உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,171 ஆக அதிகரித்துள்ளது. 162 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,82,598 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 79,881 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனாவால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி சீனாவில் 3,226, இத்தாலியில் 2,158, ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் உயிரிழந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்தியாவில் கரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா- 39, கேரளா- 24, ஹரியானா- 14, தெலங்கானா- 4, கர்நாடகா- 10, உத்தரப்பிரதேசம்- 13, ராஜஸ்தான்- 4, லடாக்- 3, காஷ்மீர்- 2, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, பஞ்சாப் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.