உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,965 ஆக அதிகரித்துள்ளது. 165 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,98,214 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 81,734 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனாவால் இறப்போர் எண்ணிக்கை இத்தாலியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் சீனாவில் 3,237, இத்தாலியில் 2,503, ஈரானில் 988, ஸ்பெயினில் 533 பேர் உயிரிழந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தியாவில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 137 லிருந்து 143 ஆக அதிகரித்துள்ளது.