Advertisment

உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ மெமரி கார்டு விற்பனைக்கு வந்தது...!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. எனப்படும் மெமரி கார்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கும் வந்துள்ளது.

Advertisment

sd card

ஸ்மார்ட்போன்களின் இன்டர்னல் மெமரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ மெமரி கார்டை தயாரித்து உள்ளது.

புதிய மைக்ரோ மெமரி கார்டு மூலம் மொபைலிலேயே அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. மைக்ரோ மெமரி கார்டினை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் மாநாட்டில் அறிமுகம் செய்தது. தற்போது இது அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ. 31,540 என்று இந்த கார்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதுதான் உலகிலேயே முதல் 1 டி.பி. மெமரி கார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

memory
இதையும் படியுங்கள்
Subscribe