உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (24/03/2020) உயிரிழப்பு சுமார் 16 ஆயிரம் அளவில் இருந்த நிலையில் ஒரே நாளில் உலகளவில் சுமார் 2,000 பேர் இறந்தனர்.

world wide coronavirus update

குறிப்பாக கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. இந்த நாட்டில் கரோனாவால் புதிதாக 743 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அமெரிக்காவில் புதிதாக 222 பேர் இறந்ததால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் புதிதாக 680 பேர் இறந்ததால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,991 ஆக உயர்ந்தது. மேலும் சீனாவில் 3,277, ஈரானில் 1,934, பிரான்சில் 1,100 கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

190க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,413 ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேருக்கு கரோனா ஏற்பட்ட நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08,388 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது.