உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியது. அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்குக் கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கரோனாவால் ஒரே நாளில் சுமார் 247 பேர் உயிரிழந்துள்ளனர்.