, மூன்றாம் கட்ட சோதனை முடிவதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டது என சர்ச்சை எழுந்தது.

 

இருப்பினும் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இந்தியப் பிரதமர் மோடியும் கடந்த ஒன்றாம் தேதி, கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்தநிலையில், பாரத் பயோ-டெக் நிறுவனமும், மூன்றாம் கட்ட ஆய்வகப் பரிசோதனையில், கோவாக்சின் தடுப்பூசி, 81 சதவீதம் செயல்திறன் கொண்டது எனத் தெரியவந்திருப்பதாக அறிவித்தது.

 

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜிம்பாப்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்தநாட்டிற்கு, இந்தியா விரைவில் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்பும் எனத் தெரிகிறது. கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்த முதல் ஆப்பிரிக்க நாடு ஜிம்பாப்வே என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

பெங்களூருவில் வானில் ஏற்பட்ட திடீர் சத்தம்... அலறியடித்து ஓடிய மக்கள்.. காரணம் என்ன..?

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

sonic boom in bengaluru

 

பெங்களூருவில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் சத்தத்தை நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெங்களூரில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வைட்ஃபீல்ட் பகுதிக்கு அருகில் ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது. நகரின் பல பகுதிகளிலும் இந்தச் சத்தம் உணரப்பட்டதால் அச்சமைடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். ஐந்து விநாடிகள் வரை இந்தச் சத்தத்தை உணரமுடிந்ததாக பெங்களூரு மக்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனை நிலநடுக்கம் என மக்கள் கூறிவந்த நிலையில், இது நிலநடுக்கம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் சத்தத்திற்கு விமானப்படை விமானங்கள் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 


இந்தச் சம்பவத்தில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என பெங்களூரு நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் செல்லும் போது ஏற்படும் 'சோனிக் பூம்' எனும் நிகழ்வின் காரணமாக இந்த மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக போர் விமானங்கள் ஒலியை விட வேகமாகப் பயணிக்கும் போது, காற்றின் அதிர்வால் மிகப்பெரிய சத்தம் ஏற்படுவதே 'சோனிக் பூம்' என அழைக்கப்படுகிறது. எனவே, இதுவும் அதுமாதிரியான ஒரு நிகழ்வாகவே இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதி செய்வதற்காக பெங்களூரு போலீஸார் விமானப்படை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இருப்பினும் மிகப்பெரிய சத்தத்தைக் கேட்டு நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பெங்களூருவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.