உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகலளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,00,007 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்த நிலையில் சுமார் 3.75 லட்சம் பேர் குணமடைந்தனர்.
கரோனா வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த நாடுகளில் அதிகம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.