Skip to main content

இறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018

பிரேஸிலில் இறந்த பெண்ணின் உடலில் இருந்த கருப்பையை எடுத்து கருப்பை இல்லாத பெண்ணினுள் பொருத்தி குழந்தை பெறவைத்து மருத்துவ உலகமும் அறிவியலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளது. 

 

bb

 

 

உலகமையமாதல், காலநிலை மாற்றம், சத்தான உணவு இல்லை என எத்தனையோ காரணங்களால் இன்று பெண்களுக்கு கரு உருவாவதில் பிரச்சனைகள் இருக்கிறது என ஒரு பக்கம் சொல்லிக்கொண்டிருக்க. மறுபுறம் அறிவியல் மற்றும் மருத்துவ உலகம் அதனை எல்லாம் உடைத்து செயற்கையாக கருக்களை உருவாக்கி சாதித்துவருகிறது. 

 


பெண் கருப்பையில் பிரச்சனை என்றால் அதற்கு மாற்றாக வேறொரு பெண்ணின் வயிற்றில் குழந்தை பெறும் வழக்கம் தற்போது நிலவிவருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மருத்துவ உலகம் கருப்பை இல்லாத பெண்களுக்கு கருப்பை இருக்கும் வேறு ஒரு பெண் கருப்பையை தானம் செய்தால், அதனை கருப்பை இல்லாத பெண் வயிற்றில் பொருத்தி குழந்தை பெறவைத்தது மருத்துவ உலகம். ஆனால், இன்று மருத்தவ உலகம் அறிவியல் வளர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.

 


’மேயர் ரோக்கிட்டான்ஸ்கி கெஸ்ட் ஹவுசர் சிண்ட்ரோம்’ எனும் குறைபாடு உள்ள பெண்களுக்கு பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறக்கும் நிலை உள்ளது. இந்தக் குறைபாடு இன்று உலக அளவில் 4,500 பெண்களில் ஒருவருக்கு இருக்கிறது. பிரேஸில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்த 42 வயது பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டைகளை முதலில் அகற்றிவிட்டு. மேயர் ரோக்கிட்டான்ஸ்கி கெஸ்ட் ஹவுசர் சிண்ட்ரோம் குறைபாடுடன் இருந்த 32 வயது பெண்ணுக்கு பொருத்தியுள்ளனர். அதன் பின் ஆறு வாரங்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் எனும் இரத்த சுத்திகரிப்பு நிகழ்ந்துள்ளது. அதன் மூலம் அந்தப் பெண்ணுக்குள் பொருத்தப்பட்ட கருப்பையினை அவரின் உடல் ஏற்றுக்கொண்டது என்பதை அறிந்துகொண்டு மேலும் அவரின் கருப்பைக்குள் அவரின் கனவரின் விந்து அணுக்கள் செலுத்தப்பட்டு கருமுட்டை பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது. ஏழு மாதங்கள் கழித்து பாதுகாக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து குழந்தை உருவாகிவருவதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இறுதியாக அந்தப் பெண்ணுக்கு டிசம்பர் மாதம் 15, 2017-ம் ஆண்டு 2.5 கி.கீ எடையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

 

இதற்குமுன் இதுபோல் இறந்தவரின் கருப்பையைக்கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெண்களுக்கு பத்து முறை முயற்சித்தும் தோல்வியில் மட்டுமே முடிந்துள்ளது. மேலும் இதுவே முதல் முறையாக இறந்தவரின் கருப்பையைக்கொண்டு உயிருடன் இருக்கும் நபருக்கு பொருத்தி நல்ல ஆரோக்கியமானக் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் மருத்துவ உலகமும், அறிவியல் உலகமும் வளர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது. ஆனால் இதுவே மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளின் வளர்ச்சியின் முற்றுப்புள்ளி எனவும் நம்மால் கருதமுடியாது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.