அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. எனப்படும் மெமரி கார்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கும் வந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஸ்மார்ட்போன்களின் இன்டர்னல் மெமரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ மெமரி கார்டை தயாரித்து உள்ளது.
புதிய மைக்ரோ மெமரி கார்டு மூலம் மொபைலிலேயே அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. மைக்ரோ மெமரி கார்டினை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் மாநாட்டில் அறிமுகம் செய்தது. தற்போது இது அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ. 31,540 என்று இந்த கார்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதுதான் உலகிலேயே முதல் 1 டி.பி. மெமரி கார்டு என்பது குறிப்பிடத்தக்கது.